அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷம் நிசான் மாதத்திலே, திராட்சரசம் ராஜாவுக்கு முன்பாக வைத்திருக்கையில், நான் அதை எடுத்து அவருக்குக் கொடுத்தேன்; நான் முன் ஒருபோதும் அவர் சமுகத்தில் துக்கமாயிருந்ததில்லை.
அப்பொழுது ராஜா என்னைப்பார்த்து: நீ துக்கமுகமாயிருக்கிறது என்ன? உனக்கு வியாதியில்லையே, இது மனதின் துக்கமே ஒழிய வேறொன்றும் அல்ல என்றார்; அப்பொழுது நான் மிகவும் பயந்து,
அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ கேட்கிற காரியம் என்ன என்றார். அப்பொழுது நான்: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி,
ராஜாவைப் பார்த்து: ராஜாவுக்குச் சித்தமாயிருந்து, அடியேனுக்கு உமது சமுகத்தில் தயை கிடைத்ததானால், என் பிதாக்களின் கல்லறைகளிலிருக்கும் பட்டணத்தைக் கட்டும்படி, யூதா தேசத்துக்கு நீர் என்னை அனுப்பவேண்டிக்கொள்ளுகிறேன் என்றேன்.
பின்னும் நான் ராஜாவைப் பார்த்து ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், நான் யூதாதேசத்துக்குப் போய்ச்சேருமட்டும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு அவர்களுக்குக் கடிதங்கள் கொடுக்கும்படிக்கும்,
தேவாலயத்துக்கு இருக்கிற அரணின் கதவு வேலைக்கும், நகர அலங்கத்தின் வேலைக்கும், நான் தங்கப்போகிற வீட்டின் வேலைக்கும் வேண்டிய மரங்களை ராஜாவின் வனத்துக் காவலாளனாகிய ஆசாப் எனக்குக் கொடுக்கும்படிக்கும், அவனுக்கும் ஒரு கடிதம் கட்டளையிடப்படுவதாக என்றேன்; என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தபடியால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார்.
நான் எருசலேமுக்கு வந்து, அங்கே மூன்றுநாள் இருந்தபின்பு,
நான் அன்று ராத்திரி பள்ளத்தாக்கின் வாசல்வழியாய்ப் புறப்பட்டு, வலுசர்ப்பத் துரவைக் கடந்து, குப்பைமேட்டு வாசலுக்கு வந்து, எருசலேமில் இடிந்துபோன அலங்கத்தையும், அக்கினியால் சுட்டெரிக்கப்பட்ட அதின் வாசல்களையும் பார்வையிட்டேன்.
அவ்விடத்தை விட்டு ஊருணி வாசலண்டைக்கும், ராஜாவின் குளத்தண்டைக்கும் போனேன்; நான் ஏறியிருந்த மிருகம் அங்கே நடந்துபோகிறதற்கு வழியில்லாதிருந்தது.
பின்பு நான் அவர்களை நோக்கி: எருசலேம் பாழாயிருக்கிறதையும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டுக்கிடக்கிறதையும், நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே; நாம் இனி நிந்தைக்குள்ளாயிராதபடிக்கு, எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி,
| And I arose | וָֽאָק֣וּם׀ | wāʾāqûm | va-ah-KOOM |
| in the night, | לַ֗יְלָה | laylâ | LA-la |
| I | אֲנִי֮ | ʾăniy | uh-NEE |
| and some few | וַֽאֲנָשִׁ֣ים׀ | waʾănāšîm | va-uh-na-SHEEM |
| men | מְעַט֮ | mĕʿaṭ | meh-AT |
| with | עִמִּי֒ | ʿimmiy | ee-MEE |
| me; neither | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| told | הִגַּ֣דְתִּי | higgadtî | hee-ɡAHD-tee |
| I any man | לְאָדָ֔ם | lĕʾādām | leh-ah-DAHM |
| what | מָ֗ה | mâ | ma |
| my God | אֱלֹהַי֙ | ʾĕlōhay | ay-loh-HA |
| had put | נֹתֵ֣ן | nōtēn | noh-TANE |
| in | אֶל | ʾel | el |
| my heart | לִבִּ֔י | libbî | lee-BEE |
| to do | לַֽעֲשׂ֖וֹת | laʿăśôt | la-uh-SOTE |
| at Jerusalem: | לִירֽוּשָׁלִָ֑ם | lîrûšālāim | lee-roo-sha-la-EEM |
| neither | וּבְהֵמָה֙ | ûbĕhēmāh | oo-veh-hay-MA |
| was there any beast | אֵ֣ין | ʾên | ane |
| with | עִמִּ֔י | ʿimmî | ee-MEE |
| me, save | כִּ֚י | kî | kee |
| אִם | ʾim | eem | |
| the beast | הַבְּהֵמָ֔ה | habbĕhēmâ | ha-beh-hay-MA |
| that | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| I | אֲנִ֖י | ʾănî | uh-NEE |
| rode upon. | רֹכֵ֥ב | rōkēb | roh-HAVE |
| בָּֽהּ׃ | bāh | ba |