Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 24:36 in Tamil

Home Bible Luke Luke 24 Luke 24:36

லூக்கா 24:36
இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

Tamil Indian Revised Version
இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

Tamil Easy Reading Version
அவர்கள் இருவரும் இவற்றைக் கூறிக்கொண்டிருந்தபோது சீஷர்களின் கூட்டத்தின் நடுவில் இயேசு நின்றிருந்தார். இயேசு அவர்களை நோக்கி, “உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக” என்றார்.

Thiru Viviliam
சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று அவர்களை வாழ்த்தினார்.

Other Title
இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்§(மத் 28:16-20; மாற் 16:14-18; யோவா 20:19-23; திப 1:6-8)

Luke 24:35Luke 24Luke 24:37

King James Version (KJV)
And as they thus spake, Jesus himself stood in the midst of them, and saith unto them, Peace be unto you.

American Standard Version (ASV)
And as they spake these things, he himself stood in the midst of them, and saith unto them, Peace `be’ unto you.

Bible in Basic English (BBE)
And while they were saying these things, he himself was among them, and said to them, Peace be with you!

Darby English Bible (DBY)
And as they were saying these things, he himself stood in their midst, and says to them, Peace [be] unto you.

World English Bible (WEB)
As they said these things, Jesus himself stood among them, and said to them, “Peace be to you.”

Young’s Literal Translation (YLT)
and as they are speaking these things, Jesus himself stood in the midst of them, and saith to them, `Peace — to you;’

லூக்கா Luke 24:36
இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
And as they thus spake, Jesus himself stood in the midst of them, and saith unto them, Peace be unto you.

ΤαῦταtautaTAF-ta
δὲdethay
αὐτῶνautōnaf-TONE
λαλούντωνlalountōnla-LOON-tone
αὐτὸςautosaf-TOSE
hooh
Ἰησοῦςiēsousee-ay-SOOS
ἔστηestēA-stay
ἐνenane
μέσῳmesōMAY-soh
αὐτῶνautōnaf-TONE
καὶkaikay
λέγειlegeiLAY-gee
αὐτοῖςautoisaf-TOOS
Εἰρήνηeirēnēee-RAY-nay
ὑμῖνhyminyoo-MEEN

Cross Reference

மாற்கு 16:14
அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும், அவர்களைக் கடிந்துகொண்டார்.

யோவான் 20:26
மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

யோவான் 14:27
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.

வெளிப்படுத்தின விசேஷம் 1:4
யோவான் ஆசியாவிலுள்ள ஏழுசபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்,

2 தெசலோனிக்கேயர் 3:16
சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.

1 கொரிந்தியர் 15:5
கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.

யோவான் 20:19
வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

யோவான் 16:33
என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.

லுூக்கா 10:5
ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள்.

மத்தேயு 10:13
அந்த வீடு பாத்திரமாயிருந்தால் நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால் நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்கு திரும்பக்கடவது;

ஏசாயா 57:18
அவர்கள் வழிகளை நான் பார்த்து, அவர்களைக் குணமாக்குவேன்; அவர்களை நடத்தி, திரும்பவும் அவர்களுக்கும் அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்பேன்.


Tags இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று உங்களுக்குச் சமாதானம் என்றார்
Luke 24:36 in Tamil Concordance Luke 24:36 in Tamil Interlinear Luke 24:36 in Tamil Image