1 ⁽அந்தோ! மக்கள் மிகுந்த மாநகர்␢ தனியளாய் அமர்ந்தனளே!␢ நாடுகளில் மாண்புடையாள்␢ விதவைபோல் ஆனாளே!␢ மாநிலங்களின் இளவரசி␢ அடிமைப்பெண் ஆயினளே!⁾

2 ⁽ஆறாத் துயருற்று␢ இரவில் அவள் அழுகின்றாள்;␢ அவளின் கன்னங்களில்␢ கண்ணீர் வடிகின்றது;␢ அவளின் காதலரில்␢ தேற்றுவார் எவரும் இல்லை;␢ அவளின் நண்பர் அனைவரும்␢ அவளுக்குத் துரோகம் செய்து␢ பகைவர் ஆயினர்.⁾

3 ⁽இன்னலுற்ற அடிமையான யூதா␢ நாடுகடத்தப்பட்டாள்!␢ வேற்றினத்தாருடன் தங்கியிருக்கும்␢ அவள் அமைதி பெறவில்லை!␢ துரத்தி வந்தோர் இடுக்குகளிடையே␢ அவளை வளைத்து பிடித்தனர்!⁾

4 ⁽விழாக்களுக்குச் செல்பவர்␢ யாருமில்லை;␢ சீயோனுக்குச் செல்லும் வழிகள்␢ புலம்புகின்றன;␢ அவள் நுழைவாயில்கள்␢ பாழடைந்துள்ளன;␢ அவள் குருக்கள்␢ பெருமூச்சு விடுகின்றனர்;␢ அவளின் கன்னிப் பெண்கள்␢ ஏங்கித் தவிக்கின்றனர்;␢ அவளுக்கு வாழ்க்கையே கசப்பாயிற்று.⁾

5 ⁽உயர் தலைவர் ஆயினர்␢ அவளின் எதிரிகள்!␢ வளமுடன் வாழ்கின்றனர்␢ அவளின் பகைவர்!␢ அவளுடைய பல்வேறு குற்றங்களுக்காக␢ ஆண்டவர் அவளைத்␢ துன்பத்திற்கு உட்படுத்தினார்!␢ அவள் குழந்தைகளை எதிரிகள்␢ கைதியாக்கிக்கொண்டு போயினர்.⁾

6 ⁽அனைத்து மேன்மையும்␢ மகள் சீயோனை விட்டு அகன்றது;␢ அவள் தலைவர்கள்␢ பசும்புல் காணா␢ மான்கள்போல் ஆயினர்.␢ துரத்தி வருவோர் முன் அவர்கள்␢ ஆற்றல் அற்றவர் ஆயினர்.⁾

7 ⁽எருசலேம், தன் துன்ப நாள்களிலும்,␢ அகதியாய் வாழ்ந்தபோதும்,␢ முன்னாள்களில் தனக்கிருந்த␢ நலன்கள் அனைத்தையும்␢ நினைவுகூர்ந்தாள்;␢ அவளின் மக்கள்␢ எதிரிகளின் கைகளில்␢ சிக்கினார்கள்;␢ அவளுக்கு உதவி செய்வார்␢ யாருமில்லை; அவளது வீழ்ச்சியைக் கண்ட எதிரிகள்␢ அவளை ஏளனம் செய்தனர்.⁾

8 ⁽ஏராளமாய்ப் பாவம் செய்தாள்␢ எருசலேம்;␢ அதனால் அவள்␢ கறைப்பட்டவள் ஆனாள்;␢ அவளை முன்பு மதித்த அனைவரும்␢ அவமதித்தனர்;␢ அவளுடைய திறந்த␢ மேனியைக் கண்டனர்;␢ அவளும் பெருமூச்சுவிட்டுப்␢ பின்னோக்கித் திரும்பினாள்.⁾

9 ⁽ஐயகோ! அவள் தீட்டு␢ அவள் ஆடையில் தெரிகின்றதே!␢ அவள் தனக்கு வரவிருப்பதை␢ நினைவில் கொள்ள வில்லை!␢ அவளது வீழ்ச்சி␢ அதிர்ச்சியைத் தருகின்றது!␢ அவளைத் தேற்றுவார்␢ யாரும் இல்லை!␢ “ஆண்டவரே␢ என் துன்பத்தைப் பாரும்!␢ பகைவன் பெருமை பெற்றுவிட்டான்!”⁾

10 ⁽ஒப்பற்ற அவளது விருப்பமான␢ பொருளனைத்தின்மீதும்␢ கைவைத்தான் பகைவன்!␢ வேற்றினத்தார்␢ உம் சபைக்கு வருவதைத்␢ தடை செய்தீர்!␢ அன்னார் அவளது␢ திருத்தலத்தில் நுழைவதை␢ அவள் பார்த்து நின்றாள்!⁾

11 ⁽உணவைத் தேடி␢ அவளின் மக்கள் அனைவரும்␢ ஓலமிடுகின்றனர்!␢ உயிரைக் காத்திடத்␢ தம் ஒப்பற்ற பொருள்களை␢ உணவுக்காகத் தந்தனர்!␢ “ஆண்டவரே என்னைக் கண்ணோக்கும்!␢ நான் எத்தகு இழிநிலைக்கு␢ உள்ளானேன் என்று பாரும்!”⁾

