1 ⁽அவர் உரைத்தது:␢ என் ஆற்றலாகிய ஆண்டவரே!␢ உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.⁾

2 ⁽ஆண்டவர் என் கற்பாறை;␢ என் கோட்டை; என் மீட்பர்; என் இறைவன்;␢ நான் புகலிடம் தேடும் மலை அவரே;␢ என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும்␢ வல்லமை, என் அரண்.⁾

3 ⁽போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி␢ நான் மன்றாடினேன்;␢ என் எதிரிகளிடமிருந்து நான்␢ மீட்கப்பட்டேன்.⁾

4 ⁽சாவின் கயிறுகள் என்னை இறுக்கின;␢ அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன.⁾

5 ⁽பாதாளக் கயிறுகள் என்னைச்␢ சுற்றி இறுக்கின;␢ சாவின் கண்ணிகள் என்னைச்␢ சிக்க வைத்தன.⁾

6 ⁽என் நெருக்கடிவேளையில்␢ நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்;␢ என் கடவுளை நோக்கிக் கதறினேன்;␢ தமது கோவிலினின்று␢ அவர் என் குரலைக் கேட்டார்;␢ என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது.⁾

7 ⁽அப்பொழுது, மண்ணுலகம்␢ அசைந்து அதிர்ந்தது;␢ மலைகளின் அடித்தளங்கள் கிடுகிடுத்தன;␢ அவர்தம் கடுஞ்சினத்தால்␢ அவை நடுநடுங்கின.⁾

8 ⁽அவரது நாசியினின்று புகை கிளம்பிற்று;␢ அவரது வாயினின்று␢ எரித்தழிக்கும் தீ மூண்டது;␢ அவரிடமிருந்து நெருப்பக்கனல் § வெளிப்பட்டது.⁾

9 ⁽வானைத் தாழ்த்தி அவர் கீழிறங்கினார்;␢ கார் முகில் அவரது காலடியில் இருந்தது.⁾

10 ⁽கெருபுமீது அவர் ஏறிப் பறந்து வந்தார்;␢ காற்றை இறக்கைகளாகக் கொண்டு␢ விரைந்து வந்தார்.⁾

11 ⁽காரிருளைத் தமக்கு அவர்␢ மூடுதிரை ஆக்கிக்கொண்டார்;␢ நீர்கொண்ட முகிலைத் தமக்குக்கூடாரம் ஆக்கிக்கொண்டார்.⁾

12 ⁽அவர்தம் திருமுன்னின் பேரொளியில்,␢ மேகங்கள் கல் மழையையும்␢ நெருப்புக் கனலையும் பொழிந்தன.⁾

13 ⁽ஆண்டவர் வானங்களில்␢ இடியென முழங்கினார்;␢ உன்னதர்தம் குரலை அதிரச்செய்தார்.␢ கல் மழையையும் நெருப்புக் கனலையும் § பொழிந்தார்.⁾

14 ⁽தம் அம்புகளை எய்து␢ அவர் அவர்களைச் சிதறடித்தார்;␢ பெரும் மின்னல்களைத் தெறித்து␢ அவர்களைக் கலங்கடித்தார்.⁾

15 ⁽ஆண்டவரே, உமது கடிந்துரையாலும்␢ உமது மூச்சுக் காற்றின் வலிமையாலும்␢ நீர்த்திரளின் அடிப்பரப்பு தென்பட்டது;␢ நிலவுலகின் அடித்தளம் காணப்பட்டது.⁾

16 ⁽உயரத்தினின்று அவர் என்னை␢ எட்டிப் பிடித்துக் கொண்டார்;␢ வெள்ளப்பெருக்கினின்று␢ என்னைக் காப்பாற்றினார்.⁾

17 ⁽என் வலிமைமிகு எதிரியிடமிருந்து␢ அவர் என்னை விடுவிடுத்தார்;␢ என்னைவிட வலிமைமிகு பகைவரிடமிருந்து␢ என்னைப் பாதுகாத்தார்;⁾

