1 யூதாவின் அரசர்களான யோத்தாம், ஆகாசு, எசேக்கியா ஆகியவர்களின் காலத்தில் மோரசேத்தைச் சார்ந்த மீக்காவுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: அவர் சமாரியாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட காட்சி இதுவே:

2 ⁽மக்களினங்களே,␢ நீங்கள் அனைவரும் கேளுங்கள்;␢ நிலவுலகே, அதில் உள்ளவையே,␢ செவிகொடுங்கள்.␢ தலைவராகிய ஆண்டவர்␢ தம் திருக்கோவிலிருந்து␢ உங்களுக்கு எதிராகச்␢ சான்றுபகரப் போகிறார்.⁾

3 ⁽இதோ! ஆண்டவர்␢ தாம் தங்குமிடத்திலிருந்து␢ புறப்பட்டு வருகின்றார்;␢ அவர் இறங்கிவந்து␢ நிலவுலகின் மலையுச்சிகள்␢ மிதிபட நடப்பார்.⁾

4 ⁽நெருப்பின்முன் வைக்கப்பட்ட␢ மெழுகுபோலவும்,␢ பள்ளத்தாக்கில் பாய்ந்தோடும்␢ வெள்ளம்போலவும்,␢ அவர் காலடியில்␢ மலைகள் உருகிப்போகும்;␢ பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும்.⁾

5 ⁽யாக்கோபின் குற்றத்தை முன்னிட்டும்␢ இஸ்ரயேல் குடும்பத்தாரின்␢ பாவங்களை முன்னிட்டுமே␢ இவை எல்லாம் நேரிடும்.␢ யாக்கோபின் குற்றத்திற்குக்␢ காரணம் யாது?␢ சமாரியா அன்றோ!␢ யூதாவின் தொழுகைமேடுகளுக்குக்␢ காரணம் யாது?␢ எருசலேம் அன்றோ!⁾

6 ⁽ஆதலால், சமாரியாவைப்␢ பாழடைந்த மண்மேடாகவும்␢ திராட்சை நடும் தோட்டமாகவும்␢ செய்திடுவேன்;␢ அதன் கற்களைப்␢ பள்ளத்தாக்கில் உருட்டிவிட்டு,␢ அதன் அடித்தளங்கள்␢ வெளியிலே தெரியும்படி செய்வேன்.⁾

7 ⁽அதன் செதுக்குப் படிமங்கள் எல்லாம்␢ துகள் துகளாக நொறுக்கப்படும்;␢ அதன் பணயங்கள் எல்லாம்␢ நெருப்பினால் சுட்டெரிக்கப்படும்;␢ அதன் சிலைகளை எல்லாம்␢ உடைத்து கற்குவியல் ஆக்குவேன்;␢ ஏனெனில், விலைமகளுக்குரிய␢ பணயமாக அவை சேர்க்கப்பட்டன;␢ விலைமகளுக்குரிய பணயமாகவே␢ அவை போய்விடும்.⁾

8 ⁽இதை முன்னிட்டே␢ நான் ஓலமிட்டுக் கதறி அழுவேன்;␢ வெறுங்காலோடு␢ ஆடையின்றித் திரிவேன்;␢ குள்ளநரிகளைப்போல்␢ ஊளையிடுவேன்;␢ நெருப்புக் கோழிபோல் கதறி அழுவேன்.⁾

9 ⁽ஏனெனில், சமாரியாவின்␢ புண் ஆறாது;␢ யூதாவரையிலும் அது படர்ந்துவிட்டது;␢ என் மக்களின் வாயிலாம்␢ எருசலேமையும் வந்து எட்டியுள்ளது.⁾

10 ⁽காத்தில் இதை அறிவிக்கவேண்டாம்;␢ கதறியழவும் வேண்டாம்;␢ பெத்லயப்ராவில் புழுதியில்␢ விழுந்து புரளுங்கள்.⁾

11 ⁽சாபீரில் குடியிருப்போரே,␢ ஆடையின்றி மானக்கேடுற்று␢ அகன்று போங்கள்;␢ சானானில் குடியிருப்போரும்␢ வெளியே வருவதில்லை;␢ பெத்தேத்சலிலும் புலம்பல் எழும்பும்.␢ அங்கு உங்களுக்கு␢ அடைக்கலம் கிடைக்காது.⁾

12 ⁽மாரோத்தில் குடியிருப்போர்␢ நன்மை வரும் என␢ ஆவலோடு காத்திருக்கின்றனர்;␢ ஏனெனில், தீமை␢ ஆண்டவரிடம் இருந்து இறங்கி␢ எருசலேமின் வாயில்மேல் விழுந்தது.⁾

13 ⁽இலாக்கீசில் குடியிருப்போரே,␢ விரைந்தோடும் குதிரைகளைத்␢ தேரிலே பூட்டுங்கள்;␢ மகள் சீயோனின் பாவத்திற்கு␢ ஊற்று நீங்களே;␢ இஸ்ரயேலின் குற்றங்கள்␢ முதலில் காணப்பட்டது உங்களிடம்தான்.⁾

14 ⁽ஆதலால், மோரசேத்துகாத்துக்கு␢ நீ சீதனம் கொடுப்பாய்;␢ அக்சீபின் வீடுகள்␢ இஸ்ரயேல் அரசர்களை ஏமாற்றி விடும்.⁾

15 ⁽மாரேசாவில் குடியிருப்போரே,␢ கொள்ளைக்காரன் ஒருவன்␢ உங்கள்மேல்␢ திரும்பவும் வரும்படி செய்வேன்;␢ இஸ்ரயேலின் மேன்மை␢ அதுல்லாமில் ஒளிந்து கொள்ளும்.⁾

16 ⁽உங்கள் அருமைப்␢ பிள்ளைகளுக்காகத்␢ துக்கங் கொண்டாட␢ உங்கள் தலையை␢ மொட்டையடித்துக்கொள்ளுங்கள்;␢ கழுகைப்போல் முற்றிலும்␢ மொட்டையடித்துக் கொள்ளுங்கள்.␢ ஏனெனில், அவர்கள்␢ உங்களிடத்திலிருந்து பிரிக்கப்பட்டு␢ நாடுகடத்தப்படுவார்கள்.⁾

Micah 1 ERV IRV TRV