1 ⁽ஆண்டவர் கூறுவது இதுவே: “மோவாபு␢ எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக␢ நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை␢ மாற்றவே மாட்டேன்;␢ ஏனெனில், அவன்␢ ஏதோம் அரசனின் எலும்புகளைச்␢ சுட்டுச் சாம்பலாக்கினான்.⁾

2 ⁽ஆதலால், மோவாபின்மேல்␢ நெருப்பைக் கொட்டுவேன்.␢ அது கெரியோத்தின் கோட்டைகளை␢ விழுங்கிவிடும்;␢ இரைச்சல், கூச்சல், எக்காள முழக்கம்␢ ஆகியவை ஒருசேர எழும் வேளைகளில்␢ மோவாபு மடிந்திடுவான்.⁾

3 ⁽அந்நாட்டின் ஆட்சியாளனை␢ அவர்களிடையேயிருந்து␢ அகற்றிவிடுவேன்;␢ அவனோடு அதிகாரிகள்␢ அனைவரையும் அழித்து விடுவேன்”␢ என்கிறார் ஆண்டவர்.⁾

4 ⁽ஆண்டவர் கூறுவது இதுவே:␢ “யூதா எண்ணற்ற குற்றங்கள்␢ செய்ததற்காக␢ நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை␢ மாற்றவேமாட்டேன்;␢ ஏனெனில், அவர்கள்␢ ஆண்டவரின் திருச்சட்டத்தை␢ புறக்கணித்தார்கள்;␢ அவருடைய நியமங்களை␢ கடைப்பிடிக்கவில்லை;␢ அவர்களுடைய தந்தையர்␢ பின்பற்றிய பொய்த் தெய்வங்கள்␢ அவர்களையும் வஞ்சித்துவிட்டன.⁾

5 ⁽ஆதலால் யூதாவின்மேல்␢ நெருப்பைக் கொட்டுவேன்;␢ அது எருசலேமின் கோட்டைகளை␢ விழுங்கிவிடும்.”⁾

6 ⁽ஆண்டவர் கூறுவது இதுவே:␢ “இஸ்ரயேல் எண்ணற்ற குற்றங்கள்␢ செய்ததற்காக␢ நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை␢ மாற்றவே மாட்டேன்;␢ ஏனெனில், அவர்கள்␢ நேர்மையாளரை வெள்ளிக் காசுக்கும்␢ வறியவரை இரு காலணிக்கும்␢ விற்கின்றார்கள்.⁾

7 ⁽ஏழைகளின் தலைகளை மண்ணில்␢ புழுதிபட மிதிக்கின்றார்கள்;␢ ஒடுக்கப்பட்டோரின் நெறியைக்␢ கெடுக்கின்றார்கள்;␢ மகனும் தந்தையும்␢ ஒரே பெண்ணைக் கூடி,␢ என் திருப்பெயரைக்␢ களங்கப்படுத்துகின்றார்கள்.⁾

8 ⁽கடன்காரரிடமிருந்து␢ பறித்த ஆடைகளை␢ விரித்துப் போட்டு,␢ எல்லாப் பலிபீடங்களின் முன்பும்␢ கிடந்து கொண்டு␢ அபராதம் விதித்துக்␢ கிடைத்த மதுவினைத்␢ தங்கள் கடவுளின் இல்லத்தில்␢ குடிக்கின்றார்கள்.⁾

9 ⁽நானோ கேதுரு மரத்தின் உயரமும்␢ கருவாலி மரத்தின்␢ வலிமையும் கொண்ட எமோரியரை␢ அவர்கள் முன்பாக அழித்துவிட்டேன்;␢ மேலே அவர்களுடைய கனிகளையும்,␢ கீழே அவர்களுடைய வேர்களையும்␢ அழித்துவிட்டேன்;⁾

10 ⁽மேலும், எகிப்து நாட்டிலிருந்து␢ உங்களை அழைத்து வந்து,␢ நாற்பது ஆண்டுகள்␢ பாலைநிலத்தில் உங்களை வழிநடத்தி,␢ எமோரியர் நாட்டை நீங்கள்␢ உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளச்␢ செய்தேன்.⁾

11 ⁽உங்கள் புதல்வர்களுள் சிலரை␢ இறைவாக்கினராய் உயர்த்தினேன்;␢ உங்கள் இளைஞர்களுள் சிலரை␢ நாசீர்களாய்த் தேர்ந்துகொண்டேன்;␢ இஸ்ரயேல் மக்களே,␢ இது உண்மையன்றோ?”␢ என்கிறார் ஆண்டவர்.⁾

12 ⁽ஆனால், நீங்கள் நாசீர்களை␢ மது அருந்தச் செய்தீர்கள்;␢ இறைவாக்கினருக்கு␢ “இறைவாக்கு உரைக்கக்கூடாது”␢ என்று கட்டளையிட்டீர்கள்.⁾

13 ⁽வைக்கோல் பொதி நிறைந்த வண்டி␢ அழுந்துவது போல, உங்களையும்␢ நீங்கள் இருக்கும் இடத்திலேயே␢ அழுத்துவேன்.⁾

14 ⁽விரைந்தோடுகிறவனும் தப்ப முடியாது;␢ வலிமையுள்ளவனும்␢ தன் வலிமையை இழந்து விடுவான்;␢ வீரனாலும் தன்னுயிரைக்␢ காத்துக் கொள்ள முடியாது.⁾

15 ⁽வில்லேந்தும் வீரன்␢ எதிர்த்து நிற்கமாட்டான்.␢ விரைந்தோடுபவனும்␢ தன்னைக் காப்பாற்றிக்␢ கொள்ளமாட்டான்,␢ குதிரை வீரனாலும் தன்னுயிரைக்␢ காத்துக்கொள்ள முடியாது.⁾

16 ⁽அந்நாளில் வலிமை மிக்கவர்களுள்␢ நெஞ்சுரம் கொண்டவன்கூடப்␢ படைக்கலன்களைத் தூக்கி எறிந்து விட்டு␢ ஓடுவான் என்கிறார் ஆண்டவர்.⁾