நீதிமொழிகள் 22:29
தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.
Tamil Indian Revised Version
தன்னுடைய வேலையில் ஜாக்கிரதையாக இருக்கிறவனை நீ கண்டால், அவன் சாதாரணமானவர்களுக்கு முன்பாக நிற்காமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.
Tamil Easy Reading Version
ஒருவன் தனது வேலையில் திறமையுடையவனாக இருந்தால் அவன் அரசனிடம் பணியாற்றும் தகுதியைப் பெறுகிறான். அவன், முக்கியமில்லாதவர்களுக்குப் பணியாற்றும் தேவை இருக்காது.
Thiru Viviliam
தம் அலுவலில் திறமை காட்டுகின்ற ஒருவரைப் பார்; அவர் பாமர மனிதரிடையே இரார்; அரசு அவையில் இருப்பார்.
Title
ஞானமொழி 5
Other Title
5
King James Version (KJV)
Seest thou a man diligent in his business? he shall stand before kings; he shall not stand before mean men.
American Standard Version (ASV)
Seest thou a man diligent in his business? he shall stand before kings; He shall not stand before mean men.
Bible in Basic English (BBE)
Have you seen a man who is expert in his business? he will take his place before kings; his place will not be among low persons.
Darby English Bible (DBY)
Hast thou seen a man diligent in his work? He shall stand before kings; he shall not stand before the mean.
World English Bible (WEB)
Do you see a man skilled in his work? He will serve kings; He won’t serve obscure men.
Young’s Literal Translation (YLT)
Hast thou seen a man speedy in his business? Before kings he doth station himself, He stations not himself before obscure men!
நீதிமொழிகள் Proverbs 22:29
தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.
Seest thou a man diligent in his business? he shall stand before kings; he shall not stand before mean men.
| חָזִ֡יתָ | ḥāzîtā | ha-ZEE-ta | |
| אִ֤ישׁ׀ | ʾîš | eesh | |
| מָ֘הִ֤יר | māhîr | MA-HEER | |
| בִּמְלַאכְתּ֗וֹ | bimlaktô | beem-lahk-TOH | |
| לִֽפְנֵֽי | lipĕnê | LEE-feh-NAY | |
| מְלָכִ֥ים | mĕlākîm | meh-la-HEEM | |
| יִתְיַצָּ֑ב | yityaṣṣāb | yeet-ya-TSAHV | |
| בַּל | bal | bahl | |
| יִ֝תְיַצֵּב | yityaṣṣēb | YEET-ya-tsave | |
| לִפְנֵ֥י | lipnê | leef-NAY | |
| חֲשֻׁכִּֽים׃ | ḥăšukkîm | huh-shoo-KEEM |
Cross Reference
நீதிமொழிகள் 10:4
சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.
ஆதியாகமம் 41:46
யோசேப்பு எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு முன்பாக நிற்கும்போது முப்பது வயதாயிருந்தான்; யோசேப்பு பார்வோனுடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, எகிப்துதேசம் எங்கும் போய்ச் சுற்றிப்பார்த்தான்.
2 தீமோத்தேயு 4:2
ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,
ரோமர் 12:11
அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.
மத்தேயு 25:23
அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
மத்தேயு 25:21
அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமான ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
பிரசங்கி 9:10
செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.
நீதிமொழிகள் 12:24
ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்; சோம்பேறியோ பகுதிகட்டுவான்.
1 இராஜாக்கள் 11:28
யெரொபெயாம் என்பவன் பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் காரிய சமர்த்தனான வாலிபன் என்று சாலொமோன் கண்டு, யோசேப்பு வம்சத்தாரின் காரியத்தையெல்லாம் அவன் விசாரிப்புக்கு ஒப்புவித்தான்.
1 இராஜாக்கள் 10:8
உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள்.
Tags தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால் அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல் ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்
Proverbs 22:29 in Tamil Concordance Proverbs 22:29 in Tamil Interlinear Proverbs 22:29 in Tamil Image