Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 31:21 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 31 Jeremiah 31:21

எரேமியா 31:21
உனக்குக் குறிப்படையாளங்களை நிறுத்து; உனக்குத் தூண்களை நாட்டு; நீ நடந்த வழியாகிய பாதையின்மேல் உன் மனதை வை; இஸ்ரவேலாகிய குமாரத்தியே, திரும்பு; இந்த உன்னுடைய பட்டணங்களுக்கே திரும்பு.

Tamil Indian Revised Version
உனக்கு ஞாபகக்குறிகளை வை; உனக்குத் தூண்களை நாட்டு; நீ நடந்த வழியாகிய பாதையின்மேல் உன் மனதை வை; இஸ்ரவேலாகிய மகளே, திரும்பு; இந்த உன்னுடைய பட்டணங்களுக்கே திரும்பு.

Tamil Easy Reading Version
“இஸ்ரவேல் ஜனங்களே சாலை அடையாளங்களை வையுங்கள். வீட்டிற்கான வழியைக் காட்டும் அடையாளங்களை வையுங்கள். சாலையை கவனியுங்கள். நீங்கள் நடந்த வழியை நினைவுக்கொள்ளுங்கள். இஸ்ரவேலே, எனது மணமகளே, வீட்டிற்கு வா. உனது பட்டணங்களுக்குத் திரும்பி வா.

Thiru Viviliam
⁽உனக்கெனச் சாலை␢ அடையாளங்களை அமைத்துக்கொள்;␢ உனக்கெனக் “கைகாட்டிகளை␢ நாட்டிக்கொள்;␢ நீ நடந்து சென்ற வழியாகிய␢ நெடுஞ்சாலையை நினைவில் கொள்.␢ கன்னிப் பெண்ணாகிய இஸ்ரயேலே,␢ திரும்பி வா;␢ இந்த உன் நகரங்களுக்குத் திரும்பி வா.⁾

Jeremiah 31:20Jeremiah 31Jeremiah 31:22

King James Version (KJV)
Set thee up waymarks, make thee high heaps: set thine heart toward the highway, even the way which thou wentest: turn again, O virgin of Israel, turn again to these thy cities.

American Standard Version (ASV)
Set thee up waymarks, make thee guide-posts; set thy heart toward the highway, even the way by which thou wentest: turn again, O virgin of Israel, turn again to these thy cities.

Bible in Basic English (BBE)
Put up guiding pillars, make road signs for yourself: give attention to the highway, even the way in which you went: be turned again, O virgin of Israel, be turned to these your towns.

Darby English Bible (DBY)
Set up waymarks, make for thyself signposts; set thy heart toward the highway, the way by which thou wentest: turn again, O virgin of Israel, turn again to these thy cities.

World English Bible (WEB)
Set up road signs, make guideposts; set your heart toward the highway, even the way by which you went: turn again, virgin of Israel, turn again to these your cities.

Young’s Literal Translation (YLT)
Set up for thee signs, make for thee heaps, Set thy heart to the highway, the way thou wentest, Turn back, O virgin of Israel, Turn back unto these thy cities.

எரேமியா Jeremiah 31:21
உனக்குக் குறிப்படையாளங்களை நிறுத்து; உனக்குத் தூண்களை நாட்டு; நீ நடந்த வழியாகிய பாதையின்மேல் உன் மனதை வை; இஸ்ரவேலாகிய குமாரத்தியே, திரும்பு; இந்த உன்னுடைய பட்டணங்களுக்கே திரும்பு.
Set thee up waymarks, make thee high heaps: set thine heart toward the highway, even the way which thou wentest: turn again, O virgin of Israel, turn again to these thy cities.

הַצִּ֧יבִיhaṣṣîbîha-TSEE-vee
לָ֣ךְlāklahk
צִיֻּנִ֗יםṣiyyunîmtsee-yoo-NEEM
שִׂ֤מִיśimîSEE-mee
לָךְ֙lokloke
תַּמְרוּרִ֔יםtamrûrîmtahm-roo-REEM
שִׁ֣תִיšitîSHEE-tee
לִבֵּ֔ךְlibbēklee-BAKE
לַֽמְסִלָּ֖הlamsillâlahm-see-LA
דֶּ֣רֶךְderekDEH-rek
הָלָ֑כְתְּיhālākĕttĕyha-LA-heh-teh
שׁ֚וּבִיšûbîSHOO-vee
בְּתוּלַ֣תbĕtûlatbeh-too-LAHT
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
שֻׁ֖בִיšubîSHOO-vee
אֶלʾelel
עָרַ֥יִךְʿārayikah-RA-yeek
אֵֽלֶּה׃ʾēlleA-leh

Cross Reference

எரேமியா 50:5
மறக்கப்படாத நித்திய உடன்படிக்கையினால் நாம் கர்த்தரைச் சேர்ந்துகொள்வோம் வாருங்கள் என்று சீயோனுக்கு நேராய் முகங்களைத் திருப்பி, சீயோனுக்குப் போகிற வழி எதுவென்று கேட்டு விசாரிப்பார்கள்.

ஏசாயா 48:20
பாபிலோனிலிருந்து புறப்படுங்கள்; கல்தேயரைவிட்டு ஓடிவாருங்கள்; கர்த்தர் தம்முடைய தாசனாகிய யாக்கோபை மீட்டுக்கொண்டாரென்று சொல்லுங்கள்; இதைக் கெம்பீரசத்தமாய்க் கூறிப் பிரசித்தப்படுத்துங்கள் பூமியின் கடையாந்தரமட்டும் வெளிப்படுத்துங்கள் என்கிறார்.

