1 ⁽அல்லேலூயா! என் நெஞ்சே!␢ நீ ஆண்டவரைப் போற்றிடு;⁾

2 ⁽நான் உயிரோடு உள்ளளவும்␢ ஆண்டவரைப் போற்றிடுவேன்;␢ என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப்␢ புகழ்ந்து பாடிடுவேன்.⁾

3 ⁽ஆட்சித் தலைவர்களை நம்பாதீர்கள்;␢ உன்னை மீட்க இயலாத␢ மானிட மக்களை நம்ப வேண்டாம்.⁾

4 ⁽அவர்களின் ஆவி பிரியும்போது␢ தாங்கள் தோன்றிய மண்ணுக்கே␢ அவர்கள் திரும்புவார்கள்;␢ அந்நாளில் அவர்களின் எண்ணங்கள்␢ அழிந்துபோம்.⁾

5 ⁽யாக்கோபின் இறைவனைத்␢ தம் துணையாகக் கொண்டிருப்போர்␢ பேறுபெற்றோர்;␢ தம் கடவுளாகிய ஆண்டவரையே␢ நம்பியிருப்போர் பேறுபெற்றோர்.⁾

6 ⁽அவரே விண்ணையும் மண்ணையும்␢ கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும்␢ உருவாக்கியவர்;␢ என்றென்றும் நம்பிக்கைக்கு␢ உரியவராய் இருப்பவரும் அவரே!⁾

7 ⁽ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான␢ நீதியை நிலைநாட்டுகின்றார்;␢ பசித்திருப்போர்க்கு␢ உணவளிக்கின்றார்;␢ சிறைப்பட்டோர்க்கு␢ விடுதலை அளிக்கின்றார்.⁾

8 ⁽ஆண்டவர் பார்வையற்றோரின்␢ கண்களைத் திறக்கின்றார்;␢ தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்;␢ நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.⁾

9 ⁽ஆண்டவர் அயல் நாட்டினரைப்␢ பாதுகாக்கின்றார்;␢ அனாதைப் பிள்ளைகளையும்␢ கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்;␢ ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக்␢ கவிழ்த்துவிடுகின்றார்.⁾

10 ⁽சீயோனே! உன் கடவுள், என்றென்றும்,␢ எல்லாத் தலைமுறைகளுக்கும்␢ ஆட்சி செய்வார். அல்லேலூயா!⁾

Psalm 146 ERV IRV TRV