1 ⁽ஆண்டவரே, ஏன் தொலைவில்␢ நிற்கின்றீர்?␢ தொல்லைமிகு நேரங்களில்␢ ஏன் மறைந்துகொள்கின்றீர்?⁾

2 ⁽பொல்லார் தம் இறுமாப்பினால்␢ எளியோரைக் கொடுமைப்படுத்துகின்றனர்;␢ அவர்கள் வகுத்த சதித்திட்டங்களில்␢ அவர்களே அகப்பட்டுக் கொள்வார்களாக.⁾

3 ⁽பொல்லார் தம் தீய நாட்டங்களில்␢ தற்பெருமை கொள்கின்றனர்;␢ பேராசையுடையோர் ஆண்டவரைப்␢ பழித்துப் புறக்கணிக்கின்றனர்.⁾

4 ⁽பொல்லார் செருக்கு உள்ளவராதலால்␢ அவரைத் தேடார்;␢ அவர்கள் எண்ணமெல்லாம்␢ ‛கடவுள் இல்லை!⁾

5 ⁽எம் வழிகள் என்றும் நிலைக்கும்’ என்பதே.␢ உம் தீர்ப்புகளோ மிக மேலானவை;␢ அவர்களின் அறிவுக்கு எட்டாதவை.␢ தம் பகைவர் அனைவரையும் பார்த்து␢ அவர்கள் நகைக்கின்றனர்.⁾

6 ⁽‛எவராலும் என்னை அசைக்க முடியாது;␢ எந்தத் தலைமுறையிலும்␢ எனக்குக் கேடு வராது’ என்று␢ அவர்கள் தமக்குள் சொல்லிக்கொள்வர்.⁾

7 ⁽அவர்களது வாய் சாபமும் கபடும்␢ கொடுமையும் நிறைந்தது;␢ அவர்களது நாவினடியில்␢ கேடும் தீங்கும் இருக்கின்றன.⁾

8 ⁽ஊர்களில் அவர்கள் ஒளிந்து␢ காத்திருக்கின்றனர்;␢ சூதறியாதவர்களை மறைவான இடங்களில்␢ கொலை செய்கின்றனர்;␢ திக்கற்றவர்களைப் பிடிப்பதிலேயே␢ அவர்கள் கண்ணாயிருக்கின்றனர்.⁾

9 ⁽குகையிலிருக்கும் சிங்கம்போல் அவர்கள்␢ மறைவில் பதுங்கியிருக்கின்றனர்;␢ எளியோரைப் பிடிப்பதற்காகவே␢ அவர்கள் பதுங்கியிருக்கின்றனர்;␢ தம் வலையில் சிக்கவைத்து␢ இழுத்துச் செல்கின்றனர்.⁾

10 ⁽அவர்கள் எளியோரை␢ நலிவுறச் செய்து நசுக்குகின்றனர்;␢ அவர்களது கொடிய வலிமையால்␢ ஏழைகள் வீழ்த்தப்படுகின்றனர்.⁾

11 ⁽‛இறைவன் மறந்துவிட்டார்;␢ தம் முகத்தை மூடிக்கொண்டார்;␢ என்றுமே எம்மைப் பார்க்க மாட்டார்’ என்று␢ பொல்லார் தமக்குள்␢ சொல்லிக் கொள்கின்றனர்.⁾

12 ⁽ஆண்டவரே, எழுந்தருளும்! § இறைவா, எமது ஆற்றலை வெளிப்படுத்தும்!␢ எளியோரை மறந்துவிடாதேயும்.⁾

13 ⁽பொல்லார் கடவுளைப் புறக்கணிப்பது ஏன்?␢ அவர் தம்மை விசாரணை␢ செய்யமாட்டாரென்று அவர்கள்␢ தமக்குள் சொல்லிக்கொள்வது ஏன்?⁾

14 ⁽ஆனால், உண்மையில் நீர் கவனிக்கின்றீர்;␢ கேட்டையும் துயரத்தையும் பார்த்து,␢ உதவி செய்யக் காத்திருக்கின்றீர்;␢ திக்கற்றவர் தம்மை␢ உம்மிடம் ஒப்படைக்கின்றனர்;␢ அனாதைக்கு நீரே துணை.⁾

15 ⁽பொல்லார் மற்றும் தீயோர் கைகளை␢ முறித்துவிடும்; அவர்களது␢ பொல்லாங்கைத் தேடிக் கண்டுபிடித்து,␢ அது அற்றுப்போகச் செய்யும்.⁾

16 ⁽ஆண்டவர் என்றுமுள அரசர்;␢ அவரது நிலத்தினின்று␢ வேற்றினத்தார் அகன்று விடுவர்.⁾

17 ⁽ஆண்டவரே, எளியோரின் விருப்பத்தை␢ நீர் நிறைவேற்றுகின்றீர்;␢ அவர்கள் உள்ளத்திற்கு ஊக்கம் அளித்து␢ அவர்களுக்குச் செவிசாய்க்கின்றீர்.⁾

18 ⁽நீர் அனாதைகளுக்கும்␢ ஒடுக்கப்படுகிறவர்களுக்கும்␢ நீதி வழங்குகின்றீர்;␢ மண்ணினின்று தோன்றிய மனிதர்␢ இனியும் அவர்களைத் துன்புறுத்த மாட்டார்.⁾

Psalm 10 ERV IRV TRV