1 ⁽உமக்கு நன்றி␢ செலுத்துகின்றோம்;␢ கடவுளே, உமக்கு␢ நன்றி செலுத்துகின்றோம்;␢ உமது பெயரைப் போற்றுகின்றோம்;␢ உம் வியத்தகு செயல்களை␢ எடுத்துரைக்கின்றோம்.⁾

2 ⁽நான் தகுந்த வேளையைத்␢ தேர்ந்துகோண்டு,␢ நீதியோடு தீர்ப்பு வழங்குவேன்.⁾

3 ⁽உலகமும் அதில் வாழ்வோர் அனைவரும்␢ நிலைகுலைந்து போகலாம்;␢ ஆனால், நான் அதன் தூண்களை␢ உறுதியாக நிற்கச் செய்வேன். (சேலா)⁾

4 ⁽வீண் பெருமை கொள்வோரிடம்,␢ ‛வீண் பெருமை கொள்ள வேண்டாம்’ § எனவும் பொல்லாரிடம்,␢ ‛உங்கள் வலிமையைக் காட்ட வேண்டாம்;⁾

5 ⁽உங்கள் ஆற்றலைச் சிறிதளவும்␢ காட்டிக்கொள்ள வேண்டாம்;␢ தலையை ஆட்டி இறுமாப்புடன்␢ பேச வேண்டாம்;’ எனவும் சொல்வேன்.⁾

6 ⁽கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ,␢ பாலைவெளியிலிருந்தோ, § மலைகளிலிருந்தோ,␢ உங்களுக்கு எதுவும் வராது.⁾

7 ⁽ஆனால், கடவுளிடமிருந்தே␢ தீர்ப்பு வரும்; அவரே␢ ஒருவரைத் தாழ்த்துகின்றார்;␢ இன்னொருவரை உயர்த்துகின்றார்.⁾

8 ⁽ஏனெனில், மதிமயக்கும்␢ மருந்து கலந்த திராட்சை மது␢ பொங்கிவழியும் ஒரு பாத்திரம்␢ ஆண்டவர் கையில் இருக்கின்றது;␢ அதிலிருந்து அவர்␢ மதுவை ஊற்றுவார்;␢ உலகிலுள்ள பொல்லார் அனைவரும்␢ அதை முற்றிலும்␢ உறிஞ்சிக் குடித்துவிடுவர்.⁾

9 ⁽நானோ எந்நாளும் மகிழ்ந்திருப்பேன்;␢ யாக்கோபின் கடவுளைப்␢ புகழ்ந்து பாடுவேன்;⁾

10 ⁽பொல்லாரை அவர்␢ வலிமை இழக்கச் செய்வார்;␢ நேர்மையாளரின் ஆற்றலோ␢ உயர்வுபெறும்.⁾

Psalm 75 ERV IRV TRV