1 ⁽ஐயோ! மகள் சீயோனை ஆண்டவர்␢ தம் சினமென்னும் மேகத்தால் மூடினார்!␢ அவர் இஸ்ரயேலின் மேன்மையை␢ விண்ணினின்று␢ மண்ணுக்குத் தள்ளினார்!␢ அவரது சினத்தின் நாளில்␢ தம் கால்மணையை␢ மனத்தில் கொள்ளவில்லை!⁾

2 ⁽ஆண்டவர் யாக்கோபின்␢ அனைத்துக் குடியிருப்புகளையும்␢ இரக்கமின்றி அழித்தார்;␢ அவர் சீற்றமடைந்து␢ மகள் யூதாவின் அரண்களைத்␢ தகர்த்தார்;␢ அவற்றைத் தரைமட்டமாக்கினார்.␢ அவரது நாட்டையும்␢ அதன் தலைவர்களையும்␢ மேன்மை குலையச் செய்தார்.⁾

3 ⁽அவர் வெஞ்சினம் கொண்டு␢ இஸ்ரயேலின் கொம்பை␢ முற்றிலும் வெட்டிவிட்டார்;␢ பகைவன் வந்தபொழுது␢ தம் வலக்கையைப்␢ பின்புறம் மறைத்துக்கொண்டார்;␢ சூழ்ந்திருக்கும் யாவற்றையும்␢ எரிக்கும் தீப்பிழம்பென,␢ அவர் யாக்கோபின் மீது␢ பற்றியெரிந்தார்.⁾

4 ⁽எதிரி போலத்␢ தமது வில்லை நாணேற்றினார்;␢ பகைவன் போலத்␢ தம் வலக்கையை ஓங்கினார்;␢ கண்ணுக்கு இனியவை␢ அனைத்தையும் அழித்தார்;␢ மகள் சீயோனின் கூடாரத்தில்␢ தம் சினத்தை␢ நெருப்பெனக் கொட்டினார்.⁾

5 ⁽என் தலைவர் எதிரி போலானார்;␢ அவர் இஸ்ரயேலை அழித்தார்;␢ அதன் கோட்டை கொத்தளங்களைத்␢ தகர்த்தார்;␢ மகள் யூதாவின் அழுகையையும்␢ புலம்பலையும் மிகுதியாக்கினார்.⁾

6 ⁽தோட்டத்துப் பரணைப்␢ பிரித்தெறிவது போலத்␢ தம் கூடாரத்தையும் பிரித்தெறிந்தார்;␢ சபை கூடும் இடத்தையும் அழித்தார்;␢ சீயோனில் ஆண்டவர்␢ விழாக்களையும் ஓய்வுநாளையும்␢ மறக்கச் செய்தார்;␢ அவர் வெஞ்சினமுற்று␢ அரசனையும் குருவையும்␢ வெறுத்து ஒதுக்கினார்.⁾

7 ⁽என் தலைவர் தம் பலிபீடத்தை␢ வெறுத்தொதுக்கினார்.␢ தம் திருத்தூயகத்தைக் கைவிட்டார்;␢ அதன் கோட்டைச் சுவர்களைப்␢ பகைவரிடம் கையளித்தார்;␢ விழா நாளில் ஆரவாரம் செய்வதுபோல␢ ஆண்டவரின் இல்லத்தில்␢ அவர்கள் ஆரவாரம் செய்தனர்;⁾

8 ⁽மகள் சீயோனின் மதிலை அழிக்க␢ ஆண்டவர் திட்டமிட்டார்;␢ அதற்கென நூலினால் அளந்தார்;␢ அதை அழிப்பதை நிறுத்தத்␢ தம் கையை மடக்கிக் கொள்ளவில்லை;␢ அரணும் மதிலும் புலம்பச் செய்தார்;␢ அவை ஒருங்கே சரிந்து வீழ்ந்தன.⁾

9 ⁽அவளின் வாயிற்கதவுகள்␢ மண்ணில் புதைந்து கிடந்தன;␢ அதன் தாழ்களை␢ உடைத்துச் சிதறடித்தார்;␢ அவளின் அரசனும் தலைவர்களும்␢ வேற்றினத்தாரிடையே உள்ளனர்!␢ திருச்சட்டம் இல்லை;␢ அவளின் இறைவாக்கினரும்␢ ஆண்டவரின் காட்சி பெறவில்லை.⁾

10 ⁽மகள் சீயோனின் பெரியோர்␢ தரையில் மௌனமாய்␢ அமர்ந்துள்ளனர்;␢ அவர்கள் தங்கள் தலைமேல்␢ புழுதியைத் தூவிக் கொண்டுள்ளனர்;␢ சாக்கு உடை உடுத்தியுள்ளனர்;␢ எருசலேமின் கன்னிப் பெண்கள்␢ தங்கள் தலைகளைத்␢ தரை மட்டும் தாழ்த்தியுள்ளனர்.⁾

11 ⁽என் கண்கள் கண்ணீர் சொரிந்து␢ சோர்ந்துள்ளன!␢ என் குலை நடுங்குகின்றது!␢ என் துயரத்தால் என் ஈரல் வெடித்துத்␢ தரையில் சிதறுகின்றது!␢ என் மக்களாகிய மகள்␢ நசுக்கப் பட்டுள்ளாள்!␢ நகர் வீதிகளில்␢ குழந்தைகளும் மழலைகளும்␢ மயங்கிக் கிடக்கின்றனர்!⁾

