1 இஸ்ரயேலுக்கு ஆசி கூறுவதே ஆண்டவருக்கு விருப்பம் என்று பிலயாம் கண்டபோது, முன்பு செய்தது போன்று அவர் சகுனம் பார்க்கச் செல்லாமல், தம் முகத்தைப் பாலைநிலத்துக்கு நேரே திருப்பினார்.

2 பிலயாம் ஏறிட்டுப் பார்க்கவே குலம் குலமாகப் பாளையமிறங்கிய இஸ்ரயேலைக் கண்டார். அப்போது கடவுளின் ஆவி அவர் மேல் இறங்கியது.

3 ⁽அவர் திருஉரையாகக் கூறியது:␢ “பெகோர் புதல்வன் பிலயாமின்␢ திருமொழி!␢ கண் திறக்கப்பட்டவனின்␢ திருமொழி!⁾

4 ⁽கடவுளின் வார்த்தைகளைக்␢ கேட்கிறவனின்,␢ பேராற்றல் வாய்ந்தவரின்␢ காட்சியைக் கண்டு கீழே விழுந்தும்␢ கண் மூடாதவனின் திருமொழி!⁾

5 ⁽யாக்கோபே! உன் கூடாரங்களும்␢ இஸ்ரயேலே! உன் இருப்பிடங்களும்␢ எத்துணை அழகு வாய்ந்தவை!⁾

6 ⁽அவை விரிந்து கிடக்கும்␢ பள்ளத்தாக்குகள் போன்றவை;␢ ஆண்டவர் நட்ட அகில் மரங்கள்␢ போன்றவை; நீர் அருகிலுள்ள␢ கேதுரு மரங்கள் போன்றவை.⁾

7 ⁽அவனுடைய நீர்க்கால்களிலிருந்து␢ தண்ணீர் ஓடும்; அவனது விதை␢ நீர்த்திரளின்மேல் இருக்கும்;␢ அவனுடைய அரசன்␢ ஆகாகைவிடப் பெரியவன்;␢ அவனது அரசு உயர்த்தப்படும்.⁾

8 ⁽கடவுள் அவனை எகிப்திலிருந்து␢ கொண்டு வருகிறார்;␢ காண்டா மிருகத்தின் கொம்புகள்␢ அவனுக்குண்டு;␢ அவன் தன் எதிரிகளாகிய வேற்று␢ இனத்தவரை விழுங்கிவிடுவான்;␢ அவர்கள் எலும்புகளைத்␢ தூள் தூளாக நொறுக்குவான்;␢ அவர்களைத் தன் அம்புகளால்␢ ஊடுருவக் குத்துவான்;⁾

9 ⁽அவன் துயில் கொண்டான்; சிங்கம்␢ போன்றும் பெண் சிங்கம் போன்றும்␢ படுத்துக்கொண்டான்;␢ அவனை எழுப்பி விடுவோன் யார்?␢ உனக்கு ஆசி கூறுவோன்␢ ஆசி பெறுவான்;␢ எனவே உன்னைச் சபிப்போன்␢ சாபமடைவான்!”⁾⒫

10 எனவே,பிலயாம் மீது பாலாக்கு கடும் சினம் கொண்டு தன் கைகளைத் தட்டி பிலயாமிடம், “என் எதிரிகளைச் சபிக்கவே நான் உம்மை அழைத்தேன்; ஆனால், நீர் இம்மூன்று முறையும் அவர்களுக்கு ஆசி கூறியுள்ளீர்;

11 எனவே, உடனே உம் இடத்துக்கு ஓடிவிடும்; “உமக்கு உறுதியாக மரியாதை செய்வேன்” என்று சொல்லியிருந்தேன்; ஆண்டவரோ நீர் மரியாதை பெறாதபடி தடுத்துவிட்டார்” என்றான்.

12 பிலயாம் பாலாக்குக்கு மறுமொழியாகக் கூறியது: “நீர் என்னிடம் அனுப்பிய உம் தூதரிடம் நான் சொல்லவில்லையா?

13 பாலாக்கு வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும் ஆண்டவரின் வார்த்தையை மீறிச் சென்று என் விருப்பப்படி நன்மையோ தீமையோ செய்ய இயலாது; ஆண்டவர் பேசுவதையே நான் பேசுவேன் என்று சொல்லவில்லையா?”

14 இப்போது நான் என் மக்களிடம் போகிறேன்; வாரும், பிற்காலத்தில் இம்மக்கள் உம் மக்களுக்கு என்ன செய்வார்கள் என்று உமக்குத் தெரிவிப்பேன்” என்றார்.

15 ⁽அவர் திரு உரையாகக் கூறியது:␢ “பெகோரின் புதல்வன் பிலயாமின்␢ திருமொழி! கண்␢ திறக்கப்பட்டவனின் திருமொழி!⁾

16 ⁽கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு,␢ உன்னதர் அளித்த அறிவைப் பெற்று␢ பேராற்றலுடையவரின் காட்சி கண்டு␢ கீழே வீழ்ந்தும் கண்␢ மூடப்படாதவனின் திருமொழி!⁾

17 ⁽நான் அவரைக் காண்பேன்;␢ ஆனால், இப்போதன்று;␢ நான் அவரைப் பார்ப்பேன்;␢ ஆனால் அண்மையிலன்று;␢ யாக்கோபிலிருந்து விண்மீன்␢ ஒன்று உதிக்கும்!␢ இஸ்ரயேலிலிருந்து செங்கோல்␢ ஒன்று எழும்பும்!␢ அது மோவாபின் நெற்றிப்␢ பிறையை நசுக்கும்;␢ சேத்தின் புதல்வர்␢ அனைவரையும் அழித்துவிடும்.⁾

18 ⁽அவன் எதிரியான ஏதோம் பாழாகி␢ விடும்; சேயிரும் கைப்பற்றப்படும்;␢ இஸ்ரயேலோ வலிமையுடன்␢ செயல்படும்.⁾

19 ⁽யாக்கோபு ஆளுகை செய்வான்;␢ நகர்களில் எஞ்சியிருப்போர்␢ அழிக்கப்படுவர்.”⁾⒫

20 ⁽பின் அவர் அமலேக்கைப் பார்த்துத்␢ திருவுரையாகக் கூறியது:␢ “வேற்றினங்களில் முதன்மை␢ யானவன் அமலேக்கு;␢ இறுதியில் அவன் அழிந்துபோவான்.”⁾⒫

21 ⁽அடுத்துக் கேனியனை நோக்கித்␢ திருவுரையாக் கூறியது:␢ “உன் வாழ்விடம் உறுதியானது;␢ உன் கூடு பாறையில் அமைந்துள்ளது;⁾

22 ⁽ஆயினும், கேனியன் பாழாய்ப்␢ போவான்; அசீரியர் உன்னைச்␢ சிறைப் பிடித்துச் செல்ல␢ எவ்வளவு காலந்தான் ஆகும்?”⁾⒫

23 ⁽பின்னும் அவர் திருவுரையாகக் கூறியது:␢ அந்தோ, கடவுள் இதனைச்␢ செய்யும்போது எவன்தான்␢ பிழைப்பான்?⁾

24 ⁽கித்திம் தன் கப்பல்களால்␢ அசீரியாவையும் ஏபேரையும்␢ துன்புறுத்துவான்”⁾

25 பின்பு, பிலயாம் எழுந்து தம் இடத்துக்குத் திரும்பினார்; பாலாக்கும் தன்வழியே சென்றான்!

Numbers 24 ERV IRV TRV