18 ⁽எனக்கு இடுக்கண் வந்த நாளில்␢ அவர்கள் என்னை எதிர்த்தார்கள்;␢ ஆண்டவரோ எனக்கு␢ ஊன்றுகோலாய் இருந்தார்.⁾

19 ⁽நெருக்கடியற்ற இடத்திற்கு␢ அவர் என்னைக் கொணர்ந்தார்;␢ நான் அவர் மனத்திற்கு␢ உகந்தவனாய் இருந்ததால்,␢ அவர் என்னை விடுவித்தார்.⁾

20 ⁽ஆண்டவர் எனது நேர்மைக்கு␢ உரிய பயனை எனக்களித்தார்;␢ என் மாசற்ற செயலுக்கு ஏற்ப␢ கைம்மாறு செய்தார்.⁾

21 ⁽ஏனெனில், நான் ஆண்டவர் காட்டிய␢ நெறியைக் கடைப்பிடித்தேன்;␢ பொல்லாங்கு செய்து␢ என் கடவுளை விட்டு அகலவில்லை.⁾

22 ⁽அவர்தம் நீதிநெறிகளை எல்லாம்␢ என் கண்முன் வைத்திருந்தேன்;␢ அவர்தம் விதிமுறைகளை நான்␢ ஒதுக்கித் தள்ளவில்லை.⁾

23 ⁽அவர் முன்னிலையில்␢ நான் மாசற்றவனாய் இருந்தேன்;␢ தீங்கு செய்யாவண்ணம்␢ என்னைக் காத்துக் கொண்டேன்.⁾

24 ⁽ஆண்டவர், என் நேர்மைக்கு␢ உரிய பயனை அளித்தார்;␢ அவர்தம் பார்வையில்␢ நான் குற்றம் அற்றவனாய் இருந்தேன்.⁾

25 ⁽ஆண்டவரே, மாறா அன்பர்க்கு␢ மாறா அன்பராகவும்␢ மாசற்றோர்க்கு மாசற்றவராகவும்␢ நீர் விளங்குவீர்.⁾

26 ⁽தூயோருக்குத் தூயவராகவும்␢ வஞ்சகர்க்கு விவேகியாகவும்␢ உம்மை நீர் காட்டுகின்றீர்.⁾

27 ⁽எளியோருக்கு நீர் மீட்பளிக்கின்றீர்;␢ செருக்குற்றோரை ஏளனத்துடன் § நீர் பார்க்கின்றீர்.⁾

28 ⁽ஆண்டவரே, நீர் என் விளக்குக்கு␢ ஒளியேற்றுகின்றீர்.␢ என் கடவுளே, நீர் என் இருளை␢ ஒளிமயமாக்குகின்றீர்.⁾

29 ⁽உம் துணையுடன் நான்␢ எப்படையையும் நசுக்குவேன்;␢ என் கடவுளின் துணையால்␢ எம்மதிலையும் தாண்டுவேன்.⁾

30 ⁽இந்த இறைவனின் வழி நிறைவானது;␢ ஆண்டவரின் வாக்கு நம்பத்தக்கது;␢ அவரிடம் அடைக்கலம் புகும் அனைவர்க்கும்␢ அவரே கேடயமாய் இருக்கின்றார்.⁾

31 ⁽ஏனெனில், ஆண்டவரைத் தவிர␢ வேறு கடவுள் யார்?␢ நம் கடவுளைத் தவிர நமக்கு␢ வேறு கற்பாறை ஏது?⁾

32 ⁽வலிமையை அரைக்கச்சையாக␢ அளித்த இறைவன் அவரே;␢ என் வழியைப் பாதுகாப்பானதாய்ச்␢ செய்தவரும் அவரே.⁾

33 ⁽அவர் என் கால்களை மான்களின்␢ கால்களைப் போல் ஆக்குகின்றார்;␢ உயர்ந்த இடத்தில்␢ என்னை நிலை நிறுத்துகின்றார்.⁾

34 ⁽போருக்கு என்னை அவர் பழக்குகின்றார்;␢ எனவே, வெண்கல வில்லையும் § என் புயங்கள் வளைக்கும்.⁾

