புலம்பல் 4:7
அவளுடைய நசரேயர் உறைந்த மழையைப்பார்க்கிலும் சுத்தமும், பாலைப்பார்க்கிலும் வெண்மையும், பவளத்தைப்பார்க்கிலும் சிவப்பும், இந்திரநீலத்தைப் பார்க்கிலும் மேனியுமாயிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
அவளுடைய தலைவர்கள் உறைந்த மழையைவிட சுத்தமும், பாலைவிட வெண்மையும், பவளத்தைவிட சிவப்பும், இந்திரநீலத்தைவிட பலமுள்ள தோற்றமுமாக இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
யூதாவிலுள்ள சில புருஷர்கள் விசேஷ முறையில் தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டனர். அம்மனிதர் மிகவும் பரிசுத்தமானவர்கள். அவர்கள் பனியைவிட வெள்ளையானவர்கள். அவர்கள் பாலைவிட வெண்மையானவர்கள். அவர்களின் உடல்கள் பவளத்தைப்போன்று சிவந்தவை. அவர்களின் தாடிகள் இந்திர நீலக் கற்களாயிருந்தன.
Thiru Viviliam
⁽அவள் இளவரசர்␢ பனியினும் தூயவராய்ப்␢ பாலினும் வெண்மையராய்ப்␢ பவளத்தினும் சிவந்த மேனியராய்␢ நீல மணிக் கட்டழகராய் இருந்தனர்!⁾
King James Version (KJV)
Her Nazarites were purer than snow, they were whiter than milk, they were more ruddy in body than rubies, their polishing was of sapphire:
American Standard Version (ASV)
Her nobles were purer than snow, they were whiter than milk; They were more ruddy in body than rubies, their polishing was as of sapphire.
Bible in Basic English (BBE)
Her holy ones were cleaner than snow, they were whiter than milk, their bodies were redder than corals, their form was as the sapphire:
Darby English Bible (DBY)
Her Nazarites were purer than snow, whiter than milk; they were more ruddy in body than rubies, their figure was as sapphire.
World English Bible (WEB)
Her nobles were purer than snow, they were whiter than milk; They were more ruddy in body than rubies, their polishing was as of sapphire.
Young’s Literal Translation (YLT)
Purer were her Nazarites than snow, Whiter than milk, ruddier of body than rubies, Of sapphire their form.
புலம்பல் Lamentations 4:7
அவளுடைய நசரேயர் உறைந்த மழையைப்பார்க்கிலும் சுத்தமும், பாலைப்பார்க்கிலும் வெண்மையும், பவளத்தைப்பார்க்கிலும் சிவப்பும், இந்திரநீலத்தைப் பார்க்கிலும் மேனியுமாயிருந்தார்கள்.
Her Nazarites were purer than snow, they were whiter than milk, they were more ruddy in body than rubies, their polishing was of sapphire:
| זַכּ֤וּ | zakkû | ZA-koo | |
| נְזִירֶ֙יהָ֙ | nĕzîrêhā | neh-zee-RAY-HA | |
| מִשֶּׁ֔לֶג | miššeleg | mee-SHEH-leɡ | |
| צַח֖וּ | ṣaḥû | tsa-HOO | |
| מֵחָלָ֑ב | mēḥālāb | may-ha-LAHV | |
| אָ֤דְמוּ | ʾādĕmû | AH-deh-moo | |
| עֶ֙צֶם֙ | ʿeṣem | EH-TSEM | |
| מִפְּנִינִ֔ים | mippĕnînîm | mee-peh-nee-NEEM | |
| סַפִּ֖יר | sappîr | sa-PEER | |
| גִּזְרָתָֽם׃ | gizrātām | ɡeez-ra-TAHM |
Cross Reference
சங்கீதம் 51:7
நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.
உன்னதப்பாட்டு 5:10
என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம்பேர்களில் சிறந்தவர்.
ஆமோஸ் 2:11
உங்கள் குமாரரில் சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும் உங்கள் வாலிபரில் சிலரை நசரேயராகவும் எழும்பப்பண்ணினேன்; இஸ்ரவேல் புத்திரரே, இப்படி நான் செய்யவில்லையா என்று கர்த்தர் கேட்கிறார்.
தானியேல் 1:15
பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது.
சங்கீதம் 144:12
அப்பொழுது எங்கள் குமாரர் இளமையில் ஓங்கிவளருகிற விருட்சங்களைப்போலவும், எங்கள் குமாரத்திகள் சித்திரந்தீர்ந்த அரமனைக் கற்களைப்போலவும் இருப்பார்கள்.
1 சாமுவேல் 16:12
ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தான்; அவன் சிவந்தமேனியும், அழகியகண்களும், நல்ல ரூபமுமுள்ளவனாயிருந்தான்; அப்பொழுது கர்த்தர்: இவன் தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்பண்ணு என்றார்.
நியாயாதிபதிகள் 16:17
தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என் தலையின் மேல் படவில்லை; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என் தலைசிரைக்கப்பட்டால், என் பலம் என்னை விட்டுப்போம்; அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்.
நியாயாதிபதிகள் 13:7
அவர் என்னை நோக்கி: இதோ, நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானது ஒன்றும் புசியாமலும் இரு; அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தன் மரணநாள் மட்டும் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான் என்று சொன்னார் என்றாள்.
நியாயாதிபதிகள் 13:5
நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான் என்றார்.
எண்ணாகமம் 6:2
நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கர்த்தருக்கென்று விரதம் பண்ணிக்கொண்டவர்களாயிருக்கும்படி நசரேய விரதமாகிய ஒரு விசேஷித்த பொருத்தனையைப் பண்ணினால்,
லுூக்கா 1:15
அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்.
Tags அவளுடைய நசரேயர் உறைந்த மழையைப்பார்க்கிலும் சுத்தமும் பாலைப்பார்க்கிலும் வெண்மையும் பவளத்தைப்பார்க்கிலும் சிவப்பும் இந்திரநீலத்தைப் பார்க்கிலும் மேனியுமாயிருந்தார்கள்
Lamentations 4:7 in Tamil Concordance Lamentations 4:7 in Tamil Interlinear Lamentations 4:7 in Tamil Image