1 ⁽ஆண்டவரே, என் வழக்கின்␢ நியாயத்தைக் கேட்டருளும்;␢ என் வேண்டுதலை உற்றுக் கேளும்;␢ வஞ்சகமற்ற உதட்டினின்று எழும்␢ என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.⁾

2 ⁽உம் முன்னிலையினின்று␢ எனக்கு நீதி கிடைக்கட்டும்;␢ உம் கண்கள் நேரியன காணட்டும்.⁾

3 ⁽என் உள்ளத்தை ஆய்ந்தறியும்;␢ இரவு நேரத்தில் எனைச் சந்தித்திடும்;␢ என்னைப் புடமிட்டுப் பார்த்திடும்;␢ தீமை எதையும் என்னிடம் காணமாட்டீர்;␢ என் வாய் பிழை செய்யக்கூடாதென␢ உறுதி கொண்டேன்.⁾

4 ⁽பிற மானிடர் செய்வது போல் அல்லாமல்,␢ நீர் உரைத்த வாக்கிற்கிணங்க,␢ வன்முறையாளரின் வழிகளை விட்டு␢ விலகியுள்ளேன்.⁾

5 ⁽என் நடத்தை␢ உம் பாதைகளில் அமைந்துள்ளது;␢ என் காலடிகள்␢ உம் வழியினின்று பிறழவில்லை.⁾

6 ⁽இறைவா, நான் உம்மை நோக்கிக்␢ கூப்பிடுகின்றேன்; ஏனெனில், § நீர் எனக்குப் பதில் அளிப்பீர்.␢ என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்;␢ என் விண்ணப்பத்திற்குச் § செவிசாய்த்தருளும்.⁾

7 ⁽உமது வியத்தகு பேரன்பைக்␢ காண்பித்தருளும்;␢ உம்மிடம் அடைக்கலம் புகுவோரை␢ அவர்களுடைய எதிரிகளிடமிருந்து␢ உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே!⁾

8 ⁽உமது கண்ணின் மணியென␢ என்னைக் காத்தருளும்;␢ உம்முடைய சிறகுகளின் நிழலில்␢ என்னை மூடிக்கொள்ளும்.⁾

9 ⁽என்னை ஒழிக்கத் தேடும்␢ பொல்லாரிடமிருந்தும்␢ என்னைச் சூழ்ந்து கொண்ட␢ எதிரிகளிடமிருந்தும்␢ என்னை மறைத்துக் கொள்ளும்.⁾

10 ⁽அவர்கள் ஈவு இரக்கமற்ற கல்நெஞ்சர்கள்;␢ தங்கள் வாயினால்␢ இறுமாப்புடன் பேசுபவர்கள்.⁾

11 ⁽அவர்கள் என்னைப் பின் தொடர்கின்றனர்;␢ இதோ! என்னை § வளைத்துக் கொண்டனர்;␢ அவர்கள் என்னைத் தரையில் வீழ்த்துவதற்கு,␢ வைத்த கண் வாங்காது § காத்திருக்கின்றனர்.⁾

12 ⁽பீறிப்போடத் துடிக்கும்␢ சிங்கத்திற்கு அவர்கள் ஒப்பாவர்;␢ மறைவிடத்தில் பதுங்கியிருக்கும்␢ இளஞ்சிங்கத்திற்கு நிகராவர்.⁾

13 ⁽ஆண்டவரே, எழுந்து வாரும்;␢ அவர்களை நேருக்குநேர்␢ எதிர்த்து முறியடையும்;␢ பொல்லாரிடமிருந்து உமது வாளால்␢ என்னைக் காத்தருளும்.⁾

14 ⁽ஆண்டவரே, மாயும் மனிதரிடமிருந்து –␢ இவ்வுலகமே தங்கள் கதியென␢ வாழ்ந்து மாயும் மனிதரிடமிருந்து –␢ உமது கைவலிமையினால்␢ என்னைக் காப்பாற்றும். அவர்களுக்கென␢ நீர் ஒதுக்கி வைத்துள்ளவற்றால்␢ அவர்கள் வயிற்றை நிரப்பும்;␢ அவர்களின் மைந்தர்␢ வேண்டிய மட்டும் நிறைவு பெறட்டும்;␢ எஞ்சியிருப்பதைத் தங்கள் பிள்ளைகளுக்கு␢ விட்டுச்செல்லட்டும்;⁾

15 ⁽நானோ நேர்மையில் நிலைத்திருந்து␢ உமது முகம் காண்பேன்;␢ விழித்தெழும்போது,␢ உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன்.⁾