1 ⁽ஆண்டவருக்கு நன்றி␢ செலுத்துங்கள்;␢ ஏனெனில் அவர் நல்லவர்.␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾

2 ⁽தெய்வங்களின் இறைவனுக்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾

3 ⁽தலைவர்களின் தலைவருக்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾

4 ⁽தாம் ஒருவராய் மாபெரும்␢ அருஞ்செயல்களைப் புரிபவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾

5 ⁽வான்வெளியை␢ மதிநுட்பத்தால் உருவாக்கியவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾

6 ⁽கடல்மீது மண்ணகத்தை விரித்தவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾

7 ⁽பெருஞ்சுடர்களை உருவாக்கியவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾

8 ⁽பகலை ஆள்வதற்கெனக்␢ கதிரவனை உருவாக்கியவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾

9 ⁽இரவை ஆள்வதற்கென␢ நிலாவையும் விண்மீன்களையும்␢ உருவாக்கியவர்க்கு நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾

10 ⁽எகிப்தின் தலைப்பேறுகளைக்␢ கொன்றழித்தவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾

11 ⁽அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரயேலை␢ வெளிக்கொணர்ந்தவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾

12 ⁽தோளின் வலிமையாலும்␢ ஓங்கிய புயத்தாலும் அதைச்␢ செய்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾

13 ⁽செங்கடலை இரண்டாகப் பிரித்தவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾

14 ⁽அதன் நடுவே இஸ்ரயேலை␢ நடத்திச் சென்றவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾

15 ⁽பார்வோனையும் அவன் படைகளையும்␢ செங்கடலில் மூழ்கடித்தவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾

16 ⁽பாலை நிலத்தில் தம் மக்களை␢ வழிநடத்தியவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾

17 ⁽மாபெரும் மன்னர்களை வெட்டி␢ வீழ்த்தியவர்க்கு நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾

18 ⁽வலிமைமிகு மன்னர்களைக்␢ கொன்றழித்தவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾

19 ⁽எமோரியரின் மன்னன் சீகோனைக்␢ கொன்றழித்தவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾

20 ⁽பாசானின் மன்னன் ஓகைக்␢ கொன்றழித்தவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾

21 ⁽அவர்களது நாட்டைத் தம் மக்களுக்கு␢ உரிமைச் சொத்தாக ஈந்தவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾

22 ⁽அதைத் தம் அடியார்களாகிய␢ இஸ்ரயேலர்க்கு␢ உரிமைச் சொத்தாக ஈந்தவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾

23 ⁽தாழ்வுற்றிருந்த நம்மை நினைவு␢ கூர்ந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾

24 ⁽நம் எதிரிகளினின்று நம்மை␢ விடுவித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾

25 ⁽உடல்கொண்ட அனைத்திற்கும்␢ உணவூட்டுபவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾

26 ⁽விண்ணுலகின் இறைவனுக்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