நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான் என்றார்.
அப்பொழுது அந்த ஸ்திரீ தன் புருஷனிடத்தில் வந்து: தேவனுடைய மனுஷன் ஒருவர் என்னிடத்தில் வந்தார்; அவருடைய சாயல் தேவனுடைய தூதரின் சாயலைப்போல மகா பயங்கரமாயிருந்தது; எங்கேயிருந்து வந்தீர் என்று நான் அவரிடத்தில் கேட்கவில்லை; அவர் தம்முடைய நாமத்தை எனக்குச் சொல்லவுமில்லை.
தேவன் மனோவாவின் சத்தத்துக்குச் செவிகொடுத்தார்; அந்த ஸ்திரீ வயல் வெளியில் இருக்கும்போது தேவனுடைய தூதனானவர் திரும்பவும் அவளிடத்தில் வந்தார்; அப்பொழுது அவள் புருஷனாகிய மனோவா அவளோடே இருக்கவில்லை.
அக்கினிஜுவாலை பலிபீடத்திலிருந்து வானத்திற்கு நேராக எழும்பு கையில், கர்த்தருடைய தூதனானவர் பலிபீடத்தின் ஜுவாலையிலே ஏறிப்போனார்; அதை மனோவாவும் அவன் மனைவியும் கண்டு, தரையிலே முகங்குப்புற விழுந்தார்கள்.
அதற்கு அவன் மனைவி: கர்த்தர் நம்மைக் கொன்றுபோடச் சித்தமாயிருந்தால், அவர் நம்முடைய கையிலே சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் ஒப்புக்கொள்ளமாட்டார், இவைகளையெல்லாம் நமக்குக் காண்பிக்கவுமாட்டார், இவைகளை நமக்கு அறிவிக்கவுமாட்டார் என்றாள்.
பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள். அந்தப் பிள்ளை வளர்ந்தது; கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்.
| So Manoah | וַיִּקַּ֨ח | wayyiqqaḥ | va-yee-KAHK |
| took | מָנ֜וֹחַ | mānôaḥ | ma-NOH-ak |
| אֶת | ʾet | et | |
| a kid | גְּדִ֤י | gĕdî | ɡeh-DEE |
| הָֽעִזִּים֙ | hāʿizzîm | ha-ee-ZEEM | |
| with | וְאֶת | wĕʾet | veh-ET |
| a meat offering, | הַמִּנְחָ֔ה | hamminḥâ | ha-meen-HA |
| and offered | וַיַּ֥עַל | wayyaʿal | va-YA-al |
| it upon | עַל | ʿal | al |
| a rock | הַצּ֖וּר | haṣṣûr | HA-tsoor |
| unto the Lord: | לַֽיהוָ֑ה | layhwâ | lai-VA |
| and the angel did | וּמַפְלִ֣א | ûmapliʾ | oo-mahf-LEE |
| wondrously; | לַֽעֲשׂ֔וֹת | laʿăśôt | la-uh-SOTE |
| and Manoah | וּמָנ֥וֹחַ | ûmānôaḥ | oo-ma-NOH-ak |
| and his wife | וְאִשְׁתּ֖וֹ | wĕʾištô | veh-eesh-TOH |
| looked on. | רֹאִֽים׃ | rōʾîm | roh-EEM |