இவ்விடத்திலே பிறக்கிற குமாரரையும் குமாரத்திகளையும் இந்ததேசத்தில் அவர்களைப் பெற்ற தாய்களையும் அவர்களைப் பெற்ற பிதாக்களையுங்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,
மகா கொடிய வியாதிகளால் சாவார்கள் அவர்களுக்காகப் புலம்புவாரும், அவர்களை அடக்கம்பண்ணுவாருமில்லை, நிலத்தின்மேல் எருவாவார்கள்; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் மடிந்துபோவார்கள்; அவைகளுடைய பிரேதம் ஆகாசத்துப்பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.
செத்தவர்கள் நிமித்தம் உண்டான துக்கத்தை ஆற்ற அவர்களுக்கு அப்பம் பங்கிடப்படுவதுமில்லை; ஒருவனுடைய தகப்பனுக்காவது, ஒருவனுடைய தாய்க்காவது துக்கப்படுகிறவர்களுக்குத் தேற்றரவின் பாத்திரத்தைக் குடிக்கக்கொடுப்பாருமில்லை.
ஏனெனில், இதோ, இவ்விடத்திலே நான் உங்கள் கண்களுக்கு முன்பாகவும், உங்கள் நாட்களிலுமே, சந்தோஷத்தின் சத்தத்தையும் மகிழ்ச்சியின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டின் சத்தத்தையும் ஓயப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
ஆதலால், உங்களை இந்ததேசத்திலிருந்து நீங்களும் உங்கள் பிதாக்களும் அறியாத தேசத்திற்குத் துரத்திவிடுவேன்; அங்கே இரவும் பகலும் அந்நியதேவர்களைச் சேவிப்பீர்கள்; அங்கே நான் உங்களுக்குத் தயை செய்வதில்லை.
இஸ்ரவேல் புத்திரரை வடதேசத்திலும் தாம் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்கள்; நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த அவர்களுடைய தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இதோ, நான் மீன்பிடிக்கிற அநேகரை அழைத்தனுப்புவேன் இவர்கள் அவர்களைப் பிடிப்பார்கள்; அதற்குப் பின்பு வேட்டைக்காரராகிய அநேகரை அழைத்தனுப்புவேன், இவர்கள் அவர்களை எல்லா மலைகளிலும், எல்லாக்குன்றுகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும் வேட்டையாடுவார்கள்.
என் கண்கள் அவர்களுடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கிறது; அவைகள் என் முகத்துக்கு முன்பாக மறைந்திருக்கிறதில்லை, அவர்களுடைய அக்கிரமம் என் கண்களுக்கு முன்பாக மறைவாயிருக்கிறதுமில்லை.
என் பெலனும், என் கோட்டையும், நெருக்கப்படுகிற நாளில் என் அடைக்கலமுமாகிய கர்த்தாவே, புறஜாதிகள் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து உம்மிடத்தில் வந்து: மெய்யாகவே, எங்கள் பிதாக்கள் பிரயோஜனமில்லாத பொய்யையும் மாயையையும் கைப்பற்றினார்கள் என்பார்கள்.
ஆதலால், இதோ, இப்பொழுது நான் அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் கரத்தையும் என் பெலத்தையுமே அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் நாமம் யேகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
| And it shall come to pass, | וְהָיָ֗ה | wĕhāyâ | veh-ha-YA |
| when | כִּ֤י | kî | kee |
| thou shalt shew | תַגִּיד֙ | taggîd | ta-ɡEED |
| this | לָעָ֣ם | lāʿām | la-AM |
| people | הַזֶּ֔ה | hazze | ha-ZEH |
| אֵ֥ת | ʾēt | ate | |
| all | כָּל | kāl | kahl |
| these | הַדְּבָרִ֖ים | haddĕbārîm | ha-deh-va-REEM |
| words, | הָאֵ֑לֶּה | hāʾēlle | ha-A-leh |
| and they shall say | וְאָמְר֣וּ | wĕʾomrû | veh-ome-ROO |
| unto | אֵלֶ֗יךָ | ʾēlêkā | ay-LAY-ha |
| thee, Wherefore | עַל | ʿal | al |
| מֶה֩ | meh | meh | |
| hath the Lord | דִבֶּ֨ר | dibber | dee-BER |
| pronounced | יְהוָ֤ה | yĕhwâ | yeh-VA |
| עָלֵ֙ינוּ֙ | ʿālênû | ah-LAY-NOO | |
| all | אֵ֣ת | ʾēt | ate |
| this | כָּל | kāl | kahl |
| great | הָרָעָ֤ה | hārāʿâ | ha-ra-AH |
| evil | הַגְּדוֹלָה֙ | haggĕdôlāh | ha-ɡeh-doh-LA |
| against | הַזֹּ֔את | hazzōt | ha-ZOTE |
| us? or what | וּמֶ֤ה | ûme | oo-MEH |
| is our iniquity? | עֲוֹנֵ֙נוּ֙ | ʿăwōnēnû | uh-oh-NAY-NOO |
| or what | וּמֶ֣ה | ûme | oo-MEH |
| is our sin | חַטָּאתֵ֔נוּ | ḥaṭṭāʾtēnû | ha-ta-TAY-noo |
| that | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| we have committed | חָטָ֖אנוּ | ḥāṭāʾnû | ha-TA-noo |
| against the Lord | לַֽיהוָ֥ה | layhwâ | lai-VA |
| our God? | אֱלֹהֵֽינוּ׃ | ʾĕlōhênû | ay-loh-HAY-noo |