எஸ்றா 3:1
இஸ்ரவேல் புத்திரர் பட்டணங்களிலே குடியேறி, ஏழாம் மாதமான போது, ஜனங்கள் ஏகோபித்து எருசலேமிலே கூடினார்கள்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேல் வம்சத்தார் பட்டணங்களிலே குடியேறி, ஏழாம் மாதமானபோது, மக்கள் ஒரேமனதுடன் எருசலேமிலே கூடினார்கள்.
Tamil Easy Reading Version
எனவே ஏழாவது மாதத்திலே, இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் சொந்த நகரங்களுக்குப் போய் சேர்ந்திருந்தார்கள். அப்போது, எருசலேமில் அனைத்து ஜனங்களும் கூடினர். அவர்கள் அனைவரும் ஒரே இனமாகக் கூடினர்.
Thiru Viviliam
தம் நகரில் வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள் ஏழாம் மாதம் வந்த போது எருசலேமில் ஒருசேரக் கூடினர்.
Title
பலிபீடத்தைத் திரும்பவும் கட்டுதல்
Other Title
வழிபாடு மீண்டும் நடைபெறல்
King James Version (KJV)
And when the seventh month was come, and the children of Israel were in the cities, the people gathered themselves together as one man to Jerusalem.
American Standard Version (ASV)
And when the seventh month was come, and the children of Israel were in the cities, the people gathered themselves together as one man to Jerusalem.
Bible in Basic English (BBE)
And when the seventh month came, and the children of Israel were in the towns, the people came together like one man to Jerusalem.
Darby English Bible (DBY)
And when the seventh month came, and the children of Israel were in the cities, the people gathered together as one man to Jerusalem.
Webster’s Bible (WBT)
And when the seventh month had come, and the children of Israel were in the cities, the people assembled themselves as one man at Jerusalem.
World English Bible (WEB)
When the seventh month was come, and the children of Israel were in the cities, the people gathered themselves together as one man to Jerusalem.
Young’s Literal Translation (YLT)
And the seventh month cometh, and the sons of Israel `are’ in the cities, and the people are gathered, as one men, unto Jerusalem.
எஸ்றா Ezra 3:1
இஸ்ரவேல் புத்திரர் பட்டணங்களிலே குடியேறி, ஏழாம் மாதமான போது, ஜனங்கள் ஏகோபித்து எருசலேமிலே கூடினார்கள்.
And when the seventh month was come, and the children of Israel were in the cities, the people gathered themselves together as one man to Jerusalem.
| וַיִּגַּע֙ | wayyiggaʿ | va-yee-ɡA | |
| הַחֹ֣דֶשׁ | haḥōdeš | ha-HOH-desh | |
| הַשְּׁבִיעִ֔י | haššĕbîʿî | ha-sheh-vee-EE | |
| וּבְנֵ֥י | ûbĕnê | oo-veh-NAY | |
| יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| בֶּֽעָרִ֑ים | beʿārîm | beh-ah-REEM | |
| וַיֵּאָֽסְפ֥וּ | wayyēʾāsĕpû | va-yay-ah-seh-FOO | |
| הָעָ֛ם | hāʿām | ha-AM | |
| כְּאִ֥ישׁ | kĕʾîš | keh-EESH | |
| אֶחָ֖ד | ʾeḥād | eh-HAHD | |
| אֶל | ʾel | el | |
| יְרֽוּשָׁלִָֽם׃ | yĕrûšāloim | yeh-ROO-sha-loh-EEM |
Cross Reference
லேவியராகமம் 23:24
நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால் உங்களுக்கு ஏழாம் மாதம் முதலாந்தேதி எக்காளச் சத்தத்தால் ஞாபகக்குறியாகக் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபை கூடும் பரிசுத்த ஓய்வுநாளாயிருப்பதாக.
1 கொரிந்தியர் 1:10
சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரேகாரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும்வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:32
விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:46
அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லலாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,
செப்பனியா 3:9
அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்.
நெகேமியா 8:14
அப்பொழுது நியாயப்பிரமாணத்திலே, இஸ்ரவேல் புத்திரர் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே கூடாரங்களில் குடியிருக்கவேண்டும் என்று கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்பித்த காரியம் எழுதியிருக்கிறதைக் கண்டவர்கள்.
நெகேமியா 7:73
ஆசாரியரும் லேவியரும், வாசல் காவலாளரும், பாடகரும், ஜனங்களில் சிலரும் நிதனீமியரும், இஸ்ரவேலர் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள்.
நியாயாதிபதிகள் 20:1
அப்பொழுது தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கீலேயாத் தேசத்தாருடன் மிஸ்பாவிலே கர்த்தருக்கு முன்பாக ஏகோபித்து சபையாகக் கூடினார்கள்.
எண்ணாகமம் 29:1
ஏழாம் மாதம் முதல்தேதி பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; அது உங்களுக்கு எக்காளமூதும் நாளாயிருக்கவேண்டும்.
லேவியராகமம் 23:27
அந்த ஏழாம் மாதம் பத்தாந்தேதி உங்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யும் நாளும் சபைகூடும் பரிசுத்தநாளுமாயிருப்பதாக; அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி, கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்.
லேவியராகமம் 16:29
ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே, சுதேசியானாலும் உங்களுக்குள் தங்கும் பரதேசியானாலும், தங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்துவதுமன்றி, ஒரு வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது.
யாத்திராகமம் 23:14
வருஷத்தில் மூன்றுதரம் எனக்குப் பண்டிகை ஆசரிப்பாயாக.
Tags இஸ்ரவேல் புத்திரர் பட்டணங்களிலே குடியேறி ஏழாம் மாதமான போது ஜனங்கள் ஏகோபித்து எருசலேமிலே கூடினார்கள்
Ezra 3:1 in Tamil Concordance Ezra 3:1 in Tamil Interlinear Ezra 3:1 in Tamil Image