35 ⁽ஆண்டவரே, பாதுகாக்கும் உம் கேடயத்தை␢ நீர் எனக்கு வழங்கினீர்;␢ உமது வலக்கரத்தால்␢ என்னைத் தாங்கிக் கொண்டீர்;␢ உமது துணையால்␢ என்னைப் பெருமைப்படுத்தினீர்.⁾

36 ⁽நான் நடக்கும் வழியை அகலமாக்கினீர்;␢ என்கால்கள் தடுமாறவில்லை.⁾

37 ⁽என் எதிரிகளைத் துரத்திச்சென்று␢ நான் அவர்களைப் பிடித்தேன்;␢ அவர்களை அழித்தொழிக்கும் வரையில்␢ திரும்பவில்லை.⁾

38 ⁽அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி␢ அவர்களை நான் வெட்டித்தள்ளினேன்;␢ அவர்கள் என் காலடியில் வீழ்ந்தார்கள்.⁾

39 ⁽போரிடும் ஆற்றலை நீர் எனக்கு␢ அரைக்கச்சையாக அளித்தீர்;␢ என்னை எதிர்த்தவர்களை␢ எனக்கு அடிபணியச் செய்தீர்.⁾

40 ⁽என் எதிரிகளைப் புறமுதுகிடச் செய்தீர்;␢ என்னை வெறுத்தோரை␢ நான் அழித்துவிட்டேன்.⁾

41 ⁽உதவி வேண்டி அவர்கள் கதறினார்கள்;␢ ஆனால், அவர்களுக்கு உதவுவார்␢ யாருமில்லை. அவர்கள்␢ ஆண்டவரை நோக்கி மன்றாடினார்கள்;␢ ஆனால், அவர்களுக்கு␢ அவர் பதிலளிக்கவில்லை.⁾

42 ⁽எனவே, நான் அவர்களை நொறுக்கிக்␢ காற்றடித்துச் செல்லும் புழுதிபோல்␢ ஆக்கினேன்; தெருச் சேறென␢ அவர்களைத் தூர எறிந்து விட்டேன்.⁾

43 ⁽என் மக்களின் கலகத்தினின்று␢ என்னை விடுவித்தீர்;␢ பிற இனங்களுக்கு␢ என்னைத் தலைவன் ஆக்கினீர்;␢ நான் முன்பின் அறியாத மக்கள்␢ எனக்குப் பணிவிடை செய்தனர்.⁾

44 ⁽அவர்கள் என்னைப்பற்றிக்␢ கேள்விப்பட்டவுடன்␢ எனக்குப் பணிந்தனர்;␢ வேற்று நாட்டவர் என்னிடம்␢ கூனிக் குறுகி வந்தனர்.⁾

45 ⁽வேற்று நாட்டவர் உள்ளம் தளர்ந்தனர்;␢ தம் அரண்களிலிருந்து␢ நடுங்கிக் கொண்டு வெளியே வந்தனர்.⁾

46 ⁽ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்!␢ என் கற்பாறையாம் அவர் § போற்றப் பெறுவராக!␢ என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவராக!⁾

47 ⁽எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவர்;␢ மக்களினங்களை எனக்குக் § கீழ்ப்படுத்தியவரும் அவரே!⁾

48 ⁽என் பகைவரிடமிருந்து␢ என்னை விடுவித்தவரும் அவரே!␢ ஆண்டவரே! என் எதிரிகளுக்கு மேலாக␢ என்னை உயர்த்தினீர்!␢ என்னைக் கொடுமைப்படுத்தயவரிடமிருந்து␢ நீர் என்னைக் காத்தீர்!⁾

49 ⁽ஆகவே, பிற இனத்தாரிடையே␢ உம்மைப் போற்றுவேன்;␢ உம் பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன்.⁾

50 ⁽தாம் ஏற்படுத்திய அரசருக்கு␢ மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்;␢ தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும்␢ அவர்தம் மரபினருக்கும்␢ என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே.⁾

Psalm 18 ERV IRV TRV