1 ⁽கடவுளே, எனக்கு இரங்கியருளும்;␢ ஏனெனில், மனிதர் என்னை␢ நசுக்குகின்றனர்;␢ அவர்கள் என்னுடன் நாள்தோறும்␢ சண்டையிட்டுத் துன்புறுத்துகின்றனர்.⁾

2 ⁽என் பகைவர் நாள்தோறும்␢ கொடுமைப்படுத்துகின்றனர்;␢ மிகப் பலர் என்னை ஆணவத்துடன்␢ எதிர்த்துப் போரிடுவோர்.⁾

3 ⁽அச்சம் என்னை ஆட்கொள்ளும் நாளில்,␢ உம்மையே நான் நம்பியிருப்பேன்.⁾

4 ⁽கடவுளின் வாக்கை நான் புகழ்கின்றேன்;␢ கடவுளையே நம்பியிருக்கின்றேன்;␢ எதற்கும் அஞ்சேன்; அற்ப மனிதர்␢ எனக்கென்ன செய்ய முடியும்?⁾

5 ⁽என் எதிரிகள் எந்நேரமும்␢ என் சொற்களைப் புரட்டுகின்றனர்;␢ அவர்கள் திட்டங்கள் எல்லாம்␢ என்னைத் துன்புறுத்தவே.⁾

6 ⁽அவர்கள் ஒன்றுகூடிப்␢ பதுங்கி இருக்கின்றனர்;␢ என் உயிரைப் போக்குவதற்காக␢ என் காலடிச் சுவடுகளைக்␢ கவனித்துக்கொண்டே இருக்கின்றனர்.⁾

7 ⁽அவர்கள் தீமைகளைச் செய்துவிட்டுத்␢ தப்பமுடியுமோ?␢ கடவுளே, சினம் கொண்டெழுந்து␢ இந்த மக்களினங்களைக் கீழே வீழ்த்தும்.⁾

8 ⁽என் துன்பங்களின் எண்ணிக்கையை␢ நீர் அறிவீர்;␢ உமது தோற்பையில் என் கண்ணீரைச்␢ சேர்த்து வைத்துள்ளீர்;␢ இவையெல்லாம் உம் குறிப்பேட்டில்␢ உள்ளன அல்லவா?⁾

9 ⁽நான் உம்மை நோக்கி மன்றாடும் நாளில்␢ என் எதிரிகள் புறமுதுகிட்டு ஓடுவர்;␢ அப்போது, கடவுள்␢ என் பக்கம் இருக்கின்றார் என்பதை␢ நான் உறுதியாய் அறிவேன்.⁾

10 ⁽கடவுளின் வாக்கை␢ நான் புகழ்கின்றேன்;␢ ஆண்டவனின் வாக்கை␢ நான் புகழ்கின்றேன்.⁾

11 ⁽கடவுளையே நம்பியிருக்கின்றேன்;␢ எதற்கும் அஞ்சேன்;␢ மானிடர் எனக்கெதிராய்␢ என்ன செய்ய முடியும்?⁾

12 ⁽கடவுளே, நான் உமக்குச் செய்த␢ பொருத்தனைகளை மறக்கவில்லை;␢ உமக்கு நன்றிப்பலி செலுத்துவேன்.⁾

13 ⁽ஏனெனில், சாவினின்று␢ என் உயிரை நீர் மீட்டருளினீர்;␢ வாழ்வோரின் ஒளியில்,␢ கடவுளின் முன்னிலையில்␢ நான் நடக்கும் பொருட்டு␢ என் அடிகள் சறுக்காதபடி␢ காத்தீர் அன்றோ!⁾

Psalm 56 ERV IRV TRV