1 ⁽‛கடவுள் இல்லை’ என அறிவிலிகள்␢ தம் உள்ளத்தில்␢ சொல்லிக் கொள்கின்றனர்;␢ அவர்கள் சீர்கெட்டு அருவருப்பான␢ செயல்களில் ஈடுபடுகின்றனர்.␢ நல்லது செய்வோர் எவருமே இல்லை.⁾

2 ⁽ஆண்டவர் விண்ணகத்தினின்று␢ மானிடரை உற்றுநோக்குகின்றார்;␢ மதிநுட்பமுள்ளோர், கடவுளை நாடுவோர்␢ எவராவது உண்டோ எனப் பார்க்கின்றார்.⁾

3 ⁽எல்லோரும் நெறிபிறழ்ந்தனர்;␢ ஒருமிக்கக் கெட்டுப்போயினர்;␢ நல்லது செய்வார் யாரும் இல்லை;␢ ஒருவர்கூட இல்லை.⁾

4 ⁽தீங்கிழைக்கும் யாவரும்␢ அறிவை இழந்துவிட்டார்களோ?␢ உணவை விழுங்குவதுபோல்␢ என் மக்களை விழுங்கப்பார்க்கிறார்களே!␢ அவர்கள் ஆண்டவரை நோக்கி␢ மன்றாடுவதுமில்லை.⁾

5 ⁽அவர்கள் அஞ்சி நடுங்குவர்;␢ ஏனெனில், கடவுள் நேர்மையாளரின்␢ வழிமரபோடு இருக்கின்றார்.⁾

6 ⁽எளியோரின் திட்டத்தை அவர்கள்␢ தோல்வியுறச் செய்கின்றார்கள்;␢ ஆனால், ஆண்டவர் எளியோர்க்கு␢ அடைக்கலமாய் இருக்கின்றார்.⁾

7 ⁽சீயோனிலிருந்து இஸ்ரயேலருக்கு␢ மீட்பு வருவதாக!␢ ஆண்டவர் தம் மக்களுக்கு␢ மீண்டும் வளமான வாழ்வை அருளும்போது,␢ யாக்கோபின் இனத்தார் களிகூர்வராக!␢ இஸ்ரயேல் மக்கள் அகமகிழ்வராக!⁾

Psalm 14 ERV IRV TRV