1 ⁽பாபிலோனின் ஆறுகளருகே␢ அமர்ந்து, நாங்கள்␢ சீயோனை நினைத்து அழுதோம்.⁾

2 ⁽அங்கிருந்த அலரிச் செடிகள் மீது,␢ எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம்.⁾

3 ⁽ஏனெனில், அங்கு எங்களைச்␢ சிறையாக்கினோர்␢ எங்களைப் பாடும்படி கேட்டனர்;␢ எங்களைக் கடத்திச் சென்றோர்␢ எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு␢ கேட்டனர்.␢ ‛சீயோனின் பாடல்களை␢ எங்களுக்குப் பாடிக்காட்டுங்கள்’ என்றனர்.⁾

4 ⁽ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை␢ அன்னிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்?⁾

5 ⁽எருசலேமே! நான் உன்னை மறந்தால்␢ என் வலக்கை சூம்பிப்போவதாக!⁾

6 ⁽உன்னை நான் நினையாவிடில்,␢ எனது மகிழ்ச்சியின் மகுடமாக␢ நான் எருசலேமைக் கருதாவிடில்,␢ என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக!⁾

7 ⁽ஆண்டவரே!␢ ஏதோமின் புதல்வருக்கு எதிராக,␢ எருசலேம் வீழ்ந்த நாளை␢ நினைத்துக் கொள்ளும்!␢ ‘அதை இடியுங்கள்; அடியோடு␢ இடித்துக் தள்ளுங்கள்’ என்று␢ அவர்கள் எவ்வாறெல்லாம்␢ சொன்னார்கள்!⁾

8 ⁽பாழாக்கும் நகர் பாபிலோனே!␢ நீ எங்களுக்குச் செய்தவற்றை␢ உனக்கே திருப்பிச் செய்வோர்␢ பேறுபெற்றோர்!⁾

9 ⁽உன் குழந்தைகளைப் பிடித்து,␢ பாறையின்மேல் மோதி அடிப்போர்␢ பேறுபெற்றோர்!⁾

Psalm 137 ERV IRV TRV