12 ⁽அவர்கள் தங்கள் அன்னையரிடம்,␢ ‘அப்பம், திராட்சை இரசம் எங்கே?’␢ என்று கேட்கின்றனர்!␢ படுகாயமுற்றோரைப்போல,␢ நகர் வீதிகளில் அவர்கள்␢ மயங்கி வீழ்கின்றனர்!␢ தாய் மடியில்␢ உயிர்விட்டவர்போல் ஆகின்றனர்!⁾

13 ⁽மகளே! எருசலேம்!␢ உன் சார்பாக நான் என்ன சொல்வேன்?␢ உன்னை எதற்கு ஒப்பிடுவேன்?␢ மகள் சீயோனே!␢ கன்னிப் பெண்ணே!␢ யாருக்கு உன்னை இணையாக்கித்␢ தேற்றுவேன் உன்னை?␢ உன் காயம் கடலைப்போல்␢ விரிந்துள்ளதே!␢ உன்னைக் குணமாக்க␢ யாரால் முடியும்?⁾

14 ⁽உன் இறைவாக்கினர் உனக்காகப்␢ பொய்யும் புரட்டுமான␢ காட்சிகளைக் கண்டனர்;␢ நீ நாடுகடத்தப்பட இருப்பதைத்␢ தவிர்க்குமாறு,␢ உன் நெறிகேடுகளை அவர்கள்␢ உனக்கு எடுத்துச் சொல்லவில்லை;␢ அவர்கள் பொய்யையும்␢ அபத்தங்களையும் காட்சியாகக் கண்டு,␢ உனக்குப் பொய்வாக்கு உரைத்தனர்!⁾

15 ⁽அவ்வழியாய்க் கடந்து செல்வோர்␢ உன்னைப் பார்த்துக்␢ கைகொட்டிச் சிரித்தனர்!␢ மகள் எருசலேமை நோக்கித்␢ தலையை ஆட்டிச்␢ சீழ்க்கையடித்தனர்!␢ “அழகின் நிறைவும்␢ மண்ணுலகின் மகிழ்ச்சியுமாக இருந்த␢ மாநகர் இதுதானா?” என்றனர்.⁾

16 ⁽உன் எதிரிகள் அனைவரும்␢ உன்னை நோக்கிக்␢ கோணல்வாய் காட்டுகின்றனர்;␢ சீழ்க்கையடித்துப்␢ பற்களை நறநற வென்று␢ கடிக்கின்றனர்;␢ ‘நாம் அவளைப்␢ பாழாக்கினோம்’ என்றனர்.␢ ‘இந்நாளுக்காகவே␢ நாம் காத்திருந்தோம்;␢ இப்போதுதான் நம்மால்␢ அதைக் காணமுடிந்தது’ என்றனர்.⁾

17 ⁽ஆண்டவர்␢ தாம் திட்டமிட்டபடியே செய்தார்;␢ நெடுநாள்களுக்குமுன்␢ தாம் முன்னெச்சரிக்கை செய்தவாறு␢ செயல்பட்டார்;␢ ஈவிரக்கமின்றி␢ இடித்துத் தள்ளினார்;␢ உன் எதிரிகளை␢ மகிழ்ச்சியடையச் செய்தார்;␢ பகைவனின் ஆற்றலைப்␢ பெருகச் செய்தார்.⁾

18 ⁽அவர்களின் இதயம்␢ என் தலைவனை நோக்கிக்␢ கூக்குரலிடுகின்றது;␢ மகள் சீயோனின் மதிலே!␢ இரவும் பகலும் வெள்ளமெனக்␢ கண்ணீர் பொழி!␢ உனக்கு ஓய்வு வேண்டாம்!␢ கண்ணீர் விடாமல்␢ நீ இருக்க வேண்டாம்!⁾

19 ⁽எழு! இரவில் முதற் சாமத்தில்␢ குரலெழுப்பு!␢ உள்ளத்தில் உள்ளதை␢ என் தலைவர் திருமுன்␢ தண்ணீரைப் போல் ஊற்றிவிடு!␢ தெருமுனையில்␢ பசியால் மயங்கி விழும்␢ குழந்தைகளின் உயிருக்காக,␢ அவரை நோக்கி␢ உன் கைகளை உயர்த்து!⁾

20 ⁽கண்ணோக்கும் ஆண்டவரே!␢ எண்ணிப் பாரும்;␢ யாருக்கு இப்படிச்␢ செய்திருக்கின்றீர்?␢ பெண்கள் தங்கள்␢ கர்ப்பத்தின் கனிகளையே,␢ கைக்குழந்தைகளையே,␢ தின்ன வேண்டுமோ?␢ குருவும், இறைவாக்கினரும்␢ என் தலைவரின் திருத்தூயகத்தில்␢ கொல்லப்படவேண்டுமோ?⁾

21 ⁽வீதிகளின் புழுதியில்␢ சிறியோரும் பெரியோரும்␢ வீழ்ந்து கிடக்கின்றனர்!␢ என் கன்னியரும் காளையரும்␢ வாளால் வீழ்த்தப்பட்டனர்!␢ உமது சீற்றத்தின் நாளில்␢ ஈவிரக்கமின்றி␢ அவர்களைக் கொன்று குவித்தீர்!⁾

22 ⁽திருவிழாவுக்கு அழைப்பது போல,␢ எப்பக்கமும் எனக்கெதிராகப்␢ பேரச்சத்தை வரவழைத்தீர்!␢ ஆண்டவரது சீற்றத்தின் நாளில்␢ உயிர்தப்பிப் பிழைத்தவரோ␢ எஞ்சியவரோ எவரும் இல்லை!␢ நான் பேணி வளர்த்தவர்களை␢ என் எதிரி கொன்றழித்தான்!⁾

Lamentations 2 ERV IRV TRV