மோசே மாத்திரம் கர்த்தரிடத்தில் சமீபித்து வரலாம்; அவர்கள் சமீபித்து வரலாகாது; ஜனங்கள் அவனோடேகூட ஏறிவரவேண்டாம் என்றார்.
பின்பு மோசேயும் ஆரோனும் நாதாபும் அபியூவும், இஸ்ரவேலருடைய மூப்பரில் எழுபதுபேரும் ஏறிப்போய்,
இஸ்ரவேலின் தேவனைத் தரிசித்தார்கள். அவருடைய பாதத்தின்கீழே நீலக்கல்லிழைத்த வேலைக்கு ஒப்பாகவும் தெளிந்த வானத்தின் பிரபைக்கு ஒப்பாகவும் இருந்தது.
அவர் இஸ்ரவேல் புத்திரருடைய அதிபதிகள்மேல் தம்முடைய கையை நீட்டவில்லை; அவர்கள் தேவனைத் தரிசித்து, பின்பு புசித்துக் குடித்தார்கள்.
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு; நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு உபதேசிப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன் என்றார்.
அப்பொழுது மோசே தன் ஊழியக்காரனாகிய யோசுவாவோடே எழுந்து போனான். மோசே தேவ பர்வதத்தில் ஏறிப்போகையில்,
அவன் மூப்பரை நோக்கி: நாங்கள் உங்களிடத்தில் திரும்பிவருமட்டும், நீங்கள் இங்கே எங்களுக்காகக் காத்திருங்கள்; ஆரோனும் ஊரும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; ஒருவனுக்கு யாதொரு காரியம் உண்டானால், அவன் அவர்களிடத்தில் போகலாம் என்றான்.
மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடிற்று.
கர்த்தருடைய மகிமை சீனாய்மலையின்மேல் தங்கியிருந்தது; மேகம் ஆறு நாள் அதை மூடியிருந்தது; ஏழாம் நாளில் அவர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார்.
மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தான்.
| And he said | וְאֶל | wĕʾel | veh-EL |
| unto | מֹשֶׁ֨ה | mōše | moh-SHEH |
| Moses, | אָמַ֜ר | ʾāmar | ah-MAHR |
| Come up | עֲלֵ֣ה | ʿălē | uh-LAY |
| unto | אֶל | ʾel | el |
| the Lord, | יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA |
| thou, | אַתָּה֙ | ʾattāh | ah-TA |
| and Aaron, | וְאַֽהֲרֹן֙ | wĕʾahărōn | veh-ah-huh-RONE |
| Nadab, | נָדָ֣ב | nādāb | na-DAHV |
| and Abihu, | וַֽאֲבִיה֔וּא | waʾăbîhûʾ | va-uh-vee-HOO |
| and seventy | וְשִׁבְעִ֖ים | wĕšibʿîm | veh-sheev-EEM |
| of the elders | מִזִּקְנֵ֣י | mizziqnê | mee-zeek-NAY |
| of Israel; | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| and worship | וְהִשְׁתַּֽחֲוִיתֶ֖ם | wĕhištaḥăwîtem | veh-heesh-ta-huh-vee-TEM |
| ye afar off. | מֵֽרָחֹֽק׃ | mērāḥōq | MAY-ra-HOKE |