1 ⁽தீமை செய்வோரைக் கண்டு␢ மனம் புழுங்காதே;␢ பொல்லாங்கு செய்வாரைக் கண்டு␢ பொறாமைப்படாதே;⁾

2 ⁽ஏனெனில், அவர்கள் புல்லைப் போல்␢ விரைவில் உலர்ந்து போவர்;␢ பசும் பூண்டைப்போல் வாடிப்போவர்.⁾

3 ⁽ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்;␢ நாட்டிலேயே குடியிரு;␢ நம்பத் தக்கவராய் வாழ்.⁾

4 ⁽ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்;␢ உன் உள்ளத்து விருப்பங்களை␢ அவர் நிறைவேற்றுவார்.⁾

5 ⁽உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு;␢ அவரையே நம்பியிரு;␢ அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.⁾

6 ⁽உன் நேர்மையைக் கதிரொளி போலும்,␢ உன் நாணயத்தை நண்பகல் போலும்␢ அவர் விளங்கச் செய்வார்.⁾

7 ⁽ஆண்டவர்முன் அமைதியுடன் காத்திரு;␢ தம் வழியில் வெற்றி காண்போரையும்␢ சூழ்ச்சிகள் செய்வோரையும் பார்த்து␢ எரிச்சல் கொள்ளாதே.⁾

8 ⁽வெஞ்சினம் கொள்ளாதே;␢ வெகுண்டெழுவதை விட்டுவிடு;␢ எரிச்சலடையாதே;␢ அதனால் தீமைதான் விளையும்.⁾

9 ⁽தீமை செய்வோர் வேரறுக்கப்படுவர்;␢ ஆண்டவருக்காகக் காத்திருப்போரே␢ நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்.⁾

10 ⁽இன்னும் சிறிதுகாலம்தான்;␢ பிறகு பொல்லார் இரார்;␢ அவர்கள் இருந்த இடத்தில்␢ நீ அவர்களைத் தேடினால்␢ அவர்கள் அங்கே இரார்.⁾

11 ⁽எளியோர் நிலத்தை␢ உடைமையாகப் பெறுவர்;␢ அவர்கள் வளமிகு வாழ்க்கையில்␢ இன்பம் காண்பர்.⁾

12 ⁽பொல்லார் நேர்மையாளருக்குத்␢ தீங்கிழைக்கத் திட்டமிடுகின்றனர்;␢ அவர்களைப் பார்த்துப்␢ பல்லை நெரிக்கின்றனர்.⁾

13 ⁽என் தலைவர் அவர்களைப் பார்த்து␢ எள்ளி நகைக்கின்றார்;␢ அவர்களது முடிவுகாலம் நெருங்குவதை␢ அவர் காண்கின்றார்.⁾

14 ⁽எளியோரையும் வறியோரையும் வீழ்த்தவும்,␢ நேர்மையான வழியில் நடப்போரைக்␢ கொல்லவும் பொல்லார்␢ வாளை உருவுகின்றனர்;␢ வில்லை நாணேற்றுகின்றனர்.⁾

15 ⁽ஆனால், அவர்கள் வாள்␢ அவர்கள் நெஞ்சிலேயே பாயும்;␢ அவர்கள் வில்லும் முறிக்கப்படும்.⁾

16 ⁽பொல்லாரின் திரளான செல்வத்தைவிட␢ நல்லாரின் சிறிதளவு பொருளே சிறந்தது.⁾

17 ⁽பொல்லாரின் தோள்வலிமை முறிக்கப்படும்;␢ ஆனால் நேர்மையாளரை␢ ஆண்டவர் தாங்கிடுவார்.⁾

18 ⁽சான்றோரின் வாழ்நாள்களை␢ ஆண்டவர் அறிவார்;␢ அவர்கள் உரிமைச் சொத்து␢ என்றும் நிலைத்திருக்கும்.⁾

19 ⁽கேடுகாலத்தில்␢ அவர்கள் இகழ்ச்சி அடைவதில்லை;␢ பஞ்ச காலத்திலும்␢ அவர்கள் நிறைவடைவார்கள்.⁾

20 ⁽ஆனால், பொல்லார் அழிவுக்கு ஆளாவர்;␢ ஆண்டவரின் எதிரிகள்␢ கொழுத்த பலியாடுகளுக்கு ஒப்பாவர்.␢ அவர்கள் எரியுண்டு புகையென மறைவர்.⁾

21 ⁽பொல்லார் வாங்கிய கடனைத்␢ திருப்பிக் கொடுக்க மாட்டார்;␢ நேர்மையாளரோ மனமிரங்கிப்␢ பிறருக்குக் கொடுப்பர்.⁾

22 ⁽இறைவனின் ஆசி பெற்றோர்␢ நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்;␢ அவரால் சபிக்கப்பட்டோர் வேரறுக்கப்படுவர்.⁾