ஏசாயா 62:10
வாசல்கள் வழியாய்ப் பிரவேசியுங்கள், பிரவேசியுங்கள்; ஜனத்துக்கு வழியைச் செவ்வைப்படுத்துங்கள், பாதையை உயர்த்துங்கள், உயர்த்துங்கள்; அதிலுள்ள கற்களைப் பொறுக்கிப்போடுங்கள்; ஜனங்களுக்காகக் கொடியை ஏற்றுங்கள்.

எரேமியா 3:14
சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள் நாயகர்; நான் உங்களை ஊரில் ஒருவனும் வம்சத்தில் இரண்டுபேருமாகத் தெரிந்து, உங்களைச் சீயோனுக்கு அழைத்துக்கொண்டுவந்து,

எரேமியா 31:4
இஸ்ரவேல் என்னும் கன்னிகையே, மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய்; மறுபடியும் நீ மேளவாத்தியத்தோடும் ஆடல்பாடல் செய்கிறவர்களின் களிப்புள்ள கூட்டத்தோடும் புறப்படுவாய்.

எரேமியா 51:50
பட்டயத்துக்குத் தப்பினவர்களே, தங்கித்தரியாமல் நடந்துவாருங்கள்; தூரத்திலே கர்த்தரை நினையுங்கள்; எருசலேம் உங்கள் ஞாபகத்தில் வரக்கடவது.

எசேக்கியேல் 40:4
அந்தப் புருஷன் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ கண்ணாரப்பார்த்து, காதாரக் கேட்டு, நான் உனக்குக் காண்பிப்பதெல்லாவற்றின் மேலும் உன் மனதை வை; நான் உனக்கு அவைகளைக் காண்பிக்கும்படி நீ இங்கே கொண்டுவரப்பட்டாய்; நீ காண்பதையெல்லாம் இஸ்ரவேல் வம்சத்தாருக்குத் தெரிவி என்றார்.

ஆகாய் 1:5
இப்போதும் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்.

சகரியா 2:6
ஓகோ, நீங்கள் எழும்பி வடதேசத்திலிருந்து ஓடிவாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆகாயத்து நான்கு திசைகளிலும் உங்களை நான் சிதறப்பண்ணினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 57:14
வழியை உயர்த்தி உயர்த்தி, அதைச் செம்மைப்படுத்தி, இடறல்களை என் ஜனத்தின் வழியிலிருந்து எடுத்துப்போடுங்கள் என்னப்படும்.

ஏசாயா 52:11
புறப்படுங்கள், புறப்படுங்கள், அவ்விடம்விட்டுப் போங்கள்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள்.

சங்கீதம் 84:5
உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும் தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்.

1 நாளாகமம் 29:3
இன்னும் என் தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையினால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சவதரித்த அனைத்தையும் தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன்.

2 நாளாகமம் 11:16
இப்படி மூன்று வருஷமட்டும் யூதாவின் ராஜ்யத்தைப் பலப்படுத்தி, சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாமைத் திடப்படுத்தினார்கள்; தாவீதும் சாலொமோனும் நடந்த வழியிலே மூன்றுவருஷமட்டும் நடந்தார்கள்.

2 நாளாகமம் 20:3
அப்பொழுது யோசபாத் பயந்து, கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான்

சங்கீதம் 62:10
கொடுமையை நம்பாதிருங்கள், கொள்ளையினால் பெருமை பாராட்டாதிருங்கள்; ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள்.

நீதிமொழிகள் 24:32
அதைக் கண்டு சிந்தனைபண்ணினேன்; அதை நோக்கிப் புத்தியடைந்தேன்.

எரேமியா 51:6
நீங்கள் பாபிலோனின் அக்கிரமத்தில் சங்காரமாகாதபடிக்கு அதின் நடுவிலிருந்து ஓடி, அவரவர் தங்கள் ஆத்துமாவைத் தப்புவியுங்கள்; இது கர்த்தர் அதினிடத்தில் பழிவாங்குகிற காலமாயிருக்கிறது; அவர் அதற்குப் பதில் செலுத்துவார்.

சகரியா 10:9
நான் அவர்களை ஜனங்களுக்குள்ளே இறைத்தபின்பு, அவர்கள் தூரதேசங்களிலே என்னை நினைத்து தங்கள் பிள்ளைகளோடுங்கூடப் பிழைத்துத் திரும்புவார்கள்.

உபாகமம் 32:46
அவர்களை நோக்கி: இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் உங்கள் பிள்ளைகள் செய்யும்படி கவனமாயிருக்க, நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கும்படி, நான் இன்று உங்களுக்குச்சாட்சியாய் ஒப்புவிக்கிற வார்த்தைகளையெல்லாம் உங்கள் மனதிலே வையுங்கள்.


Tags உனக்குக் குறிப்படையாளங்களை நிறுத்து உனக்குத் தூண்களை நாட்டு நீ நடந்த வழியாகிய பாதையின்மேல் உன் மனதை வை இஸ்ரவேலாகிய குமாரத்தியே திரும்பு இந்த உன்னுடைய பட்டணங்களுக்கே திரும்பு
Jeremiah 31:21 in Tamil Concordance Jeremiah 31:21 in Tamil Interlinear Jeremiah 31:21 in Tamil Image