1 ஓர் இறைவாக்கு: ஆண்டவரின் வாக்கு அதிராக்கு நாட்டிற்கு எதிராக எழும்புகிறது; அது தமஸ்கு நகர்மீது இறங்கித் தங்கும்; ஏனெனில் இஸ்ரயேலின் எல்லாக் குலங்களைப் போலவே சிரியா நாட்டின் நகர்களும் ஆண்டவருக்கே உரியன.

2 அதன் எல்லைக்கு அடுத்துள்ள ஆமாத்தும் ஞானத்தில் சிறந்த தீரும் சீதோனும் அவருக்கே சொந்தம்.

3 தீர் தன்னைச் சுற்றிலும் அரண் ஒன்றைக் கட்டியெழுப்பியது; தூசியைப் போல் வெள்ளியையும் தெருச் சேற்றைப்போல் பொன்னையும் சேமித்தது.

4 இதோ என் தலைவர் அவற்றைப் பறிமுதல் செய்வார்; அதன் அரணைக் கடலுக்குள் தூக்கி எறிவார்; அந்நகரும் நெருப்புக்கு இரையாகும்.

5 அஸ்கலோன் இதைக் கண்டு அஞ்சி நடுங்கும்; காசா நகர் வேதனையால் துடிதுடிக்கும்; அவ்வாறே எக்ரோனும் நம்பிக்கை இழந்துவிடும். காசா நகரிலிருந்து அரசன் அழித்தொழிவான்; அஸ்கலோன் குடியற்றுப்போகும்.

6 அஸ்தோதில் கலப்பினத்தார் குடியிருப்பார்கள்; பெலிஸ்தியரின் ஆணவத்தை நான் ஒழித்திடுவேன்.⒫

7 ⁽இரத்தம் வடியும் இறைச்சியை␢ அவர்கள் வாயினின்று அகற்றுவேன்;␢ அருவருப்பான உணவை அதன்␢ பற்களிடையிருந்து நீக்குவேன்;␢ அவ்வினம் நம் கடவுளுக்கு␢ எஞ்சியதாகும்;␢ அது யூதாவின் குலங்களில்␢ தலையாயது ஆகும்.␢ எக்ரோன் நகரத்தார்␢ எபூசியரைப் போல் இருப்பார்கள்;⁾

8 ⁽அங்குமிங்கும் தாக்கும்␢ படையினின்று␢ எனது இல்லத்தைக் காப்பதற்கு␢ நான் பாளையம் இறங்குவேன்;␢ ஒடுக்குகிறவன் எவனும் இனி␢ அவர்களின் நகர்களை␢ ஊடுருவிச் செல்லான்;␢ ஏனெனில், என் கண்களாலேயே␢ யாவற்றையும் நான்␢ பார்த்துக் கொண்டிருக்கிறேன்.⁾

9 ⁽மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு;␢ மகளே எருசலேம்! ஆர்ப்பரி.␢ இதோ! உன் அரசர்␢ உன்னிடம் வருகிறார்.␢ அவர் நீதியுள்ளவர்;␢ வெற்றிவேந்தர்;␢ எளிமையுள்ளவர்;␢ கழுதையின்மேல்,␢ கழுதைக் குட்டியாகிய␢ மறியின்மேல் ஏறி வருகிறவர்.⁾

10 ⁽அவர் எப்ராயிமில் தேர்ப்படை␢ இல்லாமற் போகச்செய்வார்;*␢ எருசலேமில் குதிரைப்படையை␢ அறவே ஒழித்து விடுவார்;*␢ போர்க் கருவியான வில்லும்␢ ஒடிந்து போகும்.␢ வேற்றினத்தார்க்கு அமைதியை அறிவிப்பார்;␢ அவரது ஆட்சி ஒரு கடல்முதல் மறு கடல் வரை,␢ பேராறுமுதல்␢ நிலவுலகின் எல்லைகள்வரை செல்லும்.⁾

11 ⁽உன்னைப் பொறுத்தமட்டில்␢ உன்னோடு நான் செய்த␢ உடன்படிக்கையின்␢ இரத்தத்தை முன்னிட்டு,␢ சிறைப்பட்டிருக்கும்␢ உன்னைச் சார்ந்தோரை␢ நீரற்ற படுகுழியிலிருந்து விடுவிப்பேன்.⁾

12 ⁽நம்பிக்கையுடன் காத்திருக்கும்␢ சிறைக் கைதிகளே,␢ உங்கள் அரணுக்குத் திரும்பி வாருங்கள்;␢ இருமடங்கு நன்மைகள்␢ நான் உங்களுக்குத் தருவேன் என்று␢ நான் இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன்.⁾

13 ⁽நான் யூதாவை␢ என் வில்லாக்கிக் கொண்டேன்;␢ எப்ராயிமை அம்பாக␢ அமைத்துக்கொண்டேன்;␢ சீயோனே! உன் மக்களை␢ யவனருக்கு எதிராக ஏவிவிட்டு␢ உன்னை வல்லவனின்␢ வாள் போல் ஆக்குவேன்.⁾

14 ⁽அப்போது அவர்கள்மீது␢ ஆண்டவர் தோன்றுவார்.␢ அவரது அம்பு மின்னலைப்போல்␢ பாய்ந்து செல்லும்;␢ தலைவராகிய ஆண்டவர்␢ எக்காளம் ஊதி ஒலி எழுப்புவார்;␢ அவர் தென்திசைச்␢ சூறாவளிக்கு இடையே␢ நடந்து வருவார்.⁾

15 ⁽படைகளின் ஆண்டவர் அவர்களுக்கு␢ அடைக்கலமாய் இருப்பார்;␢ அவர்கள் தங்கள் பகைவரை␢ ஒழித்துக்கட்டி,␢ அவர்களுடைய கவண் கற்களை␢ மிதித்துப்போடுவார்கள்;␢ திராட்சை இரசத்தைப்போல்␢ அவர்களது குருதியைக் குடிப்பார்கள்;␢ கிண்ணம்போல் நிரம்பி வழிந்தும்,␢ பலிபீடத்தின் கொம்புகளைப் போல்␢ நனைந்தும்,␢ இரத்தத்தால் நிறைந்திருப்பார்கள்.⁾

16 ⁽அந்நாளில் அவர்களுடைய␢ கடவுளாகிய ஆண்டவர்,␢ தம் மக்களாகிய அவர்களை␢ ஆயர் தம் மந்தையை மீட்பது போல்␢ மீட்டருள்வார்;␢ அவர்களும் அவரது நாட்டில்␢ மணிமுடியில் பதிக்கப்பட்டுள்ள␢ கற்களைப்போல் ஒளிர்வார்கள்.⁾

17 ⁽ஆம், அக்காட்சி எத்துணை இனியது;␢ எத்துணை அழகியது;␢ கோதுமை இளங்காளையரையும்␢ புதுத்திராட்சை இரசம் கன்னியரையும்␢ செழிப்புறச் செய்யும்.⁾

Zechariah 9 ERV IRV TRV