1 ⁽“இறுதி நாள்களில் ஆண்டவரின்␢ கோவில் அமைந்துள்ள மலை;␢ மலைகளுக்கெல்லாம் உயர்ந்ததாய்␢ நிலைநிறுத்தப்படும்;␢ குன்றுகளுக்கெல்லாம் மேலாய்␢ உயர்த்தப்படும்;␢ மக்களினங்கள் அதை நோக்கிச்␢ சாரைசாரையாய் வருவார்கள்.⁾

2 ⁽வேற்றினத்தார் பலர்␢ அங்கு வந்து சேர்ந்து,␢ ‘புறப்படுங்கள்,␢ ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்;␢ யாக்கோபின் கடவுளது␢ கோவிலுக்குப் போவோம்;␢ அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்;␢ நாமும் அவர் நெறிகளில் நடப்போம்’␢ என்பார்கள்;␢ ஏனெனில் சீயோனிலிருந்து␢ திருச்சட்டம் வெளிப்படும்;␢ எருசலேமிலிருந்து␢ ஆண்டவரின் வாக்கு புறப்படும்.⁾

3 ⁽அவரே பல மக்களினங்களுக்கு␢ இடையே உள்ள வழக்குகளைத்␢ தீர்த்துவைப்பார்;␢ தொலைநாடுகளிலும்␢ வலிமைமிக்க வேற்றினத்தார்க்கு␢ நீதி வழங்குவார்;␢ அவர்களோ தங்கள் வாள்களைக்␢ கலப்பைக் கொழுக்களாகவும்␢ தங்கள் ஈட்டிகளைக்␢ கருக்கரிவாள்களாகவும்␢ அடித்துக் கொள்வார்கள்;␢ ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம்␢ வாள் எடுக்காது;␢ அவர்கள் இனி ஒருபோதும்␢ போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள்.⁾

4 ⁽அவர்களுள் ஒவ்வொருவரும்␢ தம் திராட்சைத் தோட்டத்தின் நடுவிலும்,␢ அத்தி மரத்தின் அடியிலும்␢ அமர்ந்திருப்பர்;␢ அவர்களை அச்சுறுத்துவார்␢ எவருமில்லை;␢ ஏனெனில்,␢ படைகளின் ஆண்டவரது␢ திருவாய் இதை மொழிந்தது.⁾

5 ⁽மக்களினங்கள் யாவும்␢ தம் தெய்வத்தின் பெயரை வழிபடும்.␢ நாமோ, நம் கடவுளாகிய␢ ஆண்டவரின் பெயருக்கு␢ என்றென்றும் பணிந்திருப்போம்.⁾

6 ⁽அந்நாளில், “நான்␢ முடமாக்கப்பட்டோரை ஒன்று சேர்ப்பேன்;␢ விரட்டியடிக்கப்பட்டோரையும்␢ என்னால் தண்டிக்கப்பட்டோரையும்␢ ஒன்றுகூட்டுவேன்”␢ என்கிறார் ஆண்டவர்.⁾

7 ⁽முடமாக்கப்பட்டோரை␢ எஞ்சியோராய் ஆக்குவேன்;␢ விரட்டியடிக்கப்பட்டோரை␢ வலியதோர் இனமாக உருவாக்குவேன்;␢ அன்றுமுதல் என்றென்றும்␢ ஆண்டவராகிய நானே␢ சீயோன் மலைமேலிருந்து␢ அவர்கள்மேல் ஆட்சிபுரிவேன்.⁾

8 ⁽மந்தையின் காவல் மாடமே!␢ மகள் சீயோனின் குன்றே!␢ முன்னைய அரசுரிமை␢ உன்னை வந்துசேரும்;␢ மகள் எருசலேமின் அரசு␢ உன்னை வந்தடையும்.⁾

9 ⁽இப்போது நீ கூக்குரலிட்டுக்␢ கதறுவானேன்?␢ பேறுகாலப் பெண்ணைப்போல்␢ ஏன் வேதனைப்படுகின்றாய்?␢ அரசன் உன்னிடத்தில்␢ இல்லாமற் போனானோ?␢ உனக்கு அறிவு புகட்டுபவன்␢ அழிந்தொழிந்தானோ?⁾

10 ⁽மகளே சீயோன்!␢ பேறுகாலப் பெண்ணைப்போல␢ நீயும் புழுவாய்த் துடித்து வேதனைப்படு;␢ ஏனெனில், இப்பொழுதே␢ நீ நகரைவிட்டு வெளியேறுவாய்;␢ வயல்வெளிகளில் குடியிருப்பாய்;␢ பாபிலோனுக்குப் போவாய்;␢ அங்கிருந்து நீ விடுவிக்கப்படுவாய்;␢ உன் பகைவர் கையினின்றும்␢ ஆண்டவர் உன்னை மீட்டருள்வார்.⁾

11 ⁽இப்பொழுது, வேற்றினத்தார் பலர்␢ உனக்கு எதிராய்␢ ஒன்று கூடியிருக்கின்றார்கள்;␢ ‘சீயோன் தீட்டுப்படட்டும்;␢ அதன் வீழ்ச்சியை␢ நம் கண்கள் காணட்டும்’␢ என்று சொல்லுகின்றார்கள்.⁾

12 ⁽ஆனால் அவர்கள் ஆண்டவரின்␢ எண்ணங்களை அறியவில்லை.␢ அவரது திட்டத்தையும்␢ புரிந்து கொள்ளவில்லை.␢ ஏனெனில் புணையடிக்கும் களத்தில்␢ அரிக்கட்டுகளைச் சேர்ப்பதுபோல்␢ அவர் அவர்களைச்␢ சேர்த்து வைத்திருக்கின்றார்.⁾

13 ⁽மகள் சீயோனே, நீ எழுந்து புணையடி;␢ நான் உன் கொம்பை இரும்பாக மாற்றுவேன்;␢ உன்னுடைய குளம்புகளை␢ வெண்கலம் ஆக்குவேன்;␢ மக்களினங்கள் பலவற்றை␢ நீ நொறுக்கிப்போடுவாய்;␢ அவர்களிடம் கொள்ளையடித்தவற்றை␢ ஆண்டவருக்கு அர்ப்பணிப்பாய்;␢ அவர்களது செல்வங்களை␢ அனைத்துலகின் ஆண்டவரிடம்␢ ஒப்படைப்பாய்.”⁾

Micah 4 ERV IRV TRV