1 ⁽அப்பொழுது நான் கூறியது:␢ “யாக்கோபின் தலைவர்களே!␢ இஸ்ரயேலின் குடும்பத்தை␢ ஆள்பவர்களே,␢ நீதியை அறிவிப்பது␢ உங்கள் கடமை அன்றோ!⁾

2 ⁽நீங்களோ நன்மையை வெறுத்துத்␢ தீமையை நாடுகின்றீர்கள்;␢ என் மக்களின் தோலை␢ உயிரோடே உரித்து,␢ அவர்கள் எலும்புகளிலிருந்து␢ சதையைக் கிழித்தெடுக்கின்றீர்கள்;⁾

3 ⁽என் மக்களின் சதையைத்␢ தின்கின்றீர்கள்;␢ அவர்களின் தோலை␢ உரிக்கின்றீர்கள்;␢ அவர்களின் எலும்புகளை முறித்து,␢ சட்டியில் போடப்படும்␢ இறைச்சி போலவும்,␢ கொப்பரையில் கொட்டப்படும்␢ மாமிசம் போலவும்␢ துண்டு துண்டாக்குகின்றீர்கள்.⁾

4 ⁽அப்பொழுது நீங்கள்␢ ஆண்டவரை நோக்கிக்␢ கூக்குரலிடுவீர்கள்;␢ ஆனால் உங்களுக்கு அவர்␢ செவிசாய்க்கமாட்டார்.␢ அந்த நேரத்தில் அவர் தம் முகத்தை␢ உங்களிடம் இருந்து␢ மறைத்துக்கொள்வார்;␢ ஏனெனில், உங்களின் செயல்கள்␢ தீயனவாய் இருக்கின்றன.”⁾

5 ⁽இறைவாக்கினர்களைக் குறித்து␢ ஆண்டவர் கூறுவது இதுவே:␢ “அவர்கள் என் மக்களைத்␢ தவறான வழியில்␢ நடத்திச் செல்கின்றார்கள்.␢ வயிறார உண்ணக் கொடுத்தவரிடம்␢ ‘அமைதி உண்டாகுக!’ என␢ உரக்கச் சொல்கின்றார்கள்;␢ வாய்க்குத் தீனி போடாதவரிடம்␢ ‘புனிதப் போர் வரும்’ எனக்␢ கூறுகின்றார்கள்.”⁾

6 ⁽ஆதலால் “இறைவாக்கினரே,␢ திருக்காட்சி உங்களுக்குக்␢ கிடைக்காது;␢ முன்னுரைத்தல் இராது;␢ காரிருள் உங்களைக்␢ கவ்விக் கொள்ளும்;␢ இனி உங்கள்மேல்␢ கதிரவன் ஒளி படராது;␢ பகலும் உங்களுக்கு␢ இருளாய் இருக்கும்.”⁾

7 ⁽காட்சி காண்பவர்கள்␢ மானக்கேடு அடைவார்கள்;␢ முன்னுரைப்பவர்கள்␢ நாணிப்போவார்கள்;␢ அவர்கள் அனைவரும்␢ தங்கள் வாயைப்␢ பொத்திக் கொள்வார்கள்;␢ ஏனெனில் கடவுளிடமிருந்து␢ மறுமொழி ஏதும் வராது.⁾

8 ⁽ஆனால், நான் யாக்கோபுக்கு␢ அவன் குற்றத்தையும்,␢ இஸ்ரயேலுக்கு அவன் பாவத்தையும்␢ அறிவிக்க,␢ வல்லமையாலும்␢ ஆண்டவரின் ஆவியாலும்,␢ நீதியாலும் ஆற்றலாலும்␢ நிரப்பப்பட்டுள்ளேன்.⁾

9 ⁽யாக்கோபு குடும்பத்தாரின்␢ தலைவர்களே,␢ இஸ்ரயேல் குடும்பத்தை ஆள்பவர்களே,␢ இதைக் கேளுங்கள்;␢ நீங்கள் நீதியை அருவருக்கிறீர்கள்;␢ நேர்மையானவற்றைக்␢ கோணலாக்குகின்றீர்கள்.⁾

10 ⁽இரத்தப்பழியால் சீயோனையும்,␢ அநீதியால் எருசலேமையும்␢ கட்டியெழுப்புகின்றீர்கள்.⁾

11 ⁽அந்த நகரின் தலைவர்கள்␢ கையூட்டு வாங்கிக்கொண்டு␢ தீர்ப்பு வழங்குகிறார்கள்;␢ அதன் குருக்கள்␢ கூலிக்காகப் போதிக்கின்றனர்;␢ இறைவாக்கினர்␢ பணத்துக்காக முன்னுரைக்கின்றனர்;␢ ஆயினும் ஆண்டவரது துணையை நம்பி,␢ ‘ஆண்டவர் நம் நடுவில்␢ இருக்கின்றார் அல்லவா?␢ எனவே தீமை நம்மை அணுகாது’ என்று␢ சொல்லிக்கொள்கின்றார்கள்.⁾

12 ⁽ஆதலால், உங்களை முன்னிட்டுச்␢ சீயோன் வயல்வெளியைப்போல்␢ உழப்படும்;␢ எருசலேம் பாழடைந்த␢ மண் மேடாக மாறும்;␢ கோவில் உள்ள மலையோ␢ அடர்ந்த காடாகும்.”⁾

Micah 3 ERV IRV TRV