Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 39:17 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 39 Ezekiel 39:17

எசேக்கியேல் 39:17
மனுபுத்திரனே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ சகலவித பட்சிகளையும் வெளியில் இருக்கிற சகல மிருகங்களையும் நோக்கி: நீங்கள் ஏகமாய்க் கூடிக்கொண்டு, இஸ்ரவேலின் மலைகளில் நான் உங்களுக்காகச் செய்யும் யாகமாகிய மகா யாகத்துக்குச் சுற்றிலுமிருந்து வந்துசேர்ந்து, மாம்சம் தின்று இரத்தங்குடியுங்கள்.

Tamil Indian Revised Version
மனிதகுமாரனே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ எல்லாவித பறவைகளையும் வெளியில் இருக்கிற எல்லா மிருகங்களையும் நோக்கி: நீங்கள் ஏகமாகக் கூடிக்கொண்டு, இஸ்ரவேலின் மலைகளில் நான் உங்களுக்காகச் செய்யும் யாகமாகிய மகா யாகத்திற்குச் சுற்றிலுமிருந்து வந்து சேர்ந்து, இறைச்சியைச் சாப்பிட்டு இரத்தம் குடியுங்கள்.

Tamil Easy Reading Version
எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: “மனுபுத்திரனே, எனக்காக எல்லாப் பறவைகளிடமும் காட்டு மிருகங்களிடமும் பேசு: ‘இங்கே வாருங்கள்! இங்கே வாருங்கள்! சுற்றிலும் கூடுங்கள். நான் உங்களுக்காகத் தயார் செய்து வைத்த இந்தப் பலியை உண்ணுங்கள், இஸ்ரவேலின் மலைகளில் மிகப் பெரிய பலி இருக்கும். வாருங்கள் இறைச்சியைத் தின்று இரத்தத்தைக் குடியுங்கள்.

Thiru Viviliam
மானிடா! தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: எல்லாப் பறவைகளையும் எல்லாக் காட்டுவிலங்குகளையும் அழைத்துச் சொல்; வாருங்கள்! எப்பக்கமுமிருந்து நான் தயாரிக்கும் என் பலிக்கு ஒன்று திரண்டு வாருங்கள். உங்களுக்கென இஸ்ரயேல் மலையில் நடைபெறும் பெரிய பலி அது. நீங்கள் அங்கே இறைச்சி உண்டு, இரத்தம் குடிக்கலாம்.

Ezekiel 39:16Ezekiel 39Ezekiel 39:18

King James Version (KJV)
And, thou son of man, thus saith the Lord GOD; Speak unto every feathered fowl, and to every beast of the field, Assemble yourselves, and come; gather yourselves on every side to my sacrifice that I do sacrifice for you, even a great sacrifice upon the mountains of Israel, that ye may eat flesh, and drink blood.

American Standard Version (ASV)
And thou, son of man, thus saith the Lord Jehovah: Speak unto the birds of every sort, and to every beast of the field, Assemble yourselves, and come; gather yourselves on every side to my sacrifice that I do sacrifice for you, even a great sacrifice upon the mountains of Israel, that ye may eat flesh and drink blood.

Bible in Basic English (BBE)
And you, son of man, this is what the Lord has said: Say to the birds of every sort and to all the beasts of the field, Get together and come; come together on every side to the offering which I am putting to death for you, a great offering on the mountains of Israel, so that you may have flesh for your food and blood for your drink.

Darby English Bible (DBY)
And thou, son of man, thus saith the Lord Jehovah: Speak unto the birds of every wing, and to every beast of the field, Gather yourselves together and come, assemble yourselves on every side to my sacrifice which I sacrifice for you, a great sacrifice upon the mountains of Israel, that ye may eat flesh, and drink blood.

World English Bible (WEB)
You, son of man, thus says the Lord Yahweh: Speak to the birds of every sort, and to every animal of the field, Assemble yourselves, and come; gather yourselves on every side to my sacrifice that I do sacrifice for you, even a great sacrifice on the mountains of Israel, that you may eat flesh and drink blood.

