1 ⁽என் புகழ்ச்சிக்குரிய இறைவா,␢ மௌனமாய் இராதேயும்.⁾

2 ⁽தீயோரும் வஞ்சனை செய்வோரும்␢ எனக்கெதிராய்த்␢ தம் வாயைத் திறந்துள்ளனர்;␢ எனக்கெதிராய் அவர்கள்␢ பொய்களைப் பேசியுள்ளனர்.⁾

3 ⁽பகைவரின் சொற்கள்␢ என்னைச் சூழ்ந்துள்ளன;␢ அவர்கள் காரணமின்றி␢ என்னைத் தாக்குகின்றனர்.⁾

4 ⁽நான் காட்டிய அன்புக்குக் கைம்மாறாக␢ என்மேல் குற்றம் சாட்டினர்;␢ நானோ அவர்களுக்காக மன்றாடினேன்.⁾

5 ⁽நன்மைக்குப் பதிலாக அவர்கள்␢ எனக்குத் தீமையே செய்தனர்;␢ அன்புக்குப் பதிலாக அவர்கள்␢ வெறுப்பையே காட்டினர்;⁾

6 ⁽அவர்கள் கூறியது:␢ “அவனுக்கு எதிராகத்␢ தீயவனை எழும்பச் செய்யும்!␢ ‘குற்றம் சாட்டுவோன்’␢ அவனது வலப்பக்கம் நிற்பானாக!⁾

7 ⁽நீதி விசாரணையின்போது␢ அவன் தண்டனை பெறட்டும்!␢ அவன் செய்யும் வேண்டுகோள்␢ குற்றமாகக் கருதப்படுவதாக!⁾

8 ⁽அவனது வாழ்நாள் சொற்பமாகட்டும்;␢ அவனது பதவியை வேறோருவன்␢ எடுத்துக் கொள்ளட்டும்!⁾

9 ⁽அவனுடைய பிள்ளைகள்␢ தந்தை இழந்தோர் ஆகட்டும்!␢ அவனுடைய மனைவி␢ கைம்பெண் ஆகட்டும்!⁾

10 ⁽அவனுடைய பிள்ளைகள்␢ அலைந்து திரிந்து பிச்சை எடுக்கட்டும்!␢ பாழான தங்கள் வீடுகளிலிருந்து␢ அவர்கள் விரட்டப்படட்டும்!⁾

11 ⁽அவனுக்கு உரியவற்றை எல்லாம்␢ கடன் கொடுத்தவன்␢ பறித்துக் கொள்ளட்டும்!␢ அவனது உழைப்பின் பயனை␢ அன்னியர் கொள்ளையடிக்கட்டும்!⁾

12 ⁽அவனுக்கு இரக்கங்காட்ட␢ ஒருவனும் இல்லாதிருக்கட்டும்!␢ தந்தையை இழந்த,␢ அவனுடைய பிள்ளைகள்மேல்␢ யாரும் இரங்காதிருக்கட்டும்!⁾

13 ⁽அவன் வழி மரபு அடியோடு அழியட்டும்!␢ அடுத்த தலைமுறைக்கு␢ அவர்களுடைய பெயர்␢ இல்லாது போகட்டும்!⁾

14 ⁽அவனுடைய மூதாதையரின் குற்றத்தை␢ ஆண்டவர் நினைவில் கொள்ளட்டும்!␢ அவனுடைய தாய் செய்த பாவத்தை␢ அவர் மன்னியாது இருக்கட்டும்!⁾

15 ⁽அவை என்றும்␢ ஆண்டவர் திருமுன்னே இருக்கட்டும்!␢ அவனது நினைவை பூவுலகினின்று␢ அடியோடு அவர் அகற்றட்டும்!⁾

16 ⁽ஏனெனில், அவன்␢ இரக்கம் காட்ட நினைக்கவில்லை;␢ எளியோரையும் வறியோரையும்␢ கொடுமைப்படுத்தினான்;␢ நெஞ்சம் நொறுங்குண்டோரைக்␢ கொலைசெய்யத் தேடினான்.⁾

