1 ⁽ஆண்டவரே, உம் கூடாரத்தில்␢ தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?␢ உம் திருமலையில் குடியிருப்பவர் யார்?⁾

2 ⁽மாசற்றவராய் நடப்போரே! —␢ இன்னோர் நேரியவற்றைச் செய்வர்;␢ உளமார உண்மை பேசுபவர்;⁾

3 ⁽தம் நாவினால் புறங்கூறார்;␢ தம் தோழருக்குத் தீங்கிழையார்;␢ தம் அடுத்தவரைப் பழித்துரையார்.⁾

4 ⁽நெறிதவறி நடப்போரை␢ இழிவாகக் கருதுவர்;␢ ஆண்டவருக்கு அஞ்சுவோரை␢ உயர்வாக மதிப்பர்;␢ தமக்குத் துன்பம் வந்தாலும்,␢ கொடுத்த வாக்குறுதியை மீறார்;⁾

5 ⁽தம் பணத்தை வட்டிக்குக் கொடார்;␢ மாசற்றவருக்கு எதிராகக்␢ கையூட்டுப் பெறார்; —␢ இவ்வாறு நடப்போர்␢ என்றும் நிலைத்திருப்பர்.⁾

Psalm 15 ERV IRV TRV