1 ⁽என் கடவுளே, என் அரசே!␢ உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்;␢ உமது பெயரை என்றும்␢ எப்பொழுதும் போற்றுவேன்.⁾

2 ⁽நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்;␢ உமது பெயரை என்றும்␢ எப்பொழுதும் புகழ்வேன்.⁾

3 ⁽ஆண்டவர் மாண்புமிக்கவர்;␢ பெரிதும் போற்றுதலுக்கும் உரியவர்;␢ அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது.⁾

4 ⁽ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு␢ உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்;␢ வல்லமைமிகு உம் செயல்களை␢ எடுத்துரைக்கும்.⁾

5 ⁽உமது மாண்பின்␢ மேன்மையையும் மாட்சியையும்␢ வியத்தகு உம் செயல்களையும்␢ நான் சிந்திப்பேன்.⁾

6 ⁽அச்சந்தரும் உம் செயல்களின்␢ வல்லமையைப்பற்றி␢ மக்கள் பேசுவார்கள்;␢ உமது மாண்பினை நான்␢ விரித்துரைப்பேன்,⁾

7 ⁽அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை␢ நினைந்துக் கொண்டாடுவார்கள்;␢ உமது நீதியை எண்ணி␢ ஆர்ப்பரித்துப் பாடுவார்கள்.⁾

8 ⁽ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்;␢ எளிதில் சினம் கொள்ளாதவர்;␢ பேரன்பு கொண்டவர்.⁾

9 ⁽ஆண்டவர் எல்லாருக்கும்␢ நன்மை செய்பவர்;␢ தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும்␢ இரக்கம் காட்டுபவர்.⁾

10 ⁽ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும்␢ உமக்கு நன்றி செலுத்தும்;␢ உம்முடைய அன்பர்கள்␢ உம்மைப் போற்றுவார்கள்.⁾

11 ⁽அவர்கள் உமது அரசின் மாட்சியை␢ அறிவிப்பார்கள்;␢ உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள்.⁾

12 ⁽மானிடர்க்கு␢ உம் வல்லமைச் செயல்களையும்␢ உமது அரசுக்குரிய␢ மாட்சியின் பேரொளியையும்␢ புலப்படுத்துவார்கள்.⁾

13 ⁽உமது அரசு␢ எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு;␢ உமது ஆளுகை␢ தலைமுறை தலைமுறையாக உள்ளது.␢ ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும்␢ உண்மையானவர்;␢ தம் செயல்கள் அனைத்திலும்␢ தூய்மையானவர்.⁾

14 ⁽தடுக்கி விழும் யாவரையும்␢ ஆண்டவர் தாங்குகின்றார்.␢ தாழ்த்தப்பட்ட யாவரையும்␢ தூக்கிவிடுகின்றார்.⁾

15 ⁽எல்லா உயிரினங்களின் கண்களும்␢ உம்மையே நோக்குகின்றன;␢ தக்க வேளையில் நீரே அவற்றிற்கு␢ உணவளிக்கின்றீர்.⁾

16 ⁽நீர் உமது கையைத் திறந்து␢ எல்லா உயிரினங்களின்␢ விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.⁾

17 ⁽ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும்␢ நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும்␢ இரக்கச் செயல்களே.⁾

18 ⁽தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்,␢ உண்மையாய்த் தம்மை நோக்கி␢ மன்றாடும் யாவருக்கும்,␢ ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.⁾

19 ⁽அவர் தமக்கு அஞ்சி நடப்போரின்␢ விருப்பத்தை நிறைவேற்றுவார்;␢ அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து␢ அவர்களைக் காப்பாற்றுவார்.⁾

20 ⁽ஆண்டவர் தம்மிடம் பற்றுக் கொள்ளும்␢ அனைவரையும் பாதுகாக்கின்றார்;␢ பொல்லார் அனைவரையும் அழிப்பார்.⁾

21 ⁽என் வாய் ஆண்டவரின் புகழை␢ அறிவிப்பதாக!␢ உடல்கொண்ட அனைத்தும்␢ அவரது திருப்பெயரை␢ என்றும் எப்பொழுதும் போற்றுவதாக!⁾

Psalm 145 ERV IRV TRV