அப்பொழுது ஜனங்கள் மோசேயோடே வாதாடி: நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும் என்றார்கள். அதற்கு மோசே: என்னோடே ஏன் வாதாடுகிறீர்கள், கர்த்தரை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள் என்றான்.
ஜனங்கள் அவ்விடத்திலே தண்ணீர்த் தவனமாயிருந்தபடியால், அவர்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: நீர் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தவனத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டு வந்தீர் என்றார்கள்.
அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பரின் கண்களுக்கு முன்பாகச் செய்தான்.
இஸ்ரவேல் புத்திரர் வாதாடினதினிமித்தமும், கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரைப் பரீட்சை பார்த்ததினிமித்தமும், அவன் அந்த ஸ்தலத்திற்கு மாசா என்றும் மேரிபா என்றும் பேரிட்டான்.
அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு; நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான்.
அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான்.
| And all | וַ֠יִּסְעוּ | wayyisʿû | VA-yees-oo |
| the congregation | כָּל | kāl | kahl |
| of the children | עֲדַ֨ת | ʿădat | uh-DAHT |
| of Israel | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
| journeyed | יִשְׂרָאֵ֧ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| from the wilderness | מִמִּדְבַּר | mimmidbar | mee-meed-BAHR |
| of Sin, | סִ֛ין | sîn | seen |
| after their journeys, | לְמַסְעֵיהֶ֖ם | lĕmasʿêhem | leh-mahs-ay-HEM |
| according to | עַל | ʿal | al |
| the commandment | פִּ֣י | pî | pee |
| of the Lord, | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| and pitched | וַֽיַּחֲנוּ֙ | wayyaḥănû | va-ya-huh-NOO |
| in Rephidim: | בִּרְפִידִ֔ים | birpîdîm | beer-fee-DEEM |
| and there was no | וְאֵ֥ין | wĕʾên | veh-ANE |
| water | מַ֖יִם | mayim | MA-yeem |
| for the people | לִשְׁתֹּ֥ת | lištōt | leesh-TOTE |
| to drink. | הָעָֽם׃ | hāʿām | ha-AM |