1 ⁽இறைவா, என்னைக் காத்தருளும்;␢ உம்மிடம் நான் அடைக்கலம்␢ புகுந்துள்ளேன்.⁾

2 ⁽நான் ஆண்டவரிடம் ‛நீரே என் தலைவர்;␢ உம்மையன்றி வேறு செல்வம்␢ எனக்கு இல்லை’ என்று சொன்னேன்.⁾

3 ₍பூவுலகில் உள்ள தூயோர் § எவ்வளவோ உயர்ந்தோர்!␢ அவர்களோடு இருப்பதே எனக்குப் பேரின்பம்.₎

4 ⁽வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றுவோர்␢ தங்கள் துன்பங்களைப்␢ பெருக்கிக்கொள்வர்;␢ அவற்றுக்குச் செலுத்தப்படும்␢ இரத்தப் பலிகளில்␢ நான் கலந்து கொள்ளேன்;␢ அவற்றின் பெயரைக்கூட␢ நாவினால் உச்சரியேன்.⁾

5 ⁽ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து;␢ அவரே என் கிண்ணம்;␢ எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே;⁾

6 ⁽இனிமையான நிலங்கள்␢ எனக்குப் பாகமாகக் கிடைத்தன;␢ உண்மையாகவே என் உரிமைச் சொத்து␢ வளமானதே.⁾

7 ⁽எனக்கு அறிவுரை வழங்கும்␢ ஆண்டவரைப் போற்றுகின்றேன்;␢ இரவில்கூட என் மனச்சான்று␢ என்னை எச்சரிக்கின்றது.⁾

8 ⁽ஆண்டவரை எப்போதும்␢ என் கண்முன் வைத்துள்ளேன்;␢ அவர் என் வலப்பக்கம் உள்ளார்;␢ எனவே, நான் அசைவுறேன்.⁾

9 ⁽என் இதயம் அக்களிக்கின்றது;␢ என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது;␢ என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.⁾

10 ⁽ஏனெனில், என்னைப்␢ பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்;␢ உம் அன்பனைப் படுகுழியைக்␢ காண விடமாட்டீர்.⁾

11 ⁽வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்;␢ உமது முன்னிலையில் எனக்கு␢ நிறைவான மகிழ்ச்சி உண்டு;␢ உமது வலப்பக்கத்தில்␢ எப்போதும் பேரின்பம் உண்டு.⁾

Psalm 16 ERV IRV TRV