1 கர்த்தரைத் துதியுங்கள். கர்த்தர் செய்த புதிய காரியங்களுக்காக ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்! அவரைப் பின்பற்றுவோர் ஒருமித்துக் கூடும் சபையில் அவரைத் துதித்துப்பாடுங்கள்.

2 தங்களைப் படைத்தவரோடு இஸ்ரவேல் களிப்படைவார்களாக. சீயோனின் ஜனங்கள் அவர்களின் அரசரோடு மகிழ்ந்து களிப்பார்களாக.

3 தம்புருக்களையும் வீணைகளையும் மீட்டுவதோடு ஆடிப்பாடி அந்த ஜனங்கள் தேவனைத் துதிக்கட்டும்.

4 கர்த்தர் அவரது ஜனங்களோடு மகிழ்ச்சியாயிருக்கிறார். அவரது எளிய ஜனங்களுக்கு தேவன் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார். அவர் அவர்களை மீட்டார்!

5 தேவனைப் பின்பற்றுவோரே, உங்களது வெற்றியால் மகிழ்ந்து களிப்படையுங்கள்! படுக்கைக்குப் போன பின்னரும் மகிழ்ச்சியாயிருங்கள்.

6 ஜனங்கள் தேவனைத் துதித்துக் குரலெழுப்பட்டும். அவர்களது கைகளில் வாள்களை ஏந்தட்டும்.

7 அவர்கள் போய் பகைவர்களைத் தண்டிக்கட்டும். அந்த ஜனங்களிடம் சென்று அவர்களைத் தண்டிக்கட்டும்.

8 தேவனுடைய ஜனங்கள் அந்த அரசர்களுக்கும் அங்குள்ள முக்கியமான ஜனங்களுக்கும் விலங்குகளைப் பூட்டுவார்கள்.

9 தேவன் கட்டளையிட்டபடி தேவனுடைய ஜனங்கள் அவர்களைத் தண்டிப்பார்கள். தேவனைப் பின்பற்றுவோர் எல்லோரும் அவரை மகிமைப்படுத்துவார்கள். கர்த்தரைத் துதியுங்கள்!

Psalm 149 ERV IRV TRV