1 இஸ்ரவேல் எகிப்தை விட்டு நீங்கினான். யாக்கோபு அந்நிய நாட்டை விட்டுச் சென்றான்.

2 யூதா தேவனுக்கு விஷேசமான ஜனங்களானார்கள். இஸ்ரவேல் அவருடைய இராஜ்யமானது.

3 செங்கடல் இதைக்கண்டு விலகி ஓடிற்று. யோர்தான் நதியோ திரும்பி ஓடிப்போயிற்று.

4 ஆட்டுக்கடாக்களைப்போல் மலைகள் நடனமாடின. ஆட்டுக்குட்டிகளைப் போல் மலைகள் நடனமாடின.

5 செங்கடலே, நீ ஏன் ஓடிப்போனாய்? யோர்தான் நதியே, நீ ஏன் திரும்பி ஓடிப் போனாய்?

6 மலைகளே, நீங்கள் ஏன் ஆட்டுக் கடாக்களைப்போல் நடனமாடினீர்கள்? மலைகளே, நீங்களும் ஏன் ஆட்டுக் குட்டிகளைப்போல் நடனமாடினீர்கள்?

7 யாக்கோபின் தேவனும் கர்த்தருமாகிய ஆண்டவருக்கு முன்னே பூமி நடுங்கி அதிர்ந்தது.

8 கன்மலையிலிருந்து தண்ணீர் பெருகி ஓடச் செய்தவர் தேவனேயாவார். கெட்டியான பாறையிலிருந்து நீரூற்றின் வெள்ளத்தைப் பாய்ந்தோடச் செய்தவர் தேவனேயாவார்.

Psalm 114 ERV IRV TRV