அவள் அவனுக்குத் துரோகமாய் விபசாரம்பண்ணி, அவனை விட்டு, யூதா தேசத்துப் பெத்லெகேம் ஊரிலிருக்கிற தன் தகப்பன் வீட்டுக்குப் போய், அங்கே நாலுமாதம் வரைக்கும் இருந்தாள்.
அவள் புருஷன் அவளோடே நலவு சொல்லவும், அவளைத் திரும்ப அழைத்து வரவும், இரண்டு கழுதைகளை ஆயத்தப்படுத்தி, தன் வேலைக்காரனைக் கூட்டிக் கொண்டு, அவளிடத்துக்குப் போனான்; அப்பொழுது அவள் அவனைத் தன் தகப்பன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனாள்; ஸ்திரீயின் தகப்பன் அவனைக் கண்டபோது சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டு,
நாலாம்நாள் காலமே அவர்கள் எழுந்திருந்தபோது, அவன் பிரயாணப்படுகையில், ஸ்திரீயின் தகப்பன் தன் மருமகனை நோக்கி: கொஞ்சம் அப்பம் புசித்து, உன் மனதைத் தேற்றிக்கொள், பிற்பாடு நீங்கள் போகலாம் என்றான்.
அவர்கள் உட்கார்ந்து, இருவரும்கூடப் புசித்துக் குடித்தார்கள்; ஸ்திரீயின் தகப்பன் அந்த மனுஷனைப் பார்த்து: நீ தயவுசெய்து, உன் இருதயம் மகிழ்ச்சியடைய இராத்திரிக்கும் இரு என்றான்.
அவர்கள் எபூசுக்குச் சமீபமாய் வருகையில், பொழுதுபோகிறதாயிருந்தது; அப்பொழுது வேலைக்காரன் தன் எஜமானை நோக்கி: எபூசியர் இருக்கிற இந்தப் பட்டணத்திற்குப் போய், அங்கே இராத்தங்கலாம் என்றான்.
அதற்கு அவன் எஜமான் நாம் வழியைவிட்டு, இஸ்ரவேல் புத்திரரில்லாத மறுஜாதியார் இருக்கிற பட்டணத்துக்குப் போகப்படாது; அப்பாலே கிபியா மட்டும் போவோம் என்று சொல்லி,
அந்தக் கிழவன் தன் கண்களை ஏறெடுத்துப் பட்டணத்து வீதியில் அந்தப் பிரயாணக்காரன் இருக்கக் கண்டு: எங்கே போகிறாய், எங்கேயிருந்து வந்தாய் என்று கேட்டான்.
அப்பொழுது அந்தக் கிழவன்: உனக்குச் சமாதானம்; உன் குறைவுகளெல்லாம் என்மேல் இருக்கட்டும்; வீதியிலேமாத்திரம் இராத்தங்கவேண்டாம் என்று சொல்லி,
அப்பொழுது வீட்டுக்காரனாகிய அந்த மனுஷன் வெளியே அவர்களிடத்தில் போய்: இப்படிச் செய்யவேண்டாம்; என் சகோதரரே, இப்படிப்பட்ட பொல்லாப்பைச் செய்யவேண்டாம்; அந்த மனுஷன் என் வீட்டிற்குள் வந்திருக்கையில், இப்படிக்கொத்த மதிகேட்டைச் செய்யீர்களாக.
விடியுங்காலத்திற்கு முன்னே அந்த ஸ்திரீ வந்து, வெளிச்சமாகுமட்டும் அங்கே தன் எஜமான் இருந்த வீட்டு வாசற்படியிலே விழுந்துகிடந்தாள்.
அவள் எஜமான் காலமே எழுந்திருந்து வீட்டின் கதவைத் திறந்து, தன் வழியே போகப் புறப்படுகிறபோது, இதோ, அவன் மறுமனையாட்டியாகிய ஸ்திரீ வீட்டுவாசலுக்கு முன்பாகத் தன் கைகளை வாசற்படியின்மேல் வைத்தவளாய்க் கிடந்தாள்.
அவன் தன் வீட்டுக்கு வந்தபோது, ஒரு கத்தியை எடுத்து, தன் மறுமனையாட்டியைப் பிடித்து, அவளை அவளுடைய எலும்புகளோடுங்கூடப் பன்னிரண்டு துண்டமாக்கி, இஸ்ரவேலின் எல்லைகளுக்கெல்லாம் அனுப்பினான்.
| Now as they | הֵמָּה֮ | hēmmāh | hay-MA |
| were making their hearts | מֵֽיטִיבִ֣ים | mêṭîbîm | may-tee-VEEM |
| merry, | אֶת | ʾet | et |
| לִבָּם֒ | libbām | lee-BAHM | |
| behold, | וְהִנֵּה֩ | wĕhinnēh | veh-hee-NAY |
| the men | אַנְשֵׁ֨י | ʾanšê | an-SHAY |
| of the city, | הָעִ֜יר | hāʿîr | ha-EER |
| certain | אַנְשֵׁ֣י | ʾanšê | an-SHAY |
| sons | בְנֵֽי | bĕnê | veh-NAY |
| of Belial, | בְלִיַּ֗עַל | bĕliyyaʿal | veh-lee-YA-al |
| beset | נָסַ֙בּוּ֙ | nāsabbû | na-SA-BOO |
| the house | אֶת | ʾet | et |
| round about, | הַבַּ֔יִת | habbayit | ha-BA-yeet |
| and beat | מִֽתְדַּפְּקִ֖ים | mitĕddappĕqîm | mee-teh-da-peh-KEEM |
| at | עַל | ʿal | al |
| the door, | הַדָּ֑לֶת | haddālet | ha-DA-let |
| and spake | וַיֹּֽאמְר֗וּ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO |
| to | אֶל | ʾel | el |
| the master | הָ֠אִישׁ | hāʾîš | HA-eesh |
| of the house, | בַּ֣עַל | baʿal | BA-al |
| the old | הַבַּ֤יִת | habbayit | ha-BA-yeet |
| man, | הַזָּקֵן֙ | hazzāqēn | ha-za-KANE |
| saying, | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
| Bring forth | הוֹצֵ֗א | hôṣēʾ | hoh-TSAY |
| אֶת | ʾet | et | |
| the man | הָאִ֛ישׁ | hāʾîš | ha-EESH |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| came | בָּ֥א | bāʾ | ba |
| into | אֶל | ʾel | el |
| thine house, | בֵּֽיתְךָ֖ | bêtĕkā | bay-teh-HA |
| that we may know | וְנֵֽדָעֶֽנּוּ׃ | wĕnēdāʿennû | veh-NAY-da-EH-noo |