அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன்.
புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யாரென்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங் கண்டேன்.
வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின் கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது.
ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன்.
அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.
அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக்கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.
அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.
அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாக வணக்கமாய் விழுந்து:
தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,
எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோமென்று புதிய பாட்டைப் பாடினார்கள்.
பின்னும் நான் பார்த்தாவது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது.
அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்.
அதற்கு நான்கு ஜீவன்களும் ஆமென் என்று சொல்லின. இருபத்து நான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.
| And | καὶ | kai | kay |
| every | πᾶν | pan | pahn |
| creature | κτίσμα | ktisma | k-TEE-sma |
| which | ὃ | ho | oh |
| is | ἐστιν | estin | ay-steen |
| in | ἐν | en | ane |
| τῷ | tō | toh | |
| heaven, | οὐρανῷ | ouranō | oo-ra-NOH |
| and | καὶ | kai | kay |
| on | ἐν | en | ane |
| the | τῇ | tē | tay |
| earth, | γῇ, | gē | gay |
| and | καὶ | kai | kay |
| under | ὑποκάτω | hypokatō | yoo-poh-KA-toh |
| the | τῆς | tēs | tase |
| earth, | γῆς | gēs | gase |
| and | καὶ | kai | kay |
| such as | ἐπὶ | epi | ay-PEE |
| are | τῆς | tēs | tase |
| in | θαλάσσης | thalassēs | tha-LAHS-sase |
| the | ἅ | ha | a |
| sea, | ἐστίν | estin | ay-STEEN |
| and | καὶ | kai | kay |
| all | τὰ | ta | ta |
| that | ἐν | en | ane |
| are in | αὐτοῖς | autois | af-TOOS |
| them, | πάντα | panta | PAHN-ta |
| heard I | ἤκουσα | ēkousa | A-koo-sa |
| saying, | λέγοντας | legontas | LAY-gone-tahs |
| Τῷ | tō | toh | |
| Blessing, | καθημένῳ | kathēmenō | ka-thay-MAY-noh |
| and | ἐπὶ | epi | ay-PEE |
| τοῦ | tou | too | |
| honour, | θρόνοῦ | thronou | THROH-NOO |
| and | καὶ | kai | kay |
| τῷ | tō | toh | |
| glory, | ἀρνίῳ | arniō | ar-NEE-oh |
| and | ἡ | hē | ay |
| εὐλογία | eulogia | ave-loh-GEE-ah | |
| power, | καὶ | kai | kay |
| be unto him that | ἡ | hē | ay |
| sitteth | τιμὴ | timē | tee-MAY |
| upon | καὶ | kai | kay |
| the | ἡ | hē | ay |
| throne, | δόξα | doxa | THOH-ksa |
| and | καὶ | kai | kay |
| unto the | τὸ | to | toh |
| Lamb | κράτος | kratos | KRA-tose |
| for | εἰς | eis | ees |
| τοὺς | tous | toos | |
| ever | αἰῶνας | aiōnas | ay-OH-nahs |
| and | τῶν | tōn | tone |
| ever. | αἰώνων | aiōnōn | ay-OH-none |