23 ⁽தாம் உவகைகொள்ளும்␢ நடத்தையைக் கொண்ட␢ மனிதரின் காலடிகளை␢ ஆண்டவர் உறுதிப்படுத்துகின்றார்.⁾

24 ⁽அவர்கள் விழுந்தாலும்␢ வீழ்ந்து கிடக்கமாட்டார்கள்;␢ ஆண்டவர் அவர்களைத்␢ தம் கையால் தூக்கி நிறுத்துவார்.⁾

25 ⁽இளைஞனாய் இருந்திருக்கிறேன்;␢ இதோ! முதியவன் ஆகிவிட்டேன்;␢ ஆனால், நேர்மையாளர் கைவிடப்பட்டதை␢ நான் கண்டதில்லை;␢ அவர்களுடைய மரபினர்␢ பிச்சை எடுப்பதை நான் பார்த்ததில்லை.⁾

26 ⁽நேர்மையாளர் எப்போதும் மனமிரங்கிக்␢ கடன் கொடுப்பர்;␢ அவர்களின் மரபினர்␢ இறையாசி பெற்றவராய் இருப்பர்.⁾

27 ⁽தீமையினின்று விலகு; நல்லது செய்;␢ எந்நாளும் நாட்டில் நிலைத்திருப்பாய்.⁾

28 ⁽ஏனெனில், ஆண்டவர்␢ நேர்மையை விரும்புகின்றார்;␢ தம் அன்பரை அவர் கைவிடுவதில்லை;␢ அவர்களை என்றும் பாதுகாப்பார்.␢ பொல்லாரின் மரபினரோ␢ வேரறுக்கப்படுவர்.⁾

29 ⁽நேர்மையாளர்␢ நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்;␢ அதிலேயே என்றென்றும் குடியிருப்பர்.⁾

30 ⁽நேர்மையாளரின் வாய்␢ ஞானத்தை அறிவிக்கும்;␢ அவர்கள் நா␢ நீதிநெறியை எடுத்துரைக்கும்.⁾

31 ⁽கடவுளின் திருச்சட்டம்␢ அவர்களது உள்ளத்தில் இருக்கின்றது;␢ அவர்களின் கால்கள் சறுக்குவதில்லை.⁾

32 ⁽பொல்லார் நேர்மையாளரை␢ வேவு பார்த்துக் கொண்டிருப்பர்;␢ அவர்களைக் கொன்றுவிட வழிதேடுவர்.⁾

33 ⁽ஆனால், ஆண்டவர் நேர்மையாளரை␢ அவர்களின் கையில் ஒப்புவிக்கமாட்டார்;␢ நீதி விசாரணையின்போது␢ அவர்களைத் தண்டனைத்தீர்ப்புக்கு␢ உள்ளாக்கமாட்டார்.⁾

34 ⁽ஆண்டவருக்காகக் காத்திரு;␢ அவர்தம் வழியைப் பின்பற்று;␢ அப்பொழுது நீ நிலத்தை␢ உடைமையாக்கிக்கொள்ளும்படி␢ அவர் உன்னை உயர்த்துவார்.␢ பொல்லார் வேரறுக்கப்படுவதை␢ நீ காண்பாய்.⁾

35 ⁽வளமான நிலத்தில்␢ தழைத்தோங்கும் மரம்போல்␢ கொடிய நெஞ்சங்கொண்ட பொல்லார்␢ செழித்திருக்கக் கண்டேன்.⁾

36 ⁽ஆனால், அவர்கள்␢ மறைந்துவிட்டார்கள்;␢ அந்தோ! அவர்கள் அங்கில்லை;␢ தேடிப் பார்த்தேன்;␢ அவர்களைக் காணவில்லை.⁾

37 ⁽சான்றோரைப் பார்;␢ நேர்மையானவரைக் கவனி;␢ அமைதியையே நாடும் அம்மனிதருக்கு␢ வழிமரபினர் இருப்பர்.⁾

38 ⁽அநீதியாளர் அனைவரும்␢ ஒன்றாக அழிக்கப்படுவர்;␢ பொல்லாரின் வழிமரபினர்␢ வேரறுக்கப்படுவர்.⁾

39 ⁽நேர்மையாளருக்கு மீட்பு␢ ஆண்டவரிடமிருந்து வருகின்றது,␢ நெருக்கடியான நேரத்தில்␢ அவர்களுக்கு வலிமையும் அவரே.⁾

40 ⁽ஆண்டவர் துணைநின்று␢ அவர்களை விடுவிக்கின்றார்;␢ பொல்லாரிடமிருந்து␢ அவர்களை விடுவிக்கின்றார்;␢ அவரிடம் அடைக்கலம் புகுந்ததால்,␢ அவர்களை மீட்கின்றார்.⁾

Psalm 37 ERV IRV TRV