1 ⁽அல்லேலூயா!␢ ஆண்டவரின் பெயரைப் புகழுங்கள்;␢ ஆண்டவரின் ஊழியரே!␢ அவரைப் புகழுங்கள்.⁾

2 ⁽ஆண்டவரின் கோவிலுள் நிற்பவர்களே!␢ நம் கடவுளின்␢ கோவில் முற்றங்களில் உள்ளவர்களே!⁾

3 ⁽ஆண்டவரைப் புகழுங்கள்!␢ ஏனெனில், அவர் நல்லவர்;␢ அவரது பெயரைப் போற்றிப் பாடுங்கள்;␢ ஏனெனில், அவர் இனியவர்.⁾

4 ⁽ஆண்டவர் யாக்கோபைத்␢ தமக்கென்று தேர்ந்துகொண்டார்;␢ இஸ்ரயேலைத் தமக்குரிய␢ தனிச்சொத்தாகத் தெரிந்தெடுத்தார்.⁾

5 ⁽ஆண்டவர் மேன்மைமிக்கவர்␢ என்பதை அறிவேன்;␢ நம் ஆண்டவர் எல்லாத்␢ தெய்வங்களுக்கும் மேலானவர்␢ என்பதும் எனக்குத் தெரியும்.⁾

6 ⁽விண்ணிலும் மண்ணிலும் கடல்களிலும்␢ எல்லா ஆழ்பகுதிகளிலும்,␢ ஆண்டவர் தமக்கு விருப்பமான␢ யாவற்றையும் செய்கின்றார்.⁾

7 ⁽அவர் பூவுலகின்␢ கடையெல்லைகளிலிருந்து␢ மேகங்களை எழச்செய்கின்றார்.␢ மழை பெய்யும்படி␢ மின்னலை உண்டாக்குகின்றார்;␢ காற்றைத் தம் கிடங்குகளிலிருந்து␢ வெளிவரச் செய்கின்றார்.⁾

8 ⁽அவர் எகிப்தின்␢ தலைப்பேறுகளைத் தாக்கினார்;␢ மனிதர், கால்நடைகளின்␢ தலைப்பேறுகளை அழித்தார்.⁾

9 ⁽எகிப்து நாடே! உன் நடுவில்␢ பார்வோனையும் அவனுடைய␢ எல்லா ஊழியர்களையும் தண்டிக்குமாறு,␢ அடையாளங்களையும்␢ அருஞ்செயல்களையும்␢ அவர் நிகழச் செய்தார்.⁾

10 ⁽அவர் பல்வேறு இனத்தவரைத்␢ தாக்கினார்;␢ வலிமைவாய்ந்த மன்னர்களைக்␢ கொன்றார்.⁾

11 ⁽எமோரியரின் மன்னனாகிய சீகோனையும்␢ பாசானின் மன்னனாகிய ஓகையும்␢ கானானின் எல்லா அரசுகளையும்␢ அழித்தார்;⁾

12 ⁽அவர்கள் நாட்டைத்␢ தம் மக்களாகிய இஸ்ரயேலருக்கு␢ உரிமைச்சொத்தாக,␢ சொந்த உடைமையாகக் கொடுத்தார்.⁾

13 ⁽ஆண்டவரே! உமது பெயர் என்றுமுள்ளது;␢ ஆண்டவரே! உம்மைப்பற்றிய நினைவு␢ தலைமுறை தலைமுறையாக␢ நீடித்திருக்கும்.⁾

14 ⁽ஆண்டவர் தம் மக்களை␢ நீதியுடன் தீர்ப்பிடுவார்;␢ தம் அடியாருக்கு இரக்கம் காட்டுவார்.⁾

15 ⁽வேற்றினத்தார் வழிபடும் சிலைகள்␢ வெறும் வெள்ளியும் பொன்னுமே;␢ அவை மனிதரின் கையால்␢ செய்யப்பட்டவையே!⁾

16 ⁽அவற்றுக்கு வாய்கள் உண்டு;␢ ஆனால் அவை பேசுவதில்லை;␢ கண்கள் உண்டு;␢ ஆனால் அவை காண்பதில்லை;⁾

17 ⁽காதுகள் உண்டு;␢ ஆனால் அவை கேட்பதில்லை;␢ மூக்குகள் உண்டு;␢ ஆனால் அவை மூச்சுவிடுவதில்லை.⁾

18 ⁽அவற்றைச் செய்து வைப்பவரும்␢ அவற்றில் நம்பிக்கை வைக்கும் யாவரும்␢ அவற்றைப் போலவே இருப்பார்கள்.⁾

19 ⁽இஸ்ரயேல் குடும்பத்தாரே!␢ ஆண்டவரைப் போற்றுங்கள்!␢ ஆரோன் குடும்பத்தாரே!␢ ஆண்டவரைப் போற்றுங்கள்!⁾

20 ⁽லேவி குடும்பத்தாரே!␢ ஆண்டவரைப் போற்றுங்கள்!␢ அவருக்கு அஞ்சி நடப்போரே!␢ அவரைப் போற்றுங்கள்!⁾

21 ⁽எருசலேமைத் தம் உறைவிடமாகக்␢ கொண்டிருக்கும் ஆண்டவர்␢ போற்றப்படுவாராக;␢ சீயோனிலிருக்கும் ஆண்டவர்␢ போற்றப்படுவாராக. அல்லேலூயா!⁾

Psalm 135 ERV IRV TRV