1 ⁽“சமாரியா மலைமேல் வாழும் பாசான்␢ பசுக்களே! இந்த வாக்கைக் கேளுங்கள்;␢ ஏழைகளை ஒடுக்கி,␢ வறியோரை நசுக்குகின்ற நீங்கள்␢ உங்கள் கணவர்களைப் பார்த்து,␢ “கொண்டுவாருங்கள், குடிப்போம்” என்று சொல்கிறீர்கள்.⁾

2 ⁽இறைவனாகிய ஆண்டவர்␢ தம் புனிதத்தின்மேல்␢ ஆணையிட்டுக் கூறுவது இதுவே:␢ “உங்களுக்கு அந்த நாள்கள்␢ வருகின்றன;␢ அப்பொழுது அவர்கள் உங்களைக்␢ கொக்கிகளாலும்,␢ உங்களுள் எஞ்சியிருப்போரைத்␢ தூண்டில்களாலும்␢ இழுத்துக் கொண்டு போவார்கள்.⁾

3 ⁽நீங்கள் ஒருவர் பின் ஒருவராய்␢ அருகிலுள்ள கோட்டையின்␢ பிளவு வழியாய் வெளியேற்றப்பட்டு␢ அர்மோனை நோக்கித்␢ தள்ளப்படுவீர்கள்”␢ என்கிறார் ஆண்டவர்.⁾

4 ⁽“வாருங்கள், பெத்தேலுக்கு வந்து␢ குற்றம் செய்யுங்கள்;␢ கில்காலுக்கு வந்து␢ குற்றங்களைப் பெருக்குங்கள்;␢ நாள்தோறும் காலையில்␢ உங்கள் பலிகளைக்␢ கொண்டு வாருங்கள்;␢ மூன்று நாளைக்கு ஒருமுறை␢ பத்திலொரு பங்கையும் செலுத்துங்கள்.⁾

5 ⁽புளித்த மாவின் அப்பத்தைக்␢ கொண்டுவந்து␢ நன்றிப் பலியாகப் படையுங்கள்;␢ நேர்ச்சைகளைச் செலுத்தி␢ அவற்றை விளம்பரப்படுத்துங்கள்.␢ இஸ்ரயேல் மக்களே,␢ இப்படிச் செய்வதுதானே␢ உங்கள் விருப்பம்”,␢ என்கிறார் ஆண்டவர்.⁾

6 ⁽“உங்கள் நகர்களில் எல்லாம்␢ உங்கள் பற்களுக்கு␢ வேலை இல்லாமல் செய்தேன்;␢ நீங்கள் குடியிருக்கும்␢ இடங்களிலெல்லாம்␢ உணவுப் பற்றாக்குறையை␢ உண்டாக்கினேன்;␢ ஆயினும் நீங்கள்␢ என் பக்கம் திரும்பவில்லை”␢ என்கிறார் ஆண்டவர்.⁾

7 ⁽“நீங்கள் அறுவடை செய்ய␢ மூன்று மாதம் இருந்த போதே␢ உங்களுக்கு மழையை நிறுத்திவிட்டேன்;␢ ஓர் ஊரில் மழைபெய்யச் செய்து␢ அடுத்த ஊரில்␢ வறட்சியை உண்டாக்கினேன்.␢ ஒரு வயலில் மழை பெய்யச் செய்தேன்.␢ வேறொரு வயல்␢ மழையின்றிக் காய்ந்து போயிற்று.⁾

8 ⁽ஆகையால், இரண்டு மூன்று␢ நகர்களின் மக்கள்␢ தண்ணீர் தேடித் தள்ளாடித் திரிந்து␢ வேறொரு நகருக்குப் போயும்␢ அவர்கள் தாகம் தீரவில்லை;␢ இப்படியெல்லாம் செய்தும்␢ நீங்கள் என் பக்கம் திரும்பவில்லை”␢ என்கிறார் ஆண்டவர்.⁾

9 ⁽‘வெப்பக் காற்றாலும்␢ பயிரழிக்கும் நோயாலும்␢ உங்களை வதைத்தேன்.␢ உங்கள் தோப்புகளையும்␢ திராட்சைத் தோட்டங்களையும்␢ அழித்தேன்;␢ அத்திமரங்களையும் ஒலிவமரங்களையும்␢ வெட்டுக்கிளி தின்றது;␢ ஆயினும் நீங்கள்␢ என்பக்கம் திரும்பவில்லை,”␢ என்கிறார் ஆண்டவர்.⁾

10 ⁽“எகிப்தின்மீது அனுப்பிய␢ கொள்ளை நோய் போன்ற␢ கொடிய நோயை␢ உங்கள்மீதும் அனுப்பினேன்;␢ உங்கள் இளைஞர்களை␢ வாளால் வெட்டி வீழ்த்தினேன்;␢ உங்கள் குதிரைகளும்␢ கொள்ளை போயின;␢ உங்கள் பாளையங்களில்␢ செத்தவர்களின் பிணநாற்றம்␢ உங்கள் மூக்கில் ஏறும்படி செய்தேன்;␢ ஆயினும் நீங்கள்␢ என் பக்கம் திரும்பவில்லை,”␢ என்கிறார் ஆண்டவர்.⁾

11 ⁽“சோதோம், கொமோராவின் மக்களைக்␢ கடவுள் அழித்ததுபோல␢ உங்களுள் சிலரை அழித்தேன்.␢ நீங்களோ,␢ நெருப்பிலிருந்து இழுக்கப்பட்ட␢ கொள்ளிக் கட்டைபோல் ஆனீர்கள்;␢ ஆயினும் நீங்கள்␢ என்பக்கம் திரும்பவில்லை”␢ என்கிறார் ஆண்டவர்.⁾

12 ⁽“ஆகையால், இஸ்ரயேலே!␢ உனக்கும் இவ்வாறே செய்வேன்,␢ இஸ்ரயேலே!␢ இப்படி நான் செய்யப் போவதால்␢ உன் கடவுளைச் சந்திக்கத் தயாராயிரு!”⁾

13 ⁽ஏனெனில், மலைகளை உருவாக்கியர் அவரே;␢ காற்றைத் தோற்றுவிப்பவர் அவரே;␢ தம் எண்ணத்தை மனிதனுக்கு␢ வெளிப்படுத்துபவரும் அவரே;␢ காலைப்பொழுதைக்␢ காரிருள் ஆகச்செய்பவரும் அவரே;␢ நிலத்தின் உயர்ந்த இடங்களில்␢ நடமாடுபவரும் அவரே;␢ படைகளின் கடவுளாகிய␢ ஆண்டவர் என்பதே அவரது பெயராகும்.⁾