1 ⁽வலியோனே! தீமை செய்வதில்␢ ஏன் பெருமை கொள்கின்றாய்?␢ இறைவனின் பேரன்பு␢ எந்நாளும் உள்ளது.⁾

2 ⁽கேடுவிளைவிக்க நீ திட்டமிடுகின்றாய்;␢ உனது நா தீட்டிய கத்தி போன்றது;␢ வஞ்சகத்தில் தேர்ந்தோன் நீ அன்றோ!⁾

3 ⁽நன்மை செய்வதைவிட␢ தீமை செய்வதையே விரும்புகின்றாய்;␢ உண்மை பேசுவதைவிட␢ பொய் பேசுவதையே␢ விரும்புகின்றாய். (சேலா)⁾

4 ⁽நரம்பில்லா நாவுடையோனே!␢ நீ விரும்பும் சொற்கள் அனைத்தும்␢ கேடு விளைவிப்பனவே!⁾

5 ⁽ஆகவே! கடவுள் உன்னை␢ என்றும் மீளாதபடி நொறுக்கிவிடுவார்;␢ உன்னைத் தூக்கி எறிவார்;␢ கூடாரத்தினின்று␢ உன்னைப் பிடுங்கி எறிவார்;␢ உயிர் வாழ்வோரின் உலகினின்று␢ உன்னை வேரோடு␢ களைந்து விடுவார். (சேலா)⁾

6 ⁽நேர்மையாளர் அதன்␢ கடுமையைக் கண்டு திகிலடைவர்;␢ மேலும், உன்னை␢ எள்ளி நகையாடிக் கூறுவர்;⁾

7 ⁽‛இதோ! பாருங்கள்; இவன் தான்␢ கடவுளைத் தன் புகலிடமாய்க்␢ கொள்ளாதவன்; § தன் செல்வப் பெருக்கில்␢ நம்பிக்கை வைத்தவன்;␢ அழிவுச் செயலையே␢ புகலிடமாய்க் கொண்டவன்!’⁾

8 ⁽நானோ, கடவுளின் இல்லத்தில்␢ பச்சை ஒலிவமரக்கன்றுபோல்␢ இருக்கின்றேன்;␢ கடவுளின் பேரன்பில்␢ எப்போதும் நிலையாக நம்பிக்கை␢ வைத்திருக்கின்றேன்.⁾

9 ⁽கடவுளே! நீர் இவ்வாறு␢ எனக்குச் செய்துள்ளதால்,␢ உமக்கு என்றென்றும் நன்றி கூறுவேன்;␢ உம் அன்பரின் முன்னிலையில்,␢ உம் பெயர்மீது நம்பிக்கை கொள்வேன்;␢ இதுவே நன்று.⁾

Psalm 52 ERV IRV TRV