17 ⁽சபிப்பதையே அவன் விரும்பினான்;␢ விரும்பிய அதுவே அவன்மீது விழட்டும்!␢ ஆசி வழங்குவதை அவன் விரும்பவில்லை;␢ ஆகவே அது அவனைவிட்டுத்␢ தொலைவில் செல்லட்டும்!⁾

18 ⁽சாபமே அவன் அணிந்த ஆடை;␢ தண்ணீரென அவன் உடலையும்␢ எண்ணெயென அவன் எலும்புகளையும்␢ அது நனைக்கட்டும்!⁾

19 ⁽அது அவனைப் போர்த்தும்␢ ஆடைபோல் இருக்கட்டும்!␢ நாள்தோறும் அவன் கட்டும்␢ கச்சைபோல் இருக்கட்டும்!⁾

20 ⁽என்னைக் குற்றம் சாட்டுவோருக்கும்,␢ எனக்கு எதிராகத்␢ தீயன பேசுவோருக்கும்␢ ஆண்டவர் அளிக்கும் கைம்மாறாக␢ அது இருப்பதாக!⁾

21 ⁽ஆனால், என் தலைவராகிய கடவுளே!␢ உமது பெயரை முன்னிட்டு␢ என் சார்பாகச் செயல்படும்!␢ உமது பேரன்பின் இனிமைபொருட்டு␢ என்னை மீட்டருளும்!⁾

22 ⁽நானோ எளியவன்; வறியவன்;␢ என் இதயம் என்னுள் புண்பட்டுள்ளது.⁾

23 ⁽மாலைநேர நிழலைப்போல்␢ நான் மறைந்து போகின்றேன்;␢ வெட்டுக் கிளியைப் போல நான்␢ காற்றில் அடித்துச் செல்லப்படுகின்றேன்.⁾

24 ⁽நோன்பினால் என் முழங்கால்கள்␢ தளர்வுறுகின்றன;␢ என் உடல் வலிமை இழந்து␢ மெலிந்து போகின்றது.⁾

25 ⁽நானோ அவர்களது␢ பழிச்சொல்லுக்கு உள்ளானேன்;␢ என்னைப் பார்க்கின்றோர்␢ தலையை ஆட்டுகின்றனர்.⁾

26 ⁽ஆண்டவரே! என் கடவுளே!␢ எனக்கு உதவியருளும்!␢ உமது பேரன்பிற்கேற்ப␢ மீட்டருளும்!⁾

27 ⁽இது உம் ஆற்றலால் நிகழ்ந்தது என␢ அவர்கள் அறியட்டும்!␢ ஆண்டவரே! இதைச் செய்தவர் நீரே என␢ அவர்கள் உணரட்டும்.⁾

28 ⁽அவர்கள் என்னைச் சபித்தாலும்,␢ நீர் எனக்கு ஆசி வழங்கும்!␢ எனக்கு எதிராக எழுவோர் இழிவுறட்டும்!␢ உம் ஊழியனாகிய நான் அகமகிழ்வேன்.⁾

29 ⁽என்னைக் குற்றஞ்சாட்டுவோர்க்கு␢ மானக்கேடு மேலாடை ஆகட்டும்!␢ அவர்களின் வெட்கம்␢ அவர்களுக்கு மேலங்கி ஆகட்டும்!⁾

30 ⁽என் நாவினால் ஆண்டவரைப்␢ பெரிதும் போற்றிடுவேன்;␢ பெரும் கூட்டத்திடையே␢ அவரைப் புகழ்ந்திடுவேன்.⁾

31 ⁽ஏனெனில், வறியோரின் வலப்பக்கம்␢ அவர் நிற்கின்றார்;␢ தண்டனைத் தீர்ப்பிடுவோரிடமிருந்து␢ அவர்களது உயிரைக் காக்க நிற்கின்றார்.⁾

Psalm 109 ERV IRV TRV