1 ⁽ஆண்டவரே, என் எதிரிகள்␢ எவ்வளவாய்ப் பெருகிவிட்டனர்!␢ என்னை எதிர்த்து எழுவோர்␢ எத்தனை மிகுந்து விட்டனர்!⁾

2 ⁽‛கடவுள் அவனை விடுவிக்கமாட்டார்’␢ என்று என்னைக் குறித்துச்␢ சொல்வோர் பலர். (சேலா)⁾

3 ⁽ஆயினும், ஆண்டவரே,␢ நீரே எனைக் காக்கும் கேடயம்;␢ நீரே என் மாட்சி; என்னைத்␢ தலைநிமிரச் செய்பவரும் நீரே.⁾

4 ⁽நான் உரத்த குரலில்␢ ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்;␢ அவர் தமது திருமலையிலிருந்து␢ எனக்குப் பதிலளிப்பார். (சேலா)⁾

5 ⁽நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்;␢ ஏனெனில்,␢ ஆண்டவரே எனக்கு ஆதரவு.⁾

6 ⁽என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம்␢ பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன்.⁾

7 ⁽ஆண்டவரே, எழுந்தருளும்;␢ என் கடவுளே, என்னை மீட்டருளும்;␢ என் எதிரிகள் அனைவரையும்␢ கன்னத்தில் அறையும்!␢ பொல்லாரின் பல்லை உடையும்!⁾

8 ⁽விடுதலை அளிப்பவர் ஆண்டவர்;␢ அவர்தம் மக்களுக்கு␢ ஆசி வழங்குவாராக! (சேலா)⁾

Psalm 3 ERV IRV TRV