1 ⁽ஆண்டவரே! எங்கள் தலைவரே!␢ உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு § மேன்மையாய் விளங்குகின்றது!␢ உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும்␢ உயர்ந்துள்ளது.⁾

2 ⁽பாலகரின் மழலையிலும்␢ குழந்தைகளின் மொழியிலும்␢ வலிமையை உறுதிப்படுத்தி␢ உம் பகைவரை ஒடுக்கினீர்;␢ எதிரியையும் பழிவாங்குவோரையும்␢ அடக்கினீர்.⁾

3 ⁽உமது கைவேலைப்பாடாகிய␢ வானத்தையும்␢ அதில் நீர் பொருத்தியுள்ள␢ நிலாவையும் விண்மீன்களையும்␢ நான் நோக்கும்போது,⁾

4 ⁽மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு␢ அவர்கள் யார்?␢ மனிதப் பிறவிகளை␢ நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு␢ அவர்கள் எம்மாத்திரம்?⁾

5 ⁽ஆயினும், அவர்களைக்␢ கடவுளாகிய* உமக்குச்␢ சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்;␢ மாட்சியையும் மேன்மையையும்␢ அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.⁾

6 ⁽உமது கை படைத்தவற்றை␢ அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்;␢ எல்லாவற்றையும்␢ அவர்கள் பாதங்களுக்குக்␢ கீழ்ப்படுத்தியுள்ளீர்.⁾

7 ⁽ஆடுமாடுகள், எல்லா வகையான␢ காட்டு விலங்குகள்,⁾

8 ⁽வானத்துப் பறவைகள்,␢ கடல் மீன்கள்,␢ ஆழ்கடலில் நீந்திச் செல்லும்␢ உயிரினங்கள் அனைத்தையும்␢ அவர்களுக்குக் கீழ்படுத்தியுள்ளீர்.⁾

9 ⁽ஆண்டவரே, எங்கள் தலைவரே,␢ உமது பெயர் உலகெங்கும்␢ எவ்வளவு மேன்மையாய்␢ விளங்குகின்றது!⁾

Psalm 8 ERV IRV TRV