Song Of Solomon 3:2
நான் எழுந்து நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் திரிந்து, என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.
Tamil Indian Revised Version
நான் எழுந்து, நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் சுற்றி, என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.
Tamil Easy Reading Version
இப்போது எழுந்திருந்து நான் நகரைச் சுற்றி வருவேன். அங்குள்ள வீதிகளிலும் சந்துக்கங்களிலும் என் நேசரைத் தேடுவேன். நான் அவருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் என்னால் அவரைக் காணமுடியவில்லை.
Thiru Viviliam
⁽“எழுந்திடுவேன்; நகரத்தில்␢ சுற்றிவருவேன்;␢ தெருக்களிலும் நாற்சந்திகளிலும் சுற்றி␢ என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடுவேன்”␢ தேடினேன்; தேடியும் அவரைக்␢ கண்டேன் அல்லேன்!⁾
King James Version (KJV)
I will rise now, and go about the city in the streets, and in the broad ways I will seek him whom my soul loveth: I sought him, but I found him not.
American Standard Version (ASV)
`I said’, I will rise now, and go about the city; In the streets and in the broad ways I will seek him whom my soul loveth: I sought him, but I found him not.
Bible in Basic English (BBE)
I will get up now and go about the town, in the streets and in the wide ways I will go after him who is the love of my soul: I went after him, but I did not see him.
Darby English Bible (DBY)
I will rise now, and go about the city; In the streets and in the broadways Will I seek him whom my soul loveth: I sought him, but I found him not.
World English Bible (WEB)
I will get up now, and go about the city; In the streets and in the squares I will seek him whom my soul loves. I sought him, but I didn’t find him.
Young’s Literal Translation (YLT)
— Pray, let me rise, and go round the city, In the streets and in the broad places, I seek him whom my soul hath loved! — I sought him, and I found him not.
உன்னதப்பாட்டு Song of Solomon 3:2
நான் எழுந்து நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் திரிந்து, என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.
I will rise now, and go about the city in the streets, and in the broad ways I will seek him whom my soul loveth: I sought him, but I found him not.
| אָק֨וּמָה | ʾāqûmâ | ah-KOO-ma | |
| נָּ֜א | nāʾ | na | |
| וַאֲסוֹבְבָ֣ה | waʾăsôbĕbâ | va-uh-soh-veh-VA | |
| בָעִ֗יר | bāʿîr | va-EER | |
| בַּשְּׁוָקִים֙ | baššĕwāqîm | ba-sheh-va-KEEM | |
| וּבָ֣רְחֹב֔וֹת | ûbārĕḥōbôt | oo-VA-reh-hoh-VOTE | |
| אֲבַקְשָׁ֕ה | ʾăbaqšâ | uh-vahk-SHA | |
| אֵ֥ת | ʾēt | ate | |
| שֶׁאָהֲבָ֖ה | šeʾāhăbâ | sheh-ah-huh-VA | |
| נַפְשִׁ֑י | napšî | nahf-SHEE | |
| בִּקַּשְׁתִּ֖יו | biqqaštîw | bee-kahsh-TEEOO | |
| וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH | |
| מְצָאתִֽיו׃ | mĕṣāʾtîw | meh-tsa-TEEV |
Cross Reference
சங்கீதம் 22:1
என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?
1 கொரிந்தியர் 15:34
நீங்கள் பாவஞ்செய்யாமல் நீதிக்கேற்க விழித்துக்கொண்டு, தெளிந்தவர்களாயிருங்கள்; சிலர் தேவனைப்பற்றி அறிவில்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன்.
ரோமர் 13:11
நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.
யோவான் 1:6
தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான்.
லுூக்கா 14:21
அந்த ஊழியக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான்; அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் ஊழியக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப்போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக்கொண்டுவா என்றான்.
மத்தேயு 26:40
பின்பு, அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி: நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா?
எரேமியா 5:1
நியாயஞ்செய்கிற மனுஷனைக் கண்டுபிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின் தெருக்களிலே திரிந்துபார்த்து, விசாரித்து, அதின் வீதிகளிலே தேடுங்கள்; காண்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன்.
ஏசாயா 64:7
உமது நாமத்தை நோக்கிக் கூப்பிடுகிறவனும், உம்மைப் பற்றிக்கொள்ளும்படிக்கு விழித்துக்கொள்ளுகிறவனும் இல்லை; தேவரீர் உம்முடைய முகத்தை எங்களை விட்டு மறைத்து, எங்கள் அக்கிரமங்களினிமித்தம் எங்களைக் கரையப்பண்ணுகிறீர்.
உன்னதப்பாட்டு 5:5
என் நேசருக்குக் கதவைத்திறக்க நான் எழுந்தேன்; பூட்டின கைப்பிடிகளில்மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும், என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது.
நீதிமொழிகள் 8:34
என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.
நீதிமொழிகள் 8:2
அது வழியருகேயுள்ள மேடைகளிலும், நாற்சந்திகளிலும் நிற்கிறது.
நீதிமொழிகள் 1:20
ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, வீதிகளில் சத்தமிடுகிறது.
சங்கீதம் 77:7
ஆண்டவர் நித்தியகாலமாய்த் தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயைசெய்யாதிருப்பாரோ?
சங்கீதம் 43:2
என் அரணாகிய தேவன் நீர்; ஏன் என்னைத் தள்ளிவிடுகிαீர்? சத்துருவிΩால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கதύதுடனே திரியவேண்டும்?
சங்கீதம் 42:7
உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; உமது அலைகளும் திரைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது.
எபேசியர் 5:14
ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்.
Tags நான் எழுந்து நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் திரிந்து என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன் தேடியும் நான் அவரைக் காணவில்லை
Song of Solomon 3:2 in Tamil Concordance Song of Solomon 3:2 in Tamil Interlinear Song of Solomon 3:2 in Tamil Image