Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 8:46 in Tamil

Home Bible John John 8 John 8:46

யோவான் 8:46
என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை.

Tamil Indian Revised Version
என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தமுடியும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருந்தும், நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கவில்லை.

Tamil Easy Reading Version
உங்களில் எவராவது ஒருவர் நான் பாவம் செய்தவன் என்று நிரூபிக்க இயலுமா? நான் சொல்வது உண்மையாக இருக்கும்போது என்னை ஏன் நம்பாமல் இருக்கிறீர்கள்?

Thiru Viviliam
என்னிடம் பாவம் உண்டு என்று உங்களுள் யாராவது என்மேல் குற்றம் சுமத்த முடியுமா? நான் உங்களிடம் உண்மையைக் கூறியும் நீங்கள் ஏன் என்னை நம்புவதில்லை?

John 8:45John 8John 8:47

King James Version (KJV)
Which of you convinceth me of sin? And if I say the truth, why do ye not believe me?

American Standard Version (ASV)
Which of you convicteth me of sin? If I say truth, why do ye not believe me?

Bible in Basic English (BBE)
Which of you is able truly to say that I am a sinner? If I say what is true, why have you no belief in me?

Darby English Bible (DBY)
Which of you convinces me of sin? If I speak truth, why do ye not believe me?

World English Bible (WEB)
Which of you convicts me of sin? If I tell the truth, why do you not believe me?

Young’s Literal Translation (YLT)
Who of you doth convict me of sin? and if I speak truth, wherefore do ye not believe me?

யோவான் John 8:46
என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை.
Which of you convinceth me of sin? And if I say the truth, why do ye not believe me?

τίςtistees
ἐξexayks
ὑμῶνhymōnyoo-MONE
ἐλέγχειelencheiay-LAYNG-hee
μεmemay
περὶperipay-REE
ἁμαρτίας;hamartiasa-mahr-TEE-as
εἰeiee
δὲdethay
ἀλήθειανalētheianah-LAY-thee-an
λέγω,legōLAY-goh
διατίdiatithee-ah-TEE
ὑμεῖςhymeisyoo-MEES
οὐouoo
πιστεύετέpisteuetepee-STAVE-ay-TAY
μοι;moimoo

Cross Reference

எபிரெயர் 4:15
நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.

யோவான் 14:30
இனி நான் உங்களுடனே அதிகமாய் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.

யோவான் 8:7
அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி,

மாற்கு 11:31
அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லையென்று கேட்பார்;

மத்தேயு 21:25
யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? யாரால் உண்டாயிற்று? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்;

1 பேதுரு 2:22
அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை;

எபிரெயர் 7:26
பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியர் நமக்கு ஏற்றவராயிருக்கிறார்.

2 கொரிந்தியர் 5:21
நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.

யோவான் 18:37
அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.

யோவான் 16:8
அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.

யோவான் 15:10
நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.


Tags என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும் நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை
John 8:46 in Tamil Concordance John 8:46 in Tamil Interlinear John 8:46 in Tamil Image