சகோதரரே, நான் உங்களுக்குப் புதிய கற்பனையை அல்ல, ஆதிமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கற்பனையையே எழுதுகிறேன்; அந்தப் பழைய கற்பனை நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிற வசனந்தானே.
மேலும், நான் புதிய கற்பனையையும் உங்களுக்கு எழுதுகிறேன், இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் மெய்யாயிருக்கிறது; ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது.
ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.
நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்.
இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.
நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.
| And the Lord | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
| God | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| said, | אֱלֹהִ֔ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| It is not | לֹא | lōʾ | loh |
| good | ט֛וֹב | ṭôb | tove |
| that the man | הֱי֥וֹת | hĕyôt | hay-YOTE |
| should be | הָֽאָדָ֖ם | hāʾādām | ha-ah-DAHM |
| alone; | לְבַדּ֑וֹ | lĕbaddô | leh-VA-doh |
| I will make | אֶֽעֱשֶׂהּ | ʾeʿĕśeh | EH-ay-seh |
| him an help meet | לּ֥וֹ | lô | loh |
| for him. | עֵ֖זֶר | ʿēzer | A-zer |
| כְּנֶגְדּֽוֹ׃ | kĕnegdô | keh-neɡ-DOH |