1 கர்த்தரை துதியுங்கள்! கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்கிற மனிதன் சந்தோஷமாயிருப்பான். அவன் தேவனுடைய கட்டளைகளை நேசிக்கிறான்.

2 அவன் சந்ததியினர் பூமியில் பெரியோராயிருப்பார்கள். நல்லோரின் சந்ததியினர் நிச்சயமாக ஆசீர்வதிக்கப்படுவார்கள்.

3 அம்மனிதனின் குடும்பம் செல்வத்தில் சிறந்திருக்கும். அவன் நன்மை என்றென்றைக்கும் தொடரும்.

4 தேவன் நல்லோருக்கு இருளில் பிரகாசிக்கும் ஒளியைப் போன்றவர். தேவன் நன்மையும், தயவும், இரக்கமுமுள்ளவர்.

5 தயவும், தயாளகுணமும் பெற்றிருப்பது ஒருவனுக்கு நல்லது. தனது வியாபாரத்தில் நியாயமாயிருப்பது ஒருவனுக்கு நல்லது.

6 அவன் விழமாட்டான், ஒரு நல்ல மனிதன் என்றென்றும் நினைவுக்கூரப்படுவான்.

7 அவன் தீய செய்திக்குப் பயப்படமாட்டான். அவன் கர்த்தரை நம்புகிறதால் தன்னம்பிக்கையோடிருப்பான்.

8 அவன் தன்னம்பிக்கையுள்ளவன். அவன் பயப்படமாட்டான். அவன் தனது பகைவர்களைத் தோற்கடிப்பான்.

9 அவன் ஏழைகளுக்கு இலவசமாகப் பொருள்களைக் கொடுக்கிறான். அவனது நன்மை என்றென்றைக்கும் தொடரும்.

10 தீயோர் இதைக்கண்டு கோபமடைவார்கள். அவர்கள் கோபத்தால் தங்கள் பற்களைக் கடிப்பார்கள். பின்பு அவர்கள் மறைந்து போவார்கள். தீயோர் அவர்கள் மிகவும் விரும்புவதைப் பெறுவதில்லை.

Psalm 112 ERV IRV TRV