1 ⁽ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;␢ பூவுலகம் மகிழ்வதாக!␢ திரளான தீவு நாடுகள்␢ களிகூர்வனவாக!⁾

2 ⁽மேகமும் காரிருளும்␢ அவரைச் சூழ்ந்துள்ளன;␢ நீதியும் நேர்மையும்␢ அவரது அரியணையின் அடித்தளம்.⁾

3 ⁽நெருப்பு அவர்முன் செல்கின்றது;␢ சுற்றிலுமுள்ள அவர்தம் எதிரிகளைச்␢ சுட்டெரிக்கின்றது.⁾

4 ⁽அவர்தம் மின்னல்கள்␢ பூவுலகை ஒளிர்விக்கின்றன;␢ மண்ணுலகம் அதைக் கண்டு␢ நடுங்குகின்றது.⁾

5 ⁽ஆண்டவர் முன்னிலையில், § அனைத்துலகின் தலைவர் முன்னிலையில்,␢ மலைகள் மெழுகென உருகுகின்றன.⁾

6 ⁽வானங்கள் அவரது நீதியை␢ அறிவிக்கின்றன;␢ அனைத்து மக்களினங்களும்␢ அவரது மாட்சியைக் காண்கின்றன.⁾

7 ⁽உருவங்களை வழிபடுவோரும்␢ சிலைகள் பற்றிப்␢ பெருமையடித்துக் கொள்வோரும்␢ வெட்கத்துக்கு உள்ளாவர்;␢ அனைத்துத் தெய்வங்களே!␢ அவரைத் தாழ்ந்து பணியுங்கள்.⁾

8 ⁽ஆண்டவரே! உம் நீதித்தீர்ப்புகளை § சீயோன் கேட்டு மகிழ்கின்றது;␢ யூதாவின் நகர்கள் களிகூர்கின்றன.⁾

9 ⁽ஏனெனில், ஆண்டவரே!␢ உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர்;␢ தெய்வங்கள் அனைத்திற்கும்␢ மேலானவர் நீரே!⁾

10 ⁽தீமையை வெறுப்போர்மீது␢ ஆண்டவர் அன்புகூர்கின்றார்.␢ அவர்தம் பற்றுமிகு அடியார்களின்␢ உயிரைப் பாதுகாக்கின்றார்;␢ பொல்லாரின் கையினின்று␢ அவர்களை விடுவிக்கின்றார்.⁾

11 ⁽நேர்மையாளருக்கென ஒளியும்␢ நேரிய உள்ளத்தோர்க்கென␢ மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன.⁾

12 ⁽நேர்மையாளர்களே!␢ ஆண்டவரில் களிகூருங்கள்;␢ அவரது தூய்மையை நினைந்து␢ அவரைப் புகழுங்கள்.⁾

Psalm 97 ERV IRV TRV