Young’s Literal Translation (YLT)
And thou, son of man, thus said the Lord Jehovah: Say to the bird — every wing, and to every beast of the field: Be assembled and come in, Be gathered from round about, For My sacrifice that I am sacrificing for you, A great sacrifice on mountains of Israel, And ye have eaten flesh, and drunk blood.

எசேக்கியேல் Ezekiel 39:17
மனுபுத்திரனே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ சகலவித பட்சிகளையும் வெளியில் இருக்கிற சகல மிருகங்களையும் நோக்கி: நீங்கள் ஏகமாய்க் கூடிக்கொண்டு, இஸ்ரவேலின் மலைகளில் நான் உங்களுக்காகச் செய்யும் யாகமாகிய மகா யாகத்துக்குச் சுற்றிலுமிருந்து வந்துசேர்ந்து, மாம்சம் தின்று இரத்தங்குடியுங்கள்.
And, thou son of man, thus saith the Lord GOD; Speak unto every feathered fowl, and to every beast of the field, Assemble yourselves, and come; gather yourselves on every side to my sacrifice that I do sacrifice for you, even a great sacrifice upon the mountains of Israel, that ye may eat flesh, and drink blood.

וְאַתָּ֨הwĕʾattâveh-ah-TA
בֶןbenven
אָדָ֜םʾādāmah-DAHM
כֹּֽהkoh
אָמַ֣ר׀ʾāmarah-MAHR
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
יְהוִֹ֗הyĕhôiyeh-hoh-EE
אֱמֹר֩ʾĕmōray-MORE
לְצִפּ֨וֹרlĕṣippôrleh-TSEE-pore
כָּלkālkahl
כָּנָ֜ףkānāpka-NAHF
וּלְכֹ֣ל׀ûlĕkōloo-leh-HOLE
חַיַּ֣תḥayyatha-YAHT
הַשָּׂדֶ֗הhaśśādeha-sa-DEH
הִקָּבְצ֤וּhiqqobṣûhee-kove-TSOO
וָבֹ֙אוּ֙wābōʾûva-VOH-OO
הֵאָסְפ֣וּhēʾospûhay-ose-FOO
מִסָּבִ֔יבmissābîbmee-sa-VEEV
עַלʿalal
זִבְחִ֗יzibḥîzeev-HEE
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
אֲנִ֜יʾănîuh-NEE
זֹבֵ֤חַzōbēaḥzoh-VAY-ak
לָכֶם֙lākemla-HEM
זֶ֣בַחzebaḥZEH-vahk
גָּד֔וֹלgādôlɡa-DOLE
עַ֖לʿalal
הָרֵ֣יhārêha-RAY
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
וַאֲכַלְתֶּ֥םwaʾăkaltemva-uh-hahl-TEM
בָּשָׂ֖רbāśārba-SAHR
וּשְׁתִ֥יתֶםûšĕtîtemoo-sheh-TEE-tem
דָּֽם׃dāmdahm

Cross Reference

செப்பனியா 1:7
கர்த்தராகிய ஆண்டவருக்கு முன்பாக மெளனமாயிருங்கள்; கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது; கர்த்தர் ஒரு யாகத்தை ஆயத்தம்பண்ணி, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார்.

எசேக்கியேல் 39:4
நீயும் உன் எல்லா இராணுவங்களும் உன்னோடிருக்கிற ஜனங்களும் இஸ்ரவேல் மலைகளில் விழுவீர்கள்; உராய்ஞ்சுகிற சகலவித பட்சிகளுக்கும் வெளியின் மிருகங்களுக்கும் உன்னை இரையாகக்கொடுப்பேன்.

