1 ⁽கடவுளே, சீயோனில் உம்மைப்␢ புகழ்ந்து பாடுவது ஏற்புடையது!␢ உமக்குப் பொருத்தனைகள்␢ செலுத்துவதும் சால்புடையது!⁾

2 ⁽மன்றாட்டுக்களைக் கேட்கின்றவரே!␢ மானிடர் யாவரும் உம்மிடம் வருவர்.⁾

3 ⁽எங்கள் பாவங்களின் பளுவை␢ எங்களால் தாங்கமுடியவில்லை;␢ ஆனால் நீர் எங்கள் குற்றப் பழிகளைப்␢ போக்குகின்றீர்.⁾

4 ⁽நீர் தேர்ந்தெடுத்து␢ உம்மருகில் வைத்துக்கொள்ளும்␢ மனிதர் பேறு பெற்றோர்;␢ உம் கோவிலின் முற்றங்களில்␢ அவர்கள் உறைந்திடுவர்;␢ உமது இல்லத்தில், உமது திருமிகு␢ கோவிலில் கிடைக்கும் நன்மைகளால்␢ நாங்கள் நிறைவு பெறுவோம்.⁾

5 ⁽அஞ்சத்தகு செயல்களை நீர் புரிகின்றீர்;␢ எங்கள் மீட்பின் கடவுளே,␢ உமது நீதியின் பொருட்டு␢ எங்கள் மன்றாட்டுக்கு␢ மறுமொழி பகர்கின்றீர்;␢ உலகின் கடையெல்லைவரை␢ வாழ்வோர் அனைவருக்கும்␢ தொலையிலுள்ள தீவுகளில்␢ உள்ளோருக்கும் நம்பிக்கை நீரே!⁾

6 ⁽வல்லமையை இடைக்கச்சையாகக்␢ கொண்ட நீர் உமது ஆற்றலால் § மலைகளை உறுதிப்படுத்துகின்றீர்.⁾

7 ⁽கடல்களின் இரைச்சலையும்␢ அவற்றின் அலைகளின் ஓசையையும்␢ மக்களினங்களின் அமளியையும்␢ அடக்குகின்றீர்!⁾

8 ⁽உலகின் கடையெல்லைவரை வாழ்வோர்␢ உம் அருஞ் செயல்களைக் §கண்டு அஞ்சுவர்;␢ கிழக்கு முதல் மேற்குவரை உள்ளோரைக்␢ களிகூரச் செய்கின்றீர்!⁾

9 ⁽மண்ணுலகைப் பேணி␢ அதன் நீர்வளத்தையும்␢ நிலவளத்தையும் பெருக்கினீர்!␢ கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது;␢ அது தானியங்களை␢ நிரம்ப விளையச் செய்தது;␢ நீரே அவற்றை இவ்வாறு␢ விளையச் செய்துள்ளீர்.⁾

10 ⁽அதன் படைசால்களில்␢ தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்;␢ அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து␢ மென்மழையால் மிருதுவாக்கினீர்;␢ அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர்.⁾

11 ⁽ஆண்டு முழுவதும்␢ உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்;␢ உம்முடைய வழிகள் எல்லாம்␢ வளம் கொழிக்கின்றன.⁾

12 ⁽பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள்␢ செழுமை பொங்குகின்றன;␢ குன்றுகள் அக்களிப்பை␢ இடைக்கச்சையாய் அணிந்துள்ளன.⁾

13 ⁽புல்வெளிகள் மந்தைகளை␢ ஆடையெனக் கொண்டுள்ளன;␢ பள்ளத்தாக்குகள் தானியங்களால்␢ தங்களைப் போர்த்திக் கொண்டுள்ளன;␢ அவற்றில் எங்கும் ஆரவாரம்!␢ எம்மருங்கும் இன்னிசை!⁾

Psalm 65 ERV IRV TRV