1 ⁽வாருங்கள்; ஆண்டவரைப்␢ புகழ்ந்து பாடுங்கள்;␢ நமது மீட்பின் பாறையைப்␢ போற்றி ஆர்ப்பரியுங்கள்.⁾

2 ⁽நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்;␢ புகழ்ப் பாக்களால் அவரைப்␢ போற்றி ஆர்ப்பரிப்போம்.⁾

3 ⁽ஏனெனில், ஆண்டவர்␢ மாண்புமிகு இறைவன்;␢ தெய்வங்கள் அனைத்திற்கும்␢ மேலான பேரரசர்.⁾

4 ⁽பூவுலகின் ஆழ்பகுதிகள்␢ அவர்தம் கையில் உள்ளன;␢ மலைகளின் கொடுமுடிகளும்␢ அவருக்கே உரியன.⁾

5 ⁽கடலும் அவருடையதே;␢ அவரே அதைப் படைத்தார்;␢ உலர்ந்த தரையையும்␢ அவருடைய கைகளே உருவாக்கின.⁾

6 ⁽வாருங்கள்; தாள்பணிந்து␢ அவரைத் தொழுவோம்;␢ நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன்␢ முழந்தாளிடுவோம்.⁾

7 ⁽அவரே நம் கடவுள்;␢ நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்;␢ நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள்.␢ இன்று நீங்கள் அவரது குரலுக்குச்␢ செவிகொடுத்தால் எத்துணை நலம்!⁾

8 ⁽அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில்␢ மாசாவிலும் செய்ததுபோல்,␢ உங்கள் இதயத்தைக்␢ கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.⁾

9 ⁽அங்கே உங்கள் மூதாதையர்␢ என்னைச் சோதித்தனர்;␢ என் செயல்களைக் கண்டிருந்தும்␢ என்னைச் சோதித்துப் பார்த்தனர்.⁾

10 ⁽நாற்பது ஆண்டளவாய்␢ அந்தத் தலைமுறை␢ எனக்கு வெறுப்பூட்டியதால்,␢ நான் உரைத்தது: ‛அவர்கள்␢ உறுதியற்ற உள்ளம் கொண்ட மக்கள்;␢ என் வழிகளை அறியாதவர்கள்’.⁾

11 ⁽எனவே, நான் சினமுற்று,␢ ‛நான் அளிக்கும்␢ இளைப்பாற்றியின் நாட்டிற்குள்␢ நுழையவே மாட்டார்கள்’ என்று␢ ஆணையிட்டுக் கூறினேன்.⁾

Psalm 95 ERV IRV TRV