எரேமியா 12:9
என் சுதந்தரம் பலவருணமான பட்சியைப்போல எனக்காயிற்று; ஆகையால், பட்சிகள் அதைச் சுற்றிலும் வருவதாக; வெளியில் சகல ஜீவன்களே அதைப் பட்சிக்கும்படி கூடிவாருங்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 19:17
பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக்கண்டேன்; அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து:

ஏசாயா 56:9
வெளியில் சஞ்சரிக்கிற சகல மிருகங்களே, காட்டிலுள்ள சகல மிருகங்களே, பட்சிக்க வாருங்கள்.

ஏசாயா 34:6
போஸ்றாவிலே கர்த்தருக்கு ஒரு யாகமும், ஏதோம் தேசத்திலே மகாசங்காரமும் உண்டு; கர்த்தருடைய பட்டயம் இரத்தத்தில் திருப்தியாகி, நிணத்தினால் பூரிக்கின்றது; ஆட்டுக்குட்டிகள் கடாக்களுடைய இரத்தத்தினாலும், ஆட்டுக்கடாக்களுடைய குண்டிக்காய்களின் கொழுப்பினாலும் திருப்தியாகும்.

எரேமியா 46:10
ஆனாலும், இது சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரின் நாளும், அவர் தம்முடைய சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிற நாளுமாயிருக்கிறது; ஆகையால், பட்டயம் பட்சித்து, அவர்களுடைய இரத்தத்தால் திருப்தியாகி வெறித்திருக்கும்; வடதேசத்தில் ஐப்பிராத்து நதியண்டையிலே சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவருக்கு ஒரு யாகமும் உண்டு.

ஏசாயா 18:6
அவைகள் ஏகமாய் மலைகளின் பட்சிகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் விடப்படும்; பட்சிகள் அதின்மேல் கோடைகாலத்திலும், காட்டுமிருகங்களெல்லாம் அதின்மேல் மாரிகாலத்திலும் தங்கும்.

1 சாமுவேல் 17:46
இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னை விட்டு வாங்கி, பெலிஸ்தருடைய பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்து கொள்ளுவார்கள்.

1 சாமுவேல் 16:3
ஈசாயைப் பலிவிருந்துக்கு அழைப்பாயாக; அப்பொழுது நீ செய்யவேண்டியதை நான் உனக்கு அறிவிப்பேன்; நான் உனக்குச் சொல்லுகிறவனை எனக்காக அபிஷேகம்பண்ணுவாயாக என்றார்.

1 சாமுவேல் 9:13
நீங்கள் பட்டணத்திற்குள் பிரவேசித்தவுடனே, அவர் மேடையின்மேல் போஜனம் பண்ணப்போகிறதற்கு முன்னே அவரைக் காண்பீர்கள்; அவர் வருமட்டும் ஜனங்கள் போஜனம் பண்ணமாட்டார்கள்; பலியிட்டதை அவர் ஆசீர்வதிப்பார்; பின்பு அழைக்கப்பட்டவர்கள் போஜனம் பண்ணுவார்கள்; உடனே போங்கள்; இந்நேரத்திலே அவரைக் கண்டுகொள்ளலாம் என்றார்கள்.

ஆதியாகமம் 31:54
பின்பு யாக்கோபு மலையின்மேல் பலியிட்டு, போஜனம்பண்ணும்படி தன் சகோதரரை அழைத்தான்; அப்படியே அவர்கள் போஜனம்பண்ணி மலையிலே இராத்தங்கினார்கள்.


Tags மனுபுத்திரனே கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் நீ சகலவித பட்சிகளையும் வெளியில் இருக்கிற சகல மிருகங்களையும் நோக்கி நீங்கள் ஏகமாய்க் கூடிக்கொண்டு இஸ்ரவேலின் மலைகளில் நான் உங்களுக்காகச் செய்யும் யாகமாகிய மகா யாகத்துக்குச் சுற்றிலுமிருந்து வந்துசேர்ந்து மாம்சம் தின்று இரத்தங்குடியுங்கள்
Ezekiel 39:17 in Tamil Concordance Ezekiel 39:17 in Tamil Interlinear Ezekiel 39:17 in Tamil Image