12 ⁽இவ்வழியாய்க் கடந்து செல்வோரே!␢ உங்களுக்குக் கவலை இல்லையா?␢ அனைவரும் உற்றுப் பாருங்கள்!␢ எனக்கு வந்துற்ற துயர்போல␢ வேறேதும் துயர் உண்டோ?␢ ஆண்டவர் தம் வெஞ்சின நாளில்␢ என்னைத் துன்பத்திற்கு உள்ளாக்கினார்.⁾

13 ⁽மேலிருந்து அவர் நெருப்பினை␢ என் எலும்புகளுக்குள்␢ இறங்கச் செய்தார்!␢ என் கால்களுக்கு வலை விரித்தார்!␢ அவர் என்னைப்␢ பின்னடையச் செய்தார்!␢ அவர் என்னைப் பாழாக்கினார்!␢ நாள் முழுவதும்␢ நான் சோர்ந்து போகிறேன்.⁾

14 ⁽என் குற்றங்கள் என்னும் நுகம்␢ அவர் கையால் பூட்டப்பட்டுள்ளது;␢ அவை பிணைக்கப்பட்டு,␢ என் கழுத்தைச் சுற்றிக் கொண்டன;␢ அவர் என் வலிமையைக்␢ குன்றச் செய்தார்;␢ நான் எழ இயலாதவாறு␢ என் தலைவர் என்னை␢ அவர்கள் கையில் ஒப்புவித்தார்.⁾

15 ⁽என் தலைவர் என்னிடமுள்ள␢ வலியோர் அனைவரையும்␢ அவமதித்தார்;␢ என் இளைஞரை அடித்து நொறுக்க␢ அவர் எனக்கு எதிராக␢ ஒரு கூட்டத்தை வரவழைத்தார்;␢ மகள் யூதாவாகிய கன்னியை,␢ ஆலையில் திராட்சைப் பழத்தைப்␢ பிழிவதுபோல,␢ என் தலைவர் கசக்கிப் பிழிந்தார்.⁾

16 ⁽இவற்றின் பொருட்டு␢ நான் புலம்புகின்றேன்;␢ என் இரு கண்களும்␢ கண்ணீரைப் பொழிகின்றன;␢ என் உயிரைக் காத்து␢ ஆறுதல் அளிப்பவர்␢ எனக்கு வெகு தொலையில் உள்ளார்;␢ பகைவன் வெற்றி கொண்டதால்␢ என் பிள்ளைகள்␢ பாழாய்ப் போயினர்.⁾

17 ⁽சீயோன் தன் கைகளை␢ உயர்த்துகின்றாள்;␢ அவளைத் தேற்றுவார்␢ யாருமில்லை;␢ சூழ்ந்து வாழ்வோர்␢ யாக்கோபுக்கு எதிரிகளாயிருக்குமாறு␢ ஆண்டவர் கட்டளையிட்டார்;␢ எருசலேம் அவர்களிடையே␢ தீட்டுப்பொருள் ஆயிற்று.⁾

18 ⁽ஆண்டவரோ நீதியுள்ளவர்;␢ நான் அவரது வாக்குக்கு எதிராகக்␢ கிளர்ச்சி செய்தேன்;␢ அனைத்து மக்களினங்களே,␢ செவிகொடுங்கள்;␢ என் துயரத்தைப் பாருங்கள்;␢ என் கன்னிப்பெண்களும்␢ இளைஞரும் நாடுகடத்தப்பட்டனர்.⁾

19 ⁽என் காதலர்களை அழைத்தேன்;␢ அவர்களோ என்னை ஏமாற்றினர்;␢ என் குருக்களும் பெரியோரும்␢ தங்கள் உயிரைக் காத்திட␢ உணவு தேடுகையில்,␢ நகரில் பசியால் மாண்டனர்.⁾

20 ⁽ஆண்டவரே,␢ என்னைக் கண்ணோக்கும்!␢ துயரில் நான் மூழ்கியுள்ளேன்!␢ நான் பெருங் கலகம் செய்துள்ளேன்!␢ என் குலை நடுங்குகின்றது!␢ என் இதயம் வெடிக்கின்றது!␢ வெளியே வாளுக்கு இரையாகினர்␢ என் பிள்ளைகள்!␢ வீட்டினுள்ளும் சாவு மயம்!⁾

21 ⁽நான் விடும் பெருமூச்சை␢ அவர்கள் கேட்டார்கள்;␢ என்னைத் தேற்றுவார்␢ யாரும் இல்லை;␢ என் எதிரிகள் அனைவரும்␢ எனக்கு நேரிட்ட தீங்கைப்பற்றிக்␢ கேள்வியுற்றனர்;␢ நீரே அதைச் செய்தீர் என␢ மகிழ்ச்சி அடைகின்றனர்!␢ நீர் அறிவித்த நாளை வரச் செய்யும்!␢ அவர்களும் என்னைப்போல்␢ ஆகட்டும்!⁾

22 ⁽அவர்கள் தீச்செயல்கள் அனைத்தும்␢ உம் திருமுன் வருவதாக!␢ என் அனைத்துக் குற்றங்களின் பொருட்டு,␢ நீர் என்னைத் தண்டித்தது போல்,␢ அவர்களையும் தண்டியும்!␢ விம்மல்கள் மிகப் பல!␢ என் இதயம் சோர்ந்துபோயிற்று!⁾

Lamentations 1 ERV IRV TRV