Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 19:8 in Tamil

Home Bible Job Job 19 Job 19:8

யோபு 19:8
நான் கடந்துபோகக் கூடாதபடிக்கு அவர் என் பாதையை வேலியடைத்து என் வழிகளை இருளாக்கிவிட்டார்.

Tamil Indian Revised Version
நான் கடந்துபோக முடியாதபடி அவர் என் பாதையை வேலியடைத்து, என் வழிகளை இருளாக்கிவிட்டார்.

Tamil Easy Reading Version
தேவன் என் வழியை அடைத்ததால் நான் தாண்டிச்செல்ல முடியவில்லை. அவர் என் பாதையை இருளால் மறைத்திருக்கிறார்.

Thiru Viviliam
⁽நான் கடந்துபோகாவண்ணம்,␢ கடவுள் என் வழியை அடைத்தார்;␢ என் பாதையை இருளாக்கினார்.⁾

Job 19:7Job 19Job 19:9

King James Version (KJV)
He hath fenced up my way that I cannot pass, and he hath set darkness in my paths.

American Standard Version (ASV)
He hath walled up my way that I cannot pass, And hath set darkness in my paths.

Bible in Basic English (BBE)
My way is walled up by him so that I may not go by: he has made my roads dark.

Darby English Bible (DBY)
He hath hedged up my way that I cannot pass, and he hath set darkness in my paths.

Webster’s Bible (WBT)
He hath fenced up my way that I cannot pass, and he hath set darkness in my paths.

World English Bible (WEB)
He has walled up my way so that I can’t pass, And has set darkness in my paths.

Young’s Literal Translation (YLT)
My way He hedged up, and I pass not over, And on my paths darkness He placeth.

யோபு Job 19:8
நான் கடந்துபோகக் கூடாதபடிக்கு அவர் என் பாதையை வேலியடைத்து என் வழிகளை இருளாக்கிவிட்டார்.
He hath fenced up my way that I cannot pass, and he hath set darkness in my paths.

אָרְחִ֣יʾorḥîore-HEE
גָ֭דַרgādarɡA-dahr
וְלֹ֣אwĕlōʾveh-LOH
אֶעֱב֑וֹרʾeʿĕbôreh-ay-VORE
וְעַ֥לwĕʿalveh-AL
נְ֝תִיבוֹתַ֗יnĕtîbôtayNEH-tee-voh-TAI
חֹ֣שֶׁךְḥōšekHOH-shek
יָשִֽׂים׃yāśîmya-SEEM

Cross Reference

புலம்பல் 3:7
நான் புறப்படக் கூடாதபடி என்னைச் சூழவேலியடைத்தார்; என் விலங்கைப் பாரமாக்கினார்.

யோபு 3:23
தன் வழியைக் காணக் கூடாதபடிக்கு, தேவனால் வளைந்துகொள்ளப்பட்டவனுக்கு வெளிச்சத்தினால் பலன் என்ன?

புலம்பல் 3:9
வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார், என் பாதைகளைத் தாறுமாறாக்கினார்.

ஓசியா 2:6
ஆகையால், இதோ, நான் உன்வழியை முள்ளுகளினால் அடைப்பேன்; அவள் தன் பாதைகளைக் கண்டுபிடிக்கக் கூடாதபடிக்கு மதிலை எழுப்புவேன்.

யோவான் 8:12
மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.

எரேமியா 23:12
ஆதலால், அவர்கள் வழி அவர்களுக்கு இருட்டிலே சறுக்கலான வழியாயிருக்கும், துரத்துண்டு அதிலே விழுவார்கள்; அவர்கள் விசாரிக்கப்படும் வருஷத்திலே அவர்கள்மேல் பொல்லாப்பை வரப்பண்ணுவேனென்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 13:16
அவர் அந்தகாரத்தை வரப்பண்ணுவதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் இடறுவதற்கு முன்னும் நீங்கள் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துங்கள்.

ஏசாயா 50:10
உங்களில் எவன் கர்த்தருக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் கர்த்தருடய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்துகொள்ளக்கடவன்.

நீதிமொழிகள் 4:19
துன்மார்க்கருடைய பாதையோ காரிருளைப்போலிருக்கும்; தாங்கள் இடறுவது இன்னதில் என்று அறியார்கள்.

சங்கீதம் 88:8
எனக்கு அறிமுகமானவர்களை எனக்குத் தூரமாக விலக்கி, அவர்களுக்கு என்னை அருவருப்பாக்கினார்; நான் வெளியே புறப்படக் கூடாதபடி அடைபட்டிருக்கிறேன்.

யோபு 30:26
நன்மைக்குக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது; வெளிச்சத்தை வரப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது.

யோசுவா 24:7
அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அப்பொழுது அவர் உங்களுக்கும் எகிப்தியருக்கும் நடுவே அந்தகாரத்தை வரப்பண்ணி, சமுத்திரத்தை அவர்கள்மேல் புரளச்செய்து, அவர்களை மூடிப்போட்டார்; நான் எகிப்திலே செய்ததை உங்கள் கண்கள் கண்டது; பின்பு வனாந்தரத்தில் அநேகநாள் சஞ்சரித்தீர்கள்.


Tags நான் கடந்துபோகக் கூடாதபடிக்கு அவர் என் பாதையை வேலியடைத்து என் வழிகளை இருளாக்கிவிட்டார்
Job 19:8 in Tamil Concordance Job 19:8 in Tamil Interlinear Job 19:8 